இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


5. நவக்கிரகங்களின் செயல்பாடுகள்


சூரியன் முதலான ஒன்பது கோள்களுக்கும் காரகத்துவங்கள் உள்ளன. இது பற்றி சோதிட நுால்கள் பல தெரிவிக்கின்றன. இருப்பினும், சில அடிப்படையான இன்றியாமையாதனவற்றை நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றின் செயல்பாடுகள், பலன்கள் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள இயலும்.

கோள்களின் வர்க்கோத்தமம் பலன்கள்

வர்க்கோத்தமம் இராசிகளும் வர்க்கோத்தமமும்

சர ராசிக்கு முதல் நவாம்சையும், ஸ்திர ராசிக்கு ஐந்தாவது நவாம்சையும், உபய ராசிக்கு ஒன்பதாவது நவாம்சையும் வர்க்கோத்தமம் ஆகும். உதாரணமாக, மேட ராசிக்கு முதல் நவாம்சம் மேடம், ரிடபத்துக்கு ஐந்தாவது நவாம்சம் ரிடபமே, மிதுனத்திற்கு ஒன்பதாவது நவாம்சம் மிதுனமே. இரண்டும் ஒரே ராசியாக வருவதால் வர்க்கோத்தமம் ஆகின்றது. இவ்வாறே மற்ற இராசிகளுக்கும் அறியலாம்.

வர்க்கோத்தமம் பெறும் நட்சத்திர பாதம், இராசிகள்

அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்துக்கு மேடமும், ரோகிணி நட்சத்திரம் 2 ஆம் பாதத்துக்கு ரிடபமும், புனர்பூசம் 3, 4 ஆம் பாதங்களுக்கு முறையே மிதுனம், கடகமும், பூரம் முதல் பாதத்துக்கு சிம்மமும், சித்திரை 2, 3 ஆம் பாதங்களுக்கு முறையே கன்னி, துலாமும், உத்திராடம் 1, 2 ஆம் பாதங்களுக்கு முறையே தனுசு, மகரமும், சதயம் பாதத்திற்கு கும்பமும், ரேவதி 4 ஆம் பாதத்திற்கு மீனமும் வர்க்கோத்தமம் பெறும் இராசிகளாகும்.


கிரகமும் வர்க்கோத்தமும்

ஒரு கிரகம் இராசிச்சக்கரத்திலும், நவாம்சச்சக்கரத்திலும் ஒரே இராசியில் இருக்க நேர்ந்தாலும் வர்க்கோத்தமம் பெற்றுள்ளது. இந்த நிலை பெற்ற கிரகம் தான் இருக்கும் இடம் பொறுத்து நல்ல பலனை அளிக்கும் என்று தெரிவிக்கின்றார்.

இராசிச்சக்கரத்தில் கிரகங்கள் நிற்பது போல நவாமிசச்சக்கரத்ததிலும் கிரகங்கள் அதே இடத்தில் இருப்பதாகும். அவ்விதம் இருந்தால் வர்க்கோத்தமம் பெற்றுள்ளது என்று பொருள்.

வர்க்கோத்தமம் அடைந்த கிரகத்திற்கு ஒரு கிரகம் ஆட்சி பலம் பெற்றால் என்ன பலம் பெறுமோ அந்த அளவு பலம் உண்டாகும். அதன் படி அவர்கள் பலன் தருவார்கள்.

கோள்களின் வக்ர பலன்கள்

சூரியன், சந்திரன், இராகு, கேது இவர்கட்கு வக்ரகதி கிடையாது. மற்ற கோள்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய இவர்கட்கு வக்ரகதி உண்டு.

பன்னிரு இராசி வீடுகளில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய இவர்கள் சாதகரின் இலக்னம், இடம், ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம், பார்வை முதலான பல நிலைகளின் வழி தான் நின்ற இடத்தின் வழி வக்கிர நிலையிலும் பலன் தருவார்கள்.

பிறந்த சாதகத்தில் வக்ரமாயினும், கோட்சாரத்தில் வக்ரமாயினும் அப்போதும் பலன்கள் தரும். சுபர் ஆயின் தொல்லைகளை வரவழைத்துப் பின்னர் நிவர்த்தியாகும் போது நன்மையும், அசுபராயின் மிக மோசமான நிலையினையும் தரும்.

அகராதி தரும் செய்தி

வக்கிரம் - மீள மடங்குதல், மீளுதல், பின் திரும்புதல், இவை கிரக நடையில் ஒன்று.

