இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Book Review
புத்தகப் பார்வை

திருப்பாவை நாச்சியார் திருமொழி மணி விளக்க உரை


ஆசிரியர் முனைவர் அரங்கன். மணிமாறன்
பிரிவு பக்தி இலக்கிய உரை நூல்
பக்கங்கள் 214
பதிப்பு ஜூன், 2024
ISBN 978-93-340-6918-1
விலை ரூ. 260/-
பதிப்பகம் முனைவர் அரங்கன். மணிமாறன்
முகவரி 130, ஆர்.எஸ். கோல்டன் சிட்டி, மேலப்பாளையம், செங்கம் - 606701
தொலைபேசி எண் -----
அலைபேசி எண் 9943067963

புத்தகப் பார்வை:


இலக்கியம் பயின்றவர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் புரிந்து கொள்ளும்படியான சுவைக்கும்படியான கற்கண்டு கணிச்சுவை நூல். இதற்கு முன் பல படைப்புகளைத் தந்திருக்கும் நூலாசிரியர் இந்நூலில் பக்திச் சுவை ததும்பும்படியாக உரை எழுதி இருப்பது மிகவும் சிறப்பு. திருப்பாவையில் 30 பாசுரங்கள் உள்ளன. அனைத்துப் பாசுரங்களுமே மார்கழியில் அதிகாலையில் எழுந்து துயில் நீங்கி கண்ணனை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும் என்று தனது தோழியரைத் துயில் எழுப்பவதாக பாடல்கள் அமைந்துள்ளன. 30 ஆவது பாசுரத்தில் 30 பாடல்களையும் பாடி பெருமானை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும் என்று கூறுகிறார் ஆண்டாள். இதனை நூலாசிரியர் உரை வழி சிறப்பாக அறியலாம்.

வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை, திங்கள் திரு முகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி என்று தொடங்கி எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் என்று முடியும் முப்பதாவது பாடல். இப்பாடலில் வங்கக் கடலாகிய திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தத்தையும் அசுரர்களுக்கு ஆலகாலத்தையும் அளித்து, தீயவர்களை அழித்து நன்மைகளைக் காத்த மாதவனை பாவை நோன்பு நோற்கும் பாவையர்கள் அதிகாலைத் துயில் எழுந்து நீராடி மணலால் பாவை செய்து மலர்களைத் தூவி பெருமானது திருநாமங்களையும் புகழை எல்லாம் பாடி வணங்குவதால் நன்மை உண்டாகும் என்று பாடுவதாக அமைந்துள்ளது. இறுதியாக ஆண்டாள் பாடி அருளிய இச்சங்கத் தமிழ் பாடல்கள் 30 பாடல்களையும் பாடி பெருமாளை வழிபடுபவர்கள் பெருமானது அருளாசியுடன் எங்கு சென்றாலும் செல்வ வளம் பெற்றுச் சிறப்புடன் வாழ்வார்கள் என்பது திண்ணம் என்று உரை வழங்கி இருப்பது நூலாசிரியருக்குரிய தனிக்கலை.


நாச்சியார் திருமொழி 14 பதிகத்தில் 143 பாசுரங்கள் அமைந்துள்ளன. இதில் நான்கு, ஐந்து, ஆறு ஆகிய பதிகத்தில் 11 பாடல்களும் ஏனையப் பதிகங்களில் பத்துப் பாடல்களும் அமைந்துள்ளன. பெரும்பான்மையாக, பதிகத்தின் இறுதிப் பாடல்கள் குறிப்பிடும் கருத்து இப்பாடல்களை எல்லாம் படித்து வந்தால் நன்மை உண்டாகும் என்று பாடியுள்ளார். நாச்சியார் திருமொழி ஆண்டாளின் மோகம் நிலையாகக் கருதாமல் முக்தி நிலையாக உணர வேண்டும் என்பது ஆசிரியர் ஆன்மீகத்தில் கொண்டுள்ள குறியீட்டை நமக்கு உணர்த்துகிறது. நாச்சியார் திருமொழி ஆண்டாள் எனும் கோதை, கண்ணன் மீது கொண்ட பக்தி கலந்த தீராதக் காதலைப் பாடுகிறாள்.

நான்காம் திருமொழியில், திருவரங்கப் பெருமானோடு சேரும்படியாக கூடலே நீ கூடிடு என்று பாடுகிறாள். ஐந்தாம் திருமொழியில், குயிலைத் தூது அனுப்புகிறாள். என் கண்ணன் என்னை விரைந்து அடையும்படியாக, குயிலே நீ விரைந்து கூவ வேண்டும் என்று பாடுகிறாள். ஆறாம் திருமொழியில், கண்ணன் மனக்கோலத்தில் வந்து ஆயிரம் அலங்கரிக்கப்பட்ட யானைகள் சூழ பரிவாரங்களுடன் வந்து தன்னை மணப்பதாகக் கனாக் கண்டேன் தோழி என்று பாடுகிறாள். ஏழாம் திருமொழியில், கண்ணனின் கையில் இருக்கின்ற சங்கிடம் பேசுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. இதில் கண்ணனின் கையை விட்டுப் பிரியாமல் இருக்கும் சங்கே சக்கரம் கூட எதிரியின் தலையை துண்டிக்கச் சிறிது நேரம் சென்று விட்டுத் திரும்பி வருகிறது. ஆனால், நீயோ கைகளிலேயேப் பிரியாமல் இருக்கிறாய், கண்ணனின் வாய்ச்சுவையை எனக்குச் சொல்லி, எனக்கு நன்மை ஏற்படுத்த வேண்டும் என்று பாடுகிறாள்.


எட்டாம் திருமொழியில், கருமேகத்தைத் தூதாக அனுப்புகிறாள் ஆண்டாள். கண்ணனது காதலை பெறாது என் கண்களில் அழுது வழியும் கண்ணீர், மார்பகங்களை நனைக்கும் படியாக வருந்துகின்றேன். இதனால் என் பெண்மை நலமும் அழிகிறது வருத்தத்தை தருவதுதான் அப்பெருமானுக்கு அழகோ இதனால் தூது சொல்லுங்கள் மேகங்களே என்று பாடுகிறாள். அதுமட்டுமல்லாமல் இயற்கையைத் தூது அனுப்புகிறாள், பூக்களைத் தூது அனுப்புகிறாள். இப்படி தனக்குள்ள பக்தி நிலையில் உள்ள தீராத காதலெல்லாம் இந்த நாச்சியார் திருமொழியில் பாடலாக இடம் பெற்றுள்ளது.

மொத்தத்தில் நூலாசிரியரின் மணி விளக்க உரை அரசனின் செங்கோலாய் மக்கள் மனதில் ஆட்சி செய்யும் என்பது திண்ணம். அனைவரும் இப்புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம், அனைத்து நலனையும் பெற்று, பெருமகிழ்வாய் வாழலாம்.

- செங்கம் கவிஞர் சு. தமிழ்மதி

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p130.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License