இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Book Review
புத்தகப் பார்வை

பனிக்காலத்தின் காலை வெயில்


ஆசிரியர் சித்தார்த்தன் பாரதி
பிரிவு கவிதைகள்
பக்கங்கள் 120
பதிப்பு 2025
ISBN 978-93-5619-060-3
விலை ரூ. 150/-
பதிப்பகம் நம்நதிபுக்ஸ்
முகவரி எண்:12/30, 57 ஆவது தெரு, 10 ஆவது செக்டார், கே.கே. நகர், சென்னை -78.
தொலைபேசி எண் -----
அலைபேசி எண் 9894795383

புத்தகப் பார்வை:


கௌதமப்புத்தனோ தன் வீட்டைவிட்டு வெளியேறும் நள்ளிரவில் உறங்கும் தன் குழந்தையை முத்தமிடுகிறார். அதுவே, அவரின் கடைசி முத்தமாகும். அதன்பிறகு, அவர் யாரையும் முத்தமிடவில்லை. முத்தங்கள் யாவும் உறைந்து புன்னகையாகிவிட்டன.

இக்கவிதைப் புத்தகத்தைப் படிக்கும் போது, காலத்தின் சுழலிலும் பேரலைகளுக்கும், வெயிலின் வியப்பிலும் இறங்கி வரும் பனியிலும் ஒரு பிறந்த குழந்தையைத் தூக்கிச் சுமப்பது போலவே இருந்தது நூலாசிரியரின் கவிதைகள்.

கவிஞர்கள் எழுதும் கவிதை நூலில் ஏதேனும் ஒரு பக்கத்தில் புத்தர் புன்னகைப்பார். இவர் நூலில் அனைத்துப் பக்கங்களிலும் புத்தரின் பேரழகின் மொழி அடர்த்தியாக, ஒரு வனத்தின் பாதையில் நடப்பது போல், அத்தனை நேர்த்தியாக எழுதப்பட்ட வரிகள். அனைத்துப் பக்கங்களும் புத்தனுக்காகவே செதுக்கப்பட்டக் காலமாக பரிணமித்துள்ளது . எத்தனை நேசிப்பு இருந்தால் நூற்று இருபது பக்கங்கள் சாரமாகியிருக்கும்? அதிசயமாக உணர்ந்தேன், அகம் சார்ந்த புரிதலும் நிகழ்காலத்தில் வாழும் கலையையும் கற்றுத்தரும் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

மானுடம் நேற்றைய பொழுதின் வன்மத்தில் இன்றைய நாளைக் கொலை செய்துவிட்டு, நாளை கைதியாகவும் தயங்காத உலகத்தில் இந்தக் கவிதைப் புத்தகம் பேரொளியின் காலை வெயில் பனிக்காலத்தின் பின்னிரவில் பொழியும் பனியோடு சில்லிடும் காற்று எப்படி உடலை ஊடுருவுமோ அது போல ஆன்மாவின் இழைகளால் நெய்யப்பட்ட வரிகள். கடைசியில் மின்னுவது புத்தன்தான் அனைத்துமாய் நிறைந்திருக்கிறார்.

“அகம் புற மென
இரு வெளிகளிலும்
நீ ஏற்றிய அறிவெனும் தீபம்
சுடர் விடுகிறது

எனக்கு நான் மட்டுமல்ல
நீயும் விளக்கு தான்”

என்று தொடங்குகிறது முதல் கவிதை.

எளிய நடையில் மனதில் எண்ண ஓட்டம் நீரோடை போல தெளிந்த பார்வை.

”பொய்களைப் புன்னகைத்துக் கடக்கவும்
மெய்களைக் கவனித்து இருக்கவும்
ஞானத்தின் விதை ஒன்றை
நான் விழுங்கக் கொடுத்தாய்
வணக்கத்திலோ வழிபாட்டிலோ
உன்னை அடைவதில்லை
வாழ்வதில் உன்னைக் கண்டடைகிறேன்”

என்ற வரிகள் வாழும் கலையைக் கற்பித்த ஞானம். அதை கண்டடைந்த வழியை நமக்கும் உணர்த்துகிறார்.


