இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Book Review
புத்தகப் பார்வை

கடலை விழுங்கும் மீன்


ஆசிரியர் நர்மதா தேவி
பிரிவு கவிதைகள்
பக்கங்கள் 120
பதிப்பு டிசம்பர் 2025
ISBN 978-93-5592-636-4
விலை ரூ. 120/-
பதிப்பகம் நம்நதிபுக்ஸ்
முகவரி எண்:12/30, 57 ஆவது தெரு, 10 ஆவது செக்டார், கே.கே. நகர், சென்னை -78.
தொலைபேசி எண் -----
அலைபேசி எண் 9894795383

புத்தகப் பார்வை:


"வாழ்வைப் போல காற்றில்
விநோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும் போது
நடனம் மட்டும்
எங்கோ ஒளிந்து கொள்கிறது " - தேவதச்சன்

இப்படித்தான் கவிதாயினி நர்மதா தேவி அவர்களின் கவிதைகளைப் படிக்கும் போது தோன்றியது .

"எந்த வலைக்கும் அகப்படாத ஒரு கண்ணாமூச்சி வாழ்வில், நம்பிக்கையில் வாழும் அந்தச் சிறுமீனின் ஆசையைப் பாருங்கள்.. பெருங்கடலின் நீரையெல்லாம் விழுங்கிவிடும் பேராசை" யென்றே குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அதுவே, அவரது நம்பிக்கையின் அச்சாணி.

இவ்வளவு பெரிய உலகத்திற்கு நிலவின் சிறிய ஒளி தரும் அழகை சூரியனால் தரமுடியுமா? எனில் தரமுடியாது . அதுபோல இவர்கவிதைகளில் கோலோச்சும் காட்சிகள் கடல் சார்ந்த கவிதைகள்.

"என்றோ ஒருநாள்
தன்னைப் பார்க்க சக்கர நாற்காலியில்
வரும் கால்களையும் இதயத்தையும்
நனைத்து விட இன்னும் அதிக ஆசையுடன்
ஓடி வருகிறது
அந்த கடல் அலை"

ஆயிரம் பேர் கடலாடினாலும் என்றோ ஒரு நாள் வரும் கால் நனைக்க முடியாது, கடலாட முடியாத அவனின் கால்களை நனைக்க ஓடிவரும் அலைக்கு நினைவலைகள் என்றே பெயர் வைக்கலாம். கடலின் நீல நிற கண்களுடன் உறவாடும் மௌனமான கணத்தில் பாதச்சுவடுகள் மறைந்துவிட்டாலும், நெஞ்சம் மட்டும் கடலின் ஆழத்தில் நிசப்தத்தை நாடும் மௌனத்தின் மொழி கவிஞரின் நுட்பம்.

தீட்டு என்பதெல்லாம் பாழும் மனிதருக்குத்தான் ... அந்த தெய்வத்துக்கு இல்லை ,என்பதை உணர்த்தும் இந்தக் கவிதை இந்நூலின் சிறப்பான மகுடம் தறிக்கும் வரிகள்.

"ஊர் திருவிழாவின்
கூட்ட நெரிசலிலிருந்தும்
பாட்டு சத்தத்திலிருந்தும்
கருவறையை விட்டு விலகி
வெளியேறியது தெய்வம்”

எங்கே சென்றது? என்பது தான் கவியின் மன விலாசத்தில் புதிய சிந்தனையில் சுடரும் கவிதை. அற்புதமான காட்சி.

உழைப்பவர்க்கு கல்லும் மெத்தையாகும் இரவசாதம் இவர் கவிதையில் கோலோச்சுகிறது.

இயற்கையை நீ நேசிக்கக் கற்றுக் கொண்டால் இயற்கையே உன்னை பாதுகாக்கும் காலத்தின் பாடம் இது.

