இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Book Review
புத்தகப் பார்வை

உப்பும் சமூக மதிப்பு மாற்றமும்


ஆசிரியர் முனைவர் நா. சுலோசனா
பிரிவு சமூகவியல்
பக்கங்கள் 178
பதிப்பு 2025
ISBN 978-81-983429-2-8
விலை ரூ. 150/-
பதிப்பகம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
முகவரி இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை -600113.
தொலைபேசி எண் 044-22542992
அலைபேசி எண் -----

புத்தகப் பார்வை:


சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் பேராசியரால் எழுதப் பெற்றிருக்கும் இந்நூல் பதினான்கு தலைப்புகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. உப்பின் வகைகள் மற்றும் அவை உருவாக்கப்படும் முறைகள் என்று தொடங்கும் முதல் பகுதியில், உணவில் சிறிய அளவே சேர்க்கப்படும் உப்பைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், உப்புக்கு உலகம் முழுவதுமிருக்கும் சந்தை மற்றும் உப்பு உற்பத்தியை அதிகரித்தல் தகவல்களுடன், தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியை மேம்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் என்று குறிப்பிட்டு, பொருளாதாரத்தில் உப்புக்கு மதிப்பு மிகவும் அதிகம் என்று இந்நூலின் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் உப்பின் முக்கியத்துவம், உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம், அப்போராட்டத்தின் போது இயற்றப்பட்ட தமிழ்ப் பாடல்கள், வேதாரண்யத்தில் அமைக்கப்பட்ட சத்தியாக்கிரக நினைவுத்தூண் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதன் வழியாக, அன்றைய அரசியலில் உப்புக்கு கொடுக்கப்பெற்ற முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

சங்கக் காலத்தில் உப்பு உற்பத்தி செய்து, அதனைச் சந்தைப்படுத்தும் தொழிலைச் செய்து வந்த உமணர்கள் எனும் இனக்குழு நெய்தல் நிலத்தில் வாழ்ந்தனர் எனச் சொல்லி, அக்குழுவினருக்கான பல்வேறு பெயர்கள், அவர்கள் உப்பைக் கொண்டு செய்த பண்டமாற்று வணிக நடைமுறை மற்றும் உப்பைச் சார்ந்திருந்த நெய்தல் நில மக்களின் வணிக முறைகள் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.

சங்க இலக்கியத்தில் உப்புத் தொழிலைக் கருவாகக் கொண்ட பாடல்கள் பல இடம் பெற்றிருக்கின்றன. உமணர் ஒழுகை, உப்பு விற்பனை, உமணப் பெண்களின் வணிகம், மறைந்து போன உமணர்கள் வணிகம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம் பெற்றிருக்கும் உப்பு, காப்பியங்களில் இடம் பெற்றிருக்கும் உப்பு, சிற்றிலக்கியங்களில் உப்பு, பக்தி இலக்கியங்களில் உப்பு என்று தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற உப்புக்கான பாடல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.


உழவுத் தொழில், நெசவுத்தொழில் போன்று, உப்புத் தொழிலும் முதன்மையானது என்பதுடன், உப்பளத் தொழிலை முதன்மையாகக் கொண்டு ராஜம் கிருஷ்ணன் எழுதிய கரிப்பு மணிகள், இந்தியா டுடே இதழில் வெளியான பாவண்ணனின் உப்பு சிறுகதை, லட்சுமி சரவணக்குமார் எழுதிய உப்பு நாய்கள், கோணங்கியின் உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை, வெ. சுந்தர்ராஜின் உப்பளம் நாவல், சக்திஜோதியின் உப்பின் இரகசியம் கவிதைத் தொகுப்பு, லண்டனைச் சேர்ந்த ராய் மாக்சம் ஆங்கில மொழியில் எழுதிய 'The Great Hedge of India' நூலினை, சிறில் அலெக்ஸ் தமிழில் மொழி பெயர்ப்பு செய்த ‘உப்பு வேலி’, க.சீ. சிவக்குமார் எழுதிய உப்புக் கடலைக் குடிக்கும் பூனை சிறுகதை, வித்யா சுப்பிரமணியம் எழுதிய உப்புக் கணக்கு, ராமகிருஷ்ணன் குமரநல்லூர் மலையாள மொழியில் எழுதிய நாவலை உதயசங்கர் தமிழில் மொழி பெயர்ப்பு செய்த ‘கொக்கும், கொசுவும், மரங்கொத்தியும் உப்பு விற்ற கதை’, சிவக்குமார் முத்தையா எழுதிய உப்பு சிறுகதை, எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய உப்பு வயல், தூத்துக்குடி ஸ்ரீதர கணேசன் எழுதிய உப்பு வயல், சு. தமிழ்ச்செல்வி எழுதிய அளம், நாஞ்சில் நாடன் எழுதிய உப்புக் கிணறு, போன்றவைகளுடன், சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரியில் இடம் பெறும் உப்பு, சோ. தர்மன் எழுதிய நீர்ப்பழியில் இடம் பெறும் உப்பு, சிறுவர் கதைகளில், விடுகதைகளில், கவிதைகளில் இடம் பெறும் உப்பு... இப்படி உப்பு இடம் பெற்ற பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஜப்பானியத் திரைப்படமான The Ballad of Narayama (நாராயாமாமலை), இந்தி மொழித் திரைப்படம் நமக் ஹலால், தமிழில் வெளியான் உப்புக் கருவாடு திரைப்படம், அமெரிக்காவில் வெளியான Salt, மலையாள மொழியில் வெளியான Salt and Pepper எனும் படங்களின் தலைப்புகளிலும் உப்பு இருந்திருக்கிறது. மேலும், திரைப்படங்களில் இடம் பெற்ற உரையாடல்களில், பாடல்களில் உப்பு இருந்திருக்கிறது என்கிற தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ் மொழியில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு பழமொழிகளில் உப்பு குறித்துப் பல பழமொழிகள் இருக்கின்றன. அவை, நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல செய்திகளைக் கொண்டிருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழர் பயன்பாட்டிலிருந்த மருத்துவ முறைகளிலும், தற்போதைய அலோபதி மருத்துவத்திலும் உப்புப் பயன்பாடும், அது அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ ஏற்படுத்தும் பாதிப்புகள் போன்ற பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.


உப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பல்வேறு ஊர்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழர் பண்பாடு மற்றும் சடங்குகளில் உப்புப் பயன்பாடு குறித்தத் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இதே போன்று, நாட்டுப்புறப் பாடல்களில் இடம் பெற்றிருக்கும் உப்பு, கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கும் உப்பு குறித்தத் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், தமிழ்நாட்டில் உப்பைக் கொண்டு உருவாகி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பயன்பாட்டிலிருந்து வரும் பல சொற்களை நல்ல விளக்கத்துடன் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்நூல் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் பொதுவாக அனைவரும் படித்து அறிந்து கொள்ளும் வகையில் நிறைய தரவுகள் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. உப்பைச் சாதாரணமாக நினைத்துக் கொண்டு, முக்கியத்துவமில்லாத ஒன்றை ‘உப்பு பெறாத விஷயம்’ என்று சொல்லி ஒதுக்கும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. இந்நூலை முழுமையாகப் படித்தால், அந்தப் பழமொழி பொருளற்றது என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

- பா. கவி பொன்முத்து

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p131.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License