இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


27. சந்திர பலன்கள்


ஜோதிடத்தில் முக்கியமான இடத்தில் பங்கு வகிப்பவர் சந்திரன். பலன்கள் யாவும் தினசரிக் கோளான சந்திரனின் நிலையை வைத்தேத் தீர்மானிக்கப் பெறுகின்றது. தாரா பலன்கள் உள்ளிட்ட யாவும் இந்தக் கோளின் கோட்சார நிலையை பிரதானமாகக் கொண்டு அமைகின்றன.

மாதுர்காரகன். (அம்மா) உடல் நிலை, உடல் அமைப்பு, புத்தி நிலையைத் தீர்மானிப்பவன். அது மட்டும் இல்லாமல், பொதுவாக ஒவ்வொரு கோள்களுக்குமேப் பல ஜோதிடப் பெயர்கள் காணப் பெறுகின்றன. பழைய தமிழ், வட மொழி இலக்கிய நுால்களில் இவற்றின் பெயர்கள் பதிவாகி உள்ளன. மிகுந்த நூலறிவு மிகவும் அவசியம்.

கோட்சார நிலையில் எவ்விதம் அனைத்துக் கிரகங்களின் நிலையையும் நாம் நட்சத்திர சாரங்களின் வழி கணக்கிட்டு அதன் பலனைக் காண்கின்றோமோ, அது போலவே இதனை முதலில் கணக்கினில் கொள்ள வேண்டும். ஏன் எனில் யாவும் சந்திரனின் நிலையையும் அனுசரித்தேப் பலன்கள் யாவும் ஒட்டு மொத்தமாகத் தருகின்றன.

இங்கும் திசை, புத்தி, அந்தரம், சூட்சுமம் உள்ளிட்ட யாவையும் பொறுத்துத்தான் அவற்றில் சஞ்சார நிலை கொண்டுதான் அவை யாவும் பலன் தந்து பயணிக்கும். சந்திரனின் நிலை மட்டும் நன்றாக இருந்தால் போதாது. சுபக்கிரகங்கள் நிலை, அசுபக் கிரகங்கள் நிலை இவை யாவற்றையும் மீண்டும் நட்பு, பகை, ஆட்சி, உச்சம், நீசம், பார்வை உள்ளிட்ட யாவற்றையும் கணக்கினில் கொண்டுதான் இங்கும் பலன் சொல்ல வேண்டும்.


விளையாடுவதற்கு இது விளையாட்டுக் கலை அல்ல. பயபக்தியும், இறைநம்பிக்கையும் மிக அவசியம். கடவுளின் மேல் கொண்ட நம்பிக்கையினைச் சாதகம் பார்ப்பவன் சோதிடரின் மேல் வைக்கின்றான். கடவுளை நம்புவதைப் போல் எண்ணுகின்றான். அவர்களது வலி நிவாரணியாக எண்ணுகின்றான். உரிய சோதிடனை அணுகும் போதுதான் அவர்களுக்கும் கர்மவினை, சரியான சோதிடப்பலன், பரிகாரம் சாந்தி உள்ளிட்ட யாவும் கிடைக்கும்.

மனதின்காரகன், உடல் அமைப்பு, அங்க அழகினைத் தீர்மானிப்பவன் சந்திரன். எந்த வீட்டில் சாதகத்தில் உள்ளதோ அந்த வீடு இலக்னத்திற்கு எது என்றும் பார்க்க வேண்டும். 6, 8, 12 நன்மை தராது. அதுவே ஆட்சி, நீச பங்கம், குரு சகிதம், சுபர் சேர்க்கை, பார்வை பெறின் நன்மை.

நாம் பல நிலைகளிலும் சோதிடத்தின் அனைத்து வீடுகளையும் அலசி ஆராய்தல் நன்மை தரும். அவ்வளவு எளிதில் பலன்களை காண இயலாது. 1 - 6 வீடுகள் கண்ணிற்குத் தெரியும். மேல் பாகம். 7 - 12 கண்டறிய முடியாத சிரமமான மறைத்து இரகசியமாய் வைக்கப் பெற்ற வீட்டின் பலன்கள். அதை அறிந்து உணர்ந்து சொல்பவர் சிலரே.

சந்திரன் மட்டும் நல்ல நிலையில் இருந்தால் பலன் கிடைக்கும் என எண்ணி விடவும் முடியாது. மற்றவை யாவும் அதற்கு சகிதமாய்ச் செல்ல வேண்டும்.

