இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

பெயரின் மூன்றாம் எழுத்தும் குணநலன்களும்

உ. தாமரைச்செல்வி


ஜப்பான் நாட்டில் மூன்றாம் எண் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒருவரது பெயரில் மூன்றாவதாக வரும் எழுத்திற்கும் அவரது குணத்திற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

ஒருவரது பெயரின் மூன்றாவது எழுததைக் கொண்டு அவர்களுக்கு என்ன குணங்களெல்லாம் இருக்கும் என்பதை அறியலாம் வாங்க...

A - அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி மற்றும் பேராராட்டக் குணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சூழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவேக் கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.

B - மற்றவர்கள் பார்த்துப் பெருமைப்படும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் உணர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. மனிதர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

C - அப்பாவியானவர்கள். அதே நேரத்தில், அதிகத் திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாகப் பழகிவிடுவார்கள். சமூகத்தில் இவர்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் இவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால், காயப்படுத்தியவரைப் பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களைத் தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவிக் குணங்கள். இதே போல் பேச்சில் இவர்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்கவிருப்பது குறித்து இவர்களுக்கு அவ்வப்போது ஒரு உள்ளுணர்வு வரலாம்.

D - அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பார்கள். எடுத்த இடத்தில் எடுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது இவர்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தத்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள். இதனாலேயேப் பல இடங்களில் தலைமைப் பொறுப்பு இவர்களுக்குக் கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் இவர்கள் பிடிவாதமாக விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.

E - மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவேக் கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிகக் கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் பேச்சில் அசந்து போவார்கள். ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாதவர்களாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு.

F - மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் இவர்கள் இயற்கையாகவேத் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். ஆனால், இவர்களிடமிருக்கும் குழந்தைத்தனமும், வஞ்சமான எண்ணமும்தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

G - இவர்கள் புதிதான விஷயங்களைச் செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். இவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே இவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாகச் சிந்திப்பவருமாக இருப்பார்கள். இவர்கள், ஒருவர் சொல்வது உண்மையா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள்.

H - இவர்கள் பொதுவாக அதிக அனுபவ அறிவு உடையவர்கள். மேலும், இவர்களிடம் சற்று மூர்க்கக் குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும். பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால், இவர்கள் உறவுகளில் சற்று பின் தங்கிய நிலையிலேயே இருப்பார்கள். இதே போல் அதிகச் சுயநலம் மிக்கவராகவும் இருப்பார்கள்.


I - புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்தப் பின்புதான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவர்களது இயற்கைக் குணம். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்றுக் குறைவு தான். இவர்களின் மோசமான குணம், அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.

J - இவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து, அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாகக் காணப்படும். வாழ்க்கைத் துணையைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

K - பொது இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்க்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சனை ஏற்பட்டால், அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவர்களாகத் தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பர். தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பர்.

L - தங்களது வாழ்க்கையையும், சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கைத் துணைதான். இவர்களுக்கு நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.

M - உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல், இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்களுக்கு மற்றவர்களிடம் சென்று உதவி கேட்கப் பிடிக்காது. எதுவாக இருந்தாலும் தானாவேச் செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமையை ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.

N - எதைச் செய்தாலும் சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள். மேலும், இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தைக் கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டுக் கூட்டத்தில் தனியாகத் தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.

O - மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.

P - பெரும்பாலும் அனைத்திலும் தாங்களே முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால், சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புவார்கள். ஆனால், இவர்கள் சற்று சுயநல சிந்தினை உடையவர்கள். அதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகளும் இவர்களிடம் இருக்கும்.

Q - தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ நினைப்பவர்கள். இவர்கள் நட்பாகப் பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால், இவர்கள் வேறு பாதையில் செல்ல விரும்புவார்கள். இவர்களுக்குக் கூச்சச் சுபாவமும் இருக்கும்.

R - நல்ல ஞானம் உடையவர்கள். அதே நேரத்தில், இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் துன்பங்களைப் போக்குபவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால், இவர்களிடம் முன்கோபம் அதிகமாக இருக்கும்.

S - அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்களைக் கவனிக்க வைக்கும். இவர்கள் பணக்காரர்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.


T - இராஜதந்திரமுடையவர்களாக இருப்பார்கள். இருவருக்கிடையேப் பிரச்னை ஏற்பட்டால், அதைத் தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர்கள் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழமையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

U - இவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் நல்ல வசதியுடன் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை, எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெளிவாகத் தெரியும். புதிய புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்குச் செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்க மாட்டார்கள்.

V - உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களிடம் அதிக நினைவுத்திறன் இருக்கும். சின்ன செயலையும் அதிக நாட்கள் நினைவில் வைத்திருப்பார்கள். உறவினர்களிடம் நெருக்கமாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்வார்கள்.

W - பெரும்பாலும் மனத்தள்ளாட்டத்துடனேயேக் காணப்படுவார்கள். இவர்களுக்கு தான் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டோமோ அல்லது மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எனவே மன அமைதியின்றி இருப்பார்கள்.

X - எப்பொழுதும் தனித்திருக்கவே விரும்புவார்கள். எதிலும் ஒட்டி உறவாட விரும்பமாட்டார்கள்.


Y - இவர்கள் கவனமுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். இவர்களது சொந்த இடத்தில் இருக்கத்தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.

Z - இவர்களுக்கு உடலில் அதிக பலமும், தன்னம்பிக்கையும் அதிகமிருக்கும். இவர்கள் இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாகக் கவனிக்கப்படுவார். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p98.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License