வக்கிரன் - சனி, செவ்வாய், குரூரன்.

வக்கிராஸ்தமனம், வக்கிராத்தமனம் - கிரகங்கள், வக்கிரத்தோடு அஸ்தமனம் அடைதல்.

வக்கிரித்தல் - திரும்புதல், கிரக நடையில் ஒன்று.

வக்கிரோதயம் - கிரகங்கள் திரும்புதலோடு உதித்தல்.

அதிசாரம் - கிரக நடை. கிரக நடையில் ஒன்று.

அதிசார வக்கிரகம் - அதிசாரத்தில் வரும் வக்கிர கதி.

அதிசார வக்கிரம் - கிரக வக்கிரத்துள் ஒன்று.

சனி, செவ்வாய், குரு வக்ரம்

இம்மூவருக்கும் 5ல் சூரியன் வந்தால் வக்கிரம். 7 ல் வந்தால் அதிவக்ரம். 9 ல் வரும் போது வக்கிரம் நிவர்த்தியாகின்றது. சனி ஓராண்டில் சுமார் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரையிலும், செவ்வாய் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறையும், குரு ஆண்டு தோறும் 3 மாதங்கள் வரையிலும் வக்கிர கதியில் இருக்கும்.

வக்ரகதி இல்லை

சூரியன், சந்திரன், இராகு, கேது இந்த கிரகங்கள் எப்போதம் வக்கிரகதி அடைவதில்லை.

வக்ர நிலையில் குரு திசை

குரு தன் திசை நடக்கும் போது வக்ரகதி அடைய நேர்ந்தால் பெரும் யோகம் அளிக்கும். செல்வம் பெருகும். மனைவி மக்களால் சுகம். காரிய வெற்றி. உயர்ந்தோர் ஆதரவு கிடைக்கும்.

வக்ர கதியில் பலன்

ஒரு கிரகம் வக்கிர கதி அடையும் போது வலிமை பெறுகின்றது. ஒரு இராசியில் ஒரு கிரகம் வக்கிரகதி அடைந்து விட்டால் தான் வழங்க வேண்டிய இயல்பான பலன்களை அதிக அளவில் வழங்கி விடும். தீயதானால் கொடுமை அதிகம் செய்யும். நல்ல ஸ்தானமானால் நல்லது அதிகம் நடக்கும்.

அதிசாரம்

அதிசாரம் என்றால் ஒரு கிரகம் தான் இருக்கும் இராசியில் இருந்து முன் இராசிக்குச் சென்று பிறகு மீண்டும் அதே இராசிக்குத் திரும்புவது அதிசார ஓட்டம் என்பர். இந்த நிலை குருவைத் தவிர வேறு கிரகத்திற்குக் கிடையாது என்று தெரிவிக்கின்றார்.

அதிசார வக்ர பலன்கள்

அதிசார வக்கிரங்களில் மிகவும் வலிமை பெற்று நற்பலன்களை வழங்கும். சுபகிரகங்கள் பலம் குன்றி நற்பலன்களை அளிக்க மாட்டார்கள். யோகமளிக்க வேண்டியிருந்தாலும் பாழ்படும் என்றும் இந்நுால் தெரிவிக்கின்றது என்று தெரிவிக்கின்றார்.

வக்கிரமும், அதிசாரமும்

வக்கிரம் என்பது கிரகங்கள் தானிருக்கும் இராசியிலிருந்து பின் செல்லுதல். அதிசாரம் என்பது தான் இருக்கும் இராசியில் இருந்து முன் செல்லுதல். எல்லா கிரகங்களும் வக்ரகதியிலும், அதிசாரத்திலும் தான் நிற்கும் ஸ்தானத்தின் பலனைத் தருவர். ஆனால் குரு மட்டும் தான் முன் நின்ற ஸ்தானத்தின் பலனைத் தருவார்.

அதிசாரமும் ஸ்தம்பனமும்

ஒவ்வாரு கிரகமும் ஒவ்வொரு இராசியில் இவ்வளவு நாட்கள் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற வரையறையை மீறி விரைவில் பயணம் செய்து அடுத்த இராசிக்கு மாறினால் அதிசாரம் என்பர். அப்படியில்லாமல் மிகவும் தாமதமாகச் பயணம் செய்து குறிப்பிட்ட நாட்களுக்கு மேலாகவும் ஒரு இராசியில் இருந்தால் ஸ்தம்பனம் என்பர்.