”கண்காணிப்புக் கேமராக்களிடமும்
அடையாள அட்டைகளிடமும்
அடையாளம் இழந்து
தோற்றுப் போய் கை கட்டி நிற்கிறது
சக மனிதன் மீதான நம்பிக்கை”

என்கிற கவிதை வரிகளில் இயந்திரமயமாகி வரும் நமது வாழ்வில் நாமும் ஒருநாள் மாறிவிடுவோம் மனிதம் மறந்து என்பதை அழகாக கவிதையாக்கி விட்டார்.

“தொடர்பு எண்கள்
முகவரிகள் எழுதி வைக்கும்
கையடக்க நாட்குறிப்புகளையும்
காகித வரைபடங்களையும்
பார்த்து குபீரென சிரிக்கின்றன
கூகுள் வரைபடங்கள்”

என்ற கவிதை வாழ்வியலின் முரண்களில் நாம் வரைபடங்களில் தொலைந்து விட்டோம் என்கிறார்.


“பளிங்கு கோயில்களில்
புத்தரின் தங்கச் சிலைகள்
தியானம் செய்து கொண்டிருக்கின்றன

அந்தச் சிலைகளின்
மௌனத்திற்குப் பின்புறம்
போர்க்களத்தின் பேரிரைச்சல்
ஒளிந்து கொண்டிருக்கிறது

அந்தக் கருணையற்ற கரங்களால்
நிறுவப்பட்ட புத்தர்
அங்கு சிலையாக
மட்டும்தான் இருக்கிறார்”

என்று புத்தரின் பின்னிருக்கும் அரசியலை அழகாக முன்னெடுக்கிறார்.

கோலோச்சும் குடும்பத்தின் காரசார விவாதங்களில் புத்தரும் வரவேற்பறையில் அமைதியாக அமர்ந்திருக்கும் புத்தர், நல்ல காலம் நள்ளிரவில் வெளியேறி விட்டதால் இப்படிப்பட்ட விவாதங்களுக்கு இடமில்லாது போய்விட்டது.

சிணுங்கும் இராகுலனோடும் ஆழ்ந்த துயிலின் அடுத்த நாள் அதிர்ச்சியை எப்படித்தான் தாங்கிக் கொண்டாளோ? அந்தப் பேதைப் பெண் யசோதரை, என்ற விவாதப் பொருளின் மௌனத்தில் புத்தர் அதிர்ந்து போயிருக்கலாம் என்ற கருத்தியலை முன் வைக்கும் அகம் சார்ந்த உளவியலில் கடலை விழுங்க நினைக்கும் மீனுக்கு கண்களில் உப்பின் சுவை.

அடுத்த கவிதையிலும் சொல்லப்படாத புத்தர் பயணிக்கிறார் ரெயிலில். சொல்லாமலேயே இறங்கிச் சென்றுவிட்ட நீயும் எங்கோ பரிச்சயமான முகம் தான், நாகரீகம் கருதி கேள்வி எழுப்பாத யசோதரையின் மறுபிம்பமாக தெரிகிறார். அவரவர் இடம் வரும்போது இறங்கி விடுவது என்பது தவிர்க்க முடியாது பிரிவின் வலி பெண்ணுக்கு மட்டுமா? புத்தனுக்கும் உண்டு ஒரு நூற்றாண்டு தனிமை.

உன்பெயரை எங்கோ பார்க்க நேரும் தருணம் பேசிவிட வேண்டும் என்ற நினைப்பும் அப்படியே இருந்து விட்டே போகட்டும் என்பது காதலின் துயர்.

திறந்த புத்தகமாகவே கிடக்கிறது இந்த வாழ்வு . மறைப்பதற்கு ஏதுமில்லை. புதிய என்னை நீங்கள் வாசிக்க நேரிடலாம் என்ற நேர்மையான ஒப்புதல் பெறும் பெண் விடுதலை.