நட்சத்திரங்களிலும் கோள்கள் பரிவர்த்தனையைக் காணலாம். எப்படி வீடுகளில் கிரகங்கள் மாறி நின்று பரிவர்த்தனை கொள்கின்றதோ, அதைப் போல நட்சத்திரங்களில் கிரகப் பயணங்களில் பரிவர்த்தனைப் பலனைக் கண் கூடாகக் காணலாம்.

சில நேரங்களில் எல்லாம் சிறப்பாக சரியாக நற்பலன்கள் தரும் அமைப்பு இருந்தும், கிரக சோதனையைத் தந்து விட்டு நம்மை ஏமாற்றி விளையாடி விட்டு பின்னர் உரிய காலம் தளர்த்தி மாற்றித் தரும். இதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

எனவேதான், எந்தக் கிரகத்தையும் நாம் நன்மை செய்வன என்று எண்ணியோ அல்லது தீமை செய்வன என எண்ணி ஒதுக்கி விடவோ முடியாது. அங்கும் பல விளையாட்டுச் சோதனைகள் உண்டு. தீயக்கிரகங்கள் மிகுந்த நன்மையைச் சிலருக்குச் செய்வதையும், சுபகிரகங்கள் சிலருக்குத் தீமை செய்வதையும் எண்ணும் போதும், அவரவர் உணரும் போதும் புரியும். சிலர் புலம்புவர் சுக்கிரன் திசை எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை. சனி திசை எல்லாம் துன்பமாக வரும் என்று பலரும் பொதுவாக எதையாவது எல்லாம் தெரிந்ததைப் போல் உளறிக் கொண்டிருப்பர்.

மீண்டும் சொல்கின்றேன். தேர்ந்த சோதிடன் நிதானித்தேப் பலன் கூறுவான். அதையும் பலர் மறுப்பர். எப்படி எனில், அந்த சோதிடர் எனக்கு நல்லது நடக்கும் என்றார் என்பர். நாம் ஒரு விஷயத்தை நினைவினில் கொள்ள வேண்டும். சோதிடரைக் குறை கூறுவதற்கில்லை.

அவரும் ஒரு சாமான்ய மனிதரே. சோதிட விதிகள் அறிந்து நல்வழி காட்டுவர். எந்த ஒரு கலையையும் யாரும் தனது சுய நலத்திற்காக தீவினைக்காகப் பயன்படுத்துவர் எனில், அந்தக் கலை அவர்களை விட்டு விலகி விடும். யாவும் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது.


நமது விருப்பத்திற்காகப் பலனை வேண்டியவர் என்று கூட்டியோ, குறைத்தோச் சொல்லக் கூடாது. உள்ளது உள்ளபடியே சாதகன் மனநிலை ஏற்கும் பக்குவம் உள்ள திசை செல்கின்றதா என்பதை அறிந்து மெதுவாகப் பலன்களை உரிய வழி முறைப் பரிகாரத்துடன் முறையாய்ச் செய்யச் சொல்ல வேண்டும்.

அதுவும் கூட, அந்த விதி அமைப்பு உடைய உரியவர்களுக்குத்தான் பரிகாரம் சொல்ல முடியும். அதுவும் சிலருக்குத்தான் பரிகாரம் செய்யும் பாக்கியமும் கிடைக்கும்.

சிலர் சோதிடருன் வாதிடுவர். ஏன் சண்டை செய்வதும் கூட உண்டு. எனவே அந்தச் சோதிடர் அந்த இலக்னம், இராசி சொன்னார். நீங்கள் தவறாக சொல்கின்றீர் என்பர். இங்கு சாதகர் பார்ப்பவர்களையும் நாம் குறை சொல்வதற்கு இல்லை.

மறைத்து வைக்கப் பெற்ற இந்த தெய்வீகக் கலையில், தவறில்லாமல், குறையில்லாமல் கணித்து, அதன் வழி சரியான பலன் சொல்பவர் சாதகர் பார்ப்பவருக்குக் கிடைப்பதே அவர்கள் செய்த பூர்வ புண்ணியம். இதை எப்படி உணர முடியும்?

காலதாமதங்கள் பல ஆகி ஒரு சிறந்த சோதிடரை இறை ஆசியுடன் நாம் சந்திக்கின்ற போது, நமக்கு உள்ள குறைகள் யாவும் படிப்படியாய் தீரும். அப்போதுதான் அதனை உணர முடியும். அந்தச் சோதிடர் மட்டும்தான் உண்மையைச் சொன்னார் என அவர் தம் பலன்களை அனுபவிக்கும் போதுதான் அதை உணர்வார்.