உதாரணம் சனி ஒரு இராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் இரண்டரை வருடம் ஆகும். ஆனால் இரண்டாவது ஆண்டிலேயே ஒரு இராசியிலிருந்து அடுத்த இராசிக்கு மாறி விட்டால் அல்லது கடந்து விட்டால் சனி அதிசாரத்தில் உள்ளது என்றும், அவ்வாறில்லாமல் மூன்றாண்டு காலம் வரையில் ஒரு இராசியில் பயணம் செய்தால் அப்போது சனி ஸ்தம்பனமாக இருக்கின்றது என்றும் கூறுவர்.

ஒரு கிரகம் அதிசாரம் அடைந்தால் அக்கிரகத்திற்கு வக்கிரபலம் உண்டாகும். அது போலவே ஒரு கிரகம் ஸ்தம்பனம் அடைந்தால் அக்கிரகத்திற்கு அதிசாரபலம் உணடாகும் என்பது சோதிட சித்தாந்தம்.

சூரியனுக்கு அருகில் செல்லும் மற்ற கிரகங்களின் கதி

சூரியனுக்கு 5, 6 ல் மற்ற கிரகங்களின் கதி – வக்ரகதி.

சூரியனுக்கு 7, 8 – அதி வக்ரகதி.

சூரியனுக்கு 9, 10 – ருஜீ கதி (அ) குடிலகதி (அ) வக்ர நிவர்த்தி கதி.

கிரகங்களின் வக்கிரகதி

சுக்கிரன் வக்ரம்

அ.ஜோ.க எனும் நுால் ஆசிரியர் சுக்கிரன் 18 மாதங்களுக்கு ஒரு முறை வக்கிரம் அடைந்து சுமார் 45 லிருந்து 50 நாட்களுக்கு பிறகே வக்கிர நிவர்த்தி அடைகின்றது.

புதனின் வக்ரம்

சூரியனுடன் நெருங்கியிருக்கும் புதன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வக்கிரம் அடைந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு வக்கிர நிவர்த்தி பெறுகின்றது.

ஜோதிட கையேடு எனும் நுாலில் வக்கர கதியும் வக்கர நிவர்த்தியும் குறித்து ஒரு கிரகம் தன்னுடைய பாதையில் முன்னோக்கிச் செல்லாமல் பின்னோக்கிச் சென்றால் அக்கிரகம் வக்கிர கதியில் இருக்கின்றது. பின்னோக்கிச் செல்கின்றது என்பது ஒரு பொய்த்தோற்றம். நாம் பயணம் செய்கின்ற போது அனைத்தும் பின்னோக்கி நகருவது போலத் தோன்றும் அதைப் போலத்தான்.


மேலே குறிப்பிடப் பெற்ற இயல்பான நாட்களில் இயல்பான இயக்கமும், பின் வக்கர கதியில் இயக்கமும் என பயணம் செய்யும். இயல்பில் இருந்து வக்கரகதி தொடங்கினால் வக்கிர பயணம், வக்கிரத்தில் இருந்து இயல்பிற்குத் திரும்பினால் வக்கிர நிவர்த்தி அடைந்தது என்றும் கொள்ள வேண்டும்.

எந்தக் கிரகமும் வக்கிரகதியில் இருந்தால் உச்சத்திற்கு இணையான பலனைத் தரும் என்பது சோதிட மரபு. அது போல நீசமடைந்த கிரகம் வக்கிர கதியில் இருந்தால் நீச்ச பங்கமடையும் என்றும் தெரிவிக்கின்றார்.

வக்கிரம் பெற்ற கிரகம் அளிக்கும் பயன்

ஜாதகப்பலன் நிர்ணயம் நுால் ஆசிரியர் ரிஷிபானந்தர் வக்கிர கதியில் குரு மட்டும் தன் முன் இராசிக்குரிய பலன்களைத் தருவான்.

செவ்வாய், சனி போன்றவர்கள் தாமிருக்கும் ஸ்தான பலன்களை அளிப்பர்.

ஒரு கிரகம் ஆட்சி பெற்றிருந்து வக்கிர கதிக்கு ஆளாகுமானால் அது அளிக்கும் நற்பலன்கள் அதிகமாகும்.