வாக்குவாதம் முற்றும் தருணம் ஒரு நட்பு தன் குரலை துண்டித்துக்கொள்கிறது. சமாதானம் செய்வதற்கு முன்பே தடை செய்யப்பட்ட நட்புப்பட்டியலில் சுலபமாக முறிந்த உறவுகள் என்பது இயல்பின் கண்ணீரிலிருந்து தனித்து தன்னை பிரித்துக் கொள்ளுதல் என்பது இப்போது இயல்பாகி விட்டது என்பதை இக்கவிதையில் பதிவிட்ட வரிகளில் கவிஞர் மின்னுகிறார்.

சமாதானம் பேச நடுவில் ஒருவருமற்ற இந்த வாழ்வில் உறவுகளின் வேர்களை வெட்டி எறிவது சுலபம்தான்.

சாதியம் பேசும் மனித மனங்களுக்கு இவரது கவிதை வரிகள் தரும் சாட்டையடி இதுவரை அறிவியலாலும் கண்பிடிக்க முடியாது என்ற தொனியில் கவிஞரின் மனம் சிகரம் தொடுகிறது.

பிரிவின் வலியை விமானம் அறியாது . தழுவிய நெஞ்சம் தூரதேசம் போக புறப்பட்டு விட்டது வெறும் உடல் மட்டும் உயிரைப்பிரிய மறுக்கும் விரல்கள் அகவாழ்வின் வலியை தன் கவிதையில் மிக அழகாக பதிவு செய்துள்ள இவருக்குப் பாராட்டுகள்

கூடவே வரும் நிலவுக்காக ஜன்னலோர இருக்கைக்கு ஆசைப்படும் மனதை யார்தான் வெறுப்பார்கள்? “நிலவே நீ மறைந்து விளையாடும் அந்த நொடி தனிமையின் இருளை என் மீது போர்த்தி விடுகிறாயே...” என்ற வரிகள் ஆத்மார்த்தமானவை.

“சரி நீ அழைக்க வேண்டாம்
என்றாவது என்னை
ஒரு கணம் நினைத்தாவது விடேன்
சரண்டைந்து விடுகிறேன் உன்னிடம்”

என்ற இவரின் வரிகள் காதலின் சொல்லொண்ணாத்துயர்.

”கடல் முழுவதும்
நிரம்பி இருக்கும்
உவர்ப்பினை
வாரி எடுத்து
தன் மேனியெங்கும்
பூசிக் கொள்கிறது
முகத்துவாரத்தில்
ஆறு”

எனும் கவிதை காதலின் மகுடம்.

கொண்டவனின் துயரம் காதலினால் இவளுடையதாகிறது. ஓடோடி வரும் வாழ்வு கண்ணீரில் கரைந்தாலும், நான் ஆறு அல்ல கடலே... இனி என்னைக் கடலாகவே பாவியுங்கள். கடலே என்னை ஏற்காது போனாலும் நினைவுகளால் உப்புகரிக்கும் இந்த வாழ்வு கடலே.... உன்னிடத்தில் முடியட்டும் என்பதுதான் இங்கு காதலின் முடிவுத் துயரம்.


இரட்டைக் காப்பியங்களை நினைவுறுத்துகிறது, இந்தக் கவிதை. பெண்களின் வாழ்வு கடலின் மீன்களின் வாழ்வு. அழுதாலும் உலகம் அறியவே வேண்டாம்... மீன்களின் கண்ணீரை. ஆனால் கடலையே விழுங்கிவிடும் சிறு நம்பிக்கை நட்சத்திரம் அந்த சிறியமீன். கண்ணகியும் மாதவியும் ஒரு சேர நினைவில் வந்த கணம் அற்புதம்.

“தனிமையில் இருக்கும்
ஒரு பறவை தனக்கு
எதிர் குரல் கொடுக்கும்
யாருடனாவது
முகம் பார்க்காமல்
எப்போதும்
பேசிக் கொண்டே இருக்கிறது”

என்பது வாழ்வியலின் நம்பிக்கை நம்மீது சொட்டும் கணம்!

இதே போன்று, புத்தர் மீது பாய்ச்சப்படும் ஒளிக்குப் பின்னேதான் போரின் காரிருள் மறைந்திருