அமாவாசையைத் தாண்டுமா?
உ. தாமரைச்செல்வி
நோய் வாய்ப்பட்டிருப்பவர்கள் அமாவாசையைத் தாண்டுவார்களா என்று எதை வைத்துக் கூறுகின்றனர்?
அமாவாசையை நாம் அறிவியல் பூர்வமாகவேப் பார்க்கலாம். ஆத்மகாரகன் சூரியன். ஆத்மா என்பது உயிர். உடலுக்குரியவன் சந்திரன். சூரியனும், சந்திரனும் இணைவது அமாவாசை அன்று. இரண்டுமே இயல்புநிலை மாறுபட்டவை. அவைகள் ஒன்றாகச் சேரும் போது சீக்கிரமாகவே ஆவி பிரியும். அதனால்தான் அமாவாசை, அதற்கு முதல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதற்குக் காரணம், ஆத்மகாரகன் சூரியனுடன், மனோகாரகன், உடலுக்கான சந்திரன் நெருங்கும் போது உடலின் வலிமை, உணவு உட்கொள்ளும் திறன் குறையும். ஏதோ ஒரு அசெளகரியம் உண்டாகும். திடீர் மாரடைப்பு எல்லாம் உண்டாகும். அதனால்தான் அமாவாசையைத் தாண்டுமா என்று சொல்கிறார்கள். சில நேரங்களில் அமாவாசை எல்லாம் தாண்டி, கடைசி நேரத்தில் உயிரிழப்புகள் நேர்ந்துவிடும்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.