காலத்தை இரசிக்க மனிதனுக்கு நேரமில்லை. இயற்கையை நேசித்தால் தான் நீ உன்னை நேசிக்க முடியும் என்பதை

”மஞ்சளாய் வெயில் காய்கிறது
சப்தமே இல்லாமல் மழை பெய்கிறது

கழனியும் கனிமரங்களும்
பூத்துக் குலுங்குகின்றன...”

வேறொன்றும் இல்லை உன் பேரன்புதான் என முடியும் அந்தக் கவிதை இயற்கையினோடு ஒன்றுதல், புத்தனுக்கு வாய்த்தது, உனக்கு வாய்த்ததா? எனில் நேரமில்லை என்பதே நமது பதில்.

”எவ்வளவு முயன்றும்
நிகழ் எனும் மெய்யுரைத்த
புத்தரை
புத்தராகாமலேயே
தரிசித்துக் கொண்டிருக்கிறேன்”

என்ற வரிகள், எப்படி புத்தனாவது என்பதன் சாவி உங்களிடமே இருக்கிறது.

”வாழ்வெனும் பெருங் கோடையை
குளிர்விக்கும் நீர்கனி
நீ எனக்கு”

என்ற வரிகளில் குளிர்மையின் முகமாக புத்தனே பேரன்பின் மொழியாகிறான்.

“சொற்கள் புதைந்திருக்கும்
உன் அடர் மௌனத்தில்
பெருவனம் பூத்து மகிழ்கிறது”

என்ற வரிகளில் தொடங்கும் கவிதை, ஒரு வனத்தின் உதிர்வும், துளிர்ப்பும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும், உன் அமைதியை முன்னிறுத்துவதாக எழுதப்பட்ட வரிகளில் சிறகசைக்கிறார் புத்தர்.

”வாழ்வெனும் பெருங்கொடி
உயர உயர உயர்ந்து கொண்டே போகிறது
மகிழ்வைத்துயரை சமமென மதித்து”

எனும் வரிகளில் நிகழ்காலத்தின் உண்மையால் பேரன்பெனும் கிளை பரப்பி, புத்தனின் அறிவுரை மேலோங்கி நிற்கிறது.

“மனிதர்கள் மலர
மனிதர்கள் அடைய
தேடித் தந்தவன் நீ”

என்று மானுடம் தழைக்கவும், நேசம் மலரவும், தீங்கிழைக்காத மனம் மலரவும் புத்தன் இவ்வுலகத்தின் தேடலாகிறான்.


”நான் பிறந்த நாளென்பது
நான் பிறந்த நாளில்
இல்லை
உன்னைக் கண்டடைந்த
நாளில் இருக்கிறது”

எனும் கவிதையின் வழியாக, பிறந்த நாள் என்பது, ஆண்டுதோறும் வரும் நாளில் இல்லை, ‘உன்னைக் கண்டடைந்த நாளில் இருக்கிறது’ என்கிறார். இங்கு ஒவ்வொருவரும் அவர்களைக் கண்டடைந்த நாளாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

“நின்று கிடப்பதில்ல
துயரோ மகிழ்வோ
வாழ்ந்து கடப்பதே
வாழ்க்கை”

என்றும்,

“பிறப்பின் வழியே பெருமைகள் ஏதுமில்லை
அறிவின் வழியே செயல்களின் வழியே
மனிதர்களை அளவிட்டவன் நீ”

என்று புத்தனைத் தனது கவிதைகள் அனைத்திலும் அறிமுகம் செய்யும் இந்நூல் வாசிப்பில் நாமும் முகமற்ற புத்தனாகிறோம் என்பதுதான் உண்மை.

- தயானி தாயுமானவன்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p133.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License