வேதை என்பது வேதித்தல். அதாவது துன்பம் தருவது எனப் பொருள்படும். வேதைகளில் விபரீத வேதை, புடவேதை, சமூகவேதை ஆகியவற்றினைப் பற்றிக் காண்போம்.
விபரீத வேதை
கோசர வேதையில் ஒன்று, அது சந்திர லக்கினத்திற்கு ஐந்து, ஒன்பது, நான்கு, பன்னிரண்டு ஆகியவைகளில் சூரியன் இருக்கப் பதினொன்று, மூன்று, பத்து, ஆறு ஆகியவைகளில் வேறு கிரகம் இருப்பதாகும். சந்திர லக்கினத்துக்கு 5, 6, 4, 12 ல் சூரியன் இருக்க, முறையே 11, 3, 1, 6, ல் வேறு கிரகம் இருந்தால் சூரியன் நல்ல பலனைக் கொடுப்பான். இவ்வாறே மற்றக் கிரகங்களுக்கும் கோசார விபரீத வேதை பார்த்துக் கொள்ளவும். சூரியனும், செவ்வாயும் முற்பங்கிலும், குருவும், சுக்கிரனும் நடுபங்கிலும், சனியும், சந்திரனும் கடைப்பங்கிலும், புதனும், பாம்புகளும் எப்போதும் பலன் தருவார்கள்.
புட வேதை
6 இராசியும், 10 பாகையும் வைத்து இது ஆதித்யன் முதலான கிரகங்களின் புடங்களைக் கூட்டி நின்றது வேதைப் புடமாம். இவ்விடத்துச் சந்திரனை ஒழித்துக் கொள்ளப்படும். இந்த வேதைப் புடத்தை நாட் பார்க்கும் படியே பார்த்துக் கண்ட நாள் தான் கருதிய நாளாகில், அந்நாள் புடவேதை என்று தவிரப்படும். (விதான மாலை.)
சமூக வேதை
சனி சேய் நின்ற நட்சத்திரத்துக்கு நாலு, ஒன்பது, பத்து, பதினொன்று, இருபத்து மூன்று, இருபத்து நாலு, இருபத்தைந்து, இருபத்தேழாவது நட்சத்திரங்களாகும்.