ஒரு சாதகத்தில் வக்கிரம் பெற்ற கிரகத்தை வேறு ஒரு சுபக்கிரகம் வக்கிரம் பெற்று பார்க்க நேருமாயின் பிறந்த நேரத்தில் யோகமான பலன்கள் நடக்க வாய்ப்புள்ளது.

ஒரு இலக்கினத்தாருக்கு திரிகோணாதிபதிகளாக இருக்கும் கிரகம் வக்கிரம் பெற்றிருந்து அதன் திசை நடைமுறைக்கு வருமானால் நற்பலன்களைத் தரும்.

அதைப் போன்று ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்து வக்கிர கதிக்கு ஆளாகியிருந்தாலும் அந்த கிரகத்தின் தசா புத்திகளில் யோகப்பலன்கள் நடக்கும்.

ஆனால் உச்சம் பெற்று இருக்கும் கிரகம் வக்கிரகதிக்கு ஆளாகி இருந்தால் அதன் தசாபுத்திகளில் நற்பலன் தராது.

அதைப் போன்று ஒரு கிரகம் வக்கிரம் பெற்றிருந்து அதனுடன் ஆறு, எட்டு, பன்னிரண்டுக்குரிய கிரகங்களின் தொடர்பு இருக்குமானாலும் அதன் தசா புத்திகள் யாவும் பாழ்படும் என்று அதிர்ஷ்ட ஜாதகப்பலன் நிர்ணயம் நுால் ஆசிரியர் ரிஷிபானந்தர் தெரிவிக்கின்ற செய்திகள் யாவும் முற்றிலும் பொருந்தும்.

வக்கிரகதி

செவ்வாய்

செவ்வாய் நின்ற இடத்திற்கு சூரியன் 6, 7, 8 ஆகிய இடங்களில் பயணிக்கும் காலத்தில் வக்கிரகதிக்கு ஆளாகின்றது. இந்நிலை 18 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும்.

புதன்

புதன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வக்கிரகதிக்கு ஆளாகி மூன்று வாரம் வரை அந்நிலையிலேயே இருந்து பின் நீங்கும்.

குரு

ஒவ்வோர் ஆண்டும் சூரியன் எந்த நட்சத்திரப் பாதத்தில் கடக்கின்றதோ அதற்கு பத்தாவது நட்சத்திர பாதத்தில் குரு இருக்கும் சமயம் வக்கிரகதிக்குள்ளாகின்றது. இந்நிலை ஆண்டுக்கு சுமார் மூன்றரை மாதங்களுக்கு மேல் நீடிக்கும்.

சுக்கிரன்

சுக்கிரன் பதினெட்டு மாதங்களுக்கு ஒரு முறை வக்கிரகதிக்குள்ளாகின்றது. இது வக்கிர கதியில் 45 முதல் 50 நாட்கள் வரை நீடிக்கக் கூடும்.

சனி

சூரியன் சனியை எந்த நட்சத்திரப் பாதத்தில் கடக்கின்றதோ அந்த நட்சத்திரத்திற்கு பத்தாவது நட்சத்திரம் அதே பாதத்தில் பயணம் புரியும் போது வக்கிரகதிக்கு ஆளாகின்றது. அதே நிலை நீடித்து மீண்டும் பத்தாவது நட்சத்திரத்தில் அதே பாதத்தில் பயணம் புரியும் போது தான் வக்கிர கதி நீங்குகின்றது.

இதையே சனி இருக்குமிடத்தில் சூரியன் 5 ல் வரும் சமயம் வக்கிரம் ஆரம்பித்து 9 ல் வரும் சமயம் வக்கிர நிவர்த்தி அடைகின்றது. இது ஒவ்வோர் ஆண்டும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் வரை இருக்கக்கூடும்.

அதிசாரம்

வக்கிர கதியைப் போல அதிசாரம் என்ற ஒரு நிலை உள்ளது. இது வக்கிர கதிக்கு எதிரிடையானது. தான் இருக்கும் இராசியில் இருந்து தனக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முன் சென்று பின் மீண்டும் தானிருந்த இராசிக்கு திரும்புதலாகும்.

அதிசார ஓட்டம் குருவிற்கு மட்டுமே உண்டு. வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது ஜாதகப்பலன் நிர்ணயம் நுால் ஆசிரியர் ரிஷிபானந்தர் தெரிவிக்கின்ற செய்திகள் யாவும் முற்றிலும் பொருந்தும்.

இவ்விதம் வக்ர கோள்களின் பலன்களை அறியலாம்.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/serial/p5.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License