மனித மனம் ஆசாபாசங்களுக்குக் கட்டுப்பட்டது. ஒருவருக்கு லாட்டரியில் பணம் விழுகின்றது என்றால் மகிழ்வுடன் அந்தச் சொல்லை அவன் ஏற்பான். கிடைத்தால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், விபத்தில் பண விரயம், பொருள் விரயம், உடல் அழிவு என்பதை எவரது மனமும் எப்படி நாசூக்காகச் சொன்னாலும், அவர்கள் வாய் வைத்துச் சொன்னமையால் என்றோ, உடனே கரித்துக் கொட்டுபவர் பலர் உள்ளதை நாம் காணலாம்.

சாதகர் பார்ப்பவருக்கு ஏற்கும் மனம் பொறுமை மிக மிக அவசியம். சோதிடர் கடை ஏதும் வைத்திருக்கவில்லை. எந்த நற்பலனையோ, தீயபலனையோ விலைக்கோ, இலவசமாகவோ கொடுப்பதற்கு, அவர் கணிப்பில் உள்ளதைச் சொல்லுவார் அவ்வளவே. அதை விடுத்து அவரைச் சண்டைக்கு வலிய இழுத்து முச்சந்தியில் பேசுவதற்கு அவர் பலியாடும் அல்ல.

மேலும், அவருக்குப் பொதுவாகக் கெடுதல் தீங்கு நினைக்கின்ற போதும், கோள்களின் ஆசியிலும், பலரது ஆசியிலும், அதே சமயத்தினில் கிரகங்களை உணர்ந்து பலன், பரிகாரம் அவர் சொல்வதால் சில கிரக சோதனைகளுக்கும் மற்றவர்களால் சோதிடர்கள் ஆட்படுவர்.

எனவேதான், உரிய தட்சணையுடன் சோதிடம் பார்த்தல் பார்ப்பவருக்கும், பலன் பெறுபவருக்கும் மிகுந்த நன்மையைத் தரும். சோதிட வருமானத்தில் நான்கில் ஒரு பாகம் ஆலய கைங்கர்யங்கள், இரண்டாம் பாகம் அனாதை இல்லங்கள் உள்ளிட்டவை, 3, 4 ஆம் பாகம் அவருக்கு உரியன.


பலர் சாதகர் பார்ப்பவர் சோதிடருக்கு உரிய சன்மானம் தராமல் பார்த்துச் செல்வர். எப்படிப் பலிதம் கிடைக்கும்? இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால் அக்காலக் கட்டத்தில் சோதிடருக்கு உரிய சலுகைகள், சன்மானங்கள், வேண்டிய உணவு, காய்கறி, தானிய வகைகள் யாவற்றையும் இலவசமாக கொடையாக தானமாகத் தந்தனர். ஆனால், இப்போதெல்லாம் அப்படி யாரும் செய்வதில்லை. இதைப் பற்றி இன்னும் எவ்வளவோ பேசலாம். தேவையில்லை.

ஒருவரது சாதகத்தில் வளர்பிறைச் சந்திரன் எனில் மிகுந்த நன்மையையும், தேய்பிறைச் சந்திரன் எனில் மிகுந்த தீமையையும் செய்து விடுகின்றது. எனவே நமது சாதகத்தில் சந்திரன் நிலையினை மிக அவசியம் கவனித்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு முன்னேற்றமாய்ச் சென்றாலும், தேய்பிறைச் சந்திரன் எனில் பரமபதப் பாம்பு விளையாட்டாய் ஆகி கீழேத் தள்ளி விடும். இதுவே வளர்சந்திரன் எனில் அதிகத் துன்பம் தராமல் மேல் நோக்கி மேலும் மேலும் வளர்த்துச் செல்லும்.

எது எப்படியாக இருந்தாலும் நேர்மை, சத்தியத்தின் வழி நிற்பவர் மிகுந்த பல சோதனைகள் வரினும் நன்மை பெறுவர். கிரகங்கள் வழி விட்டு வாழ்த்தி நன்மை செய்யும். அதைப் பொறுத்துத்தான் பலன்கள் சிறப்பாய் அமையும். முதலில் சுபர்கள் நிலை எவ்விதம் அமைந்துள்ளது? எனக் காண வேண்டும். தேய்பிறைச் சந்திரன் எனில், தேய்பிறைச் சதுர்த்தி விநாயகர் வழிபாடு, அஷ்டமி பைரவர் வழிபாடு, சித்திரகுப்தர் வழிபாடு உடனடியாகச் சிறந்த நல் தீர்வுகளைச் செய்யும் நன்மை பெறுவீர்.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/serial/p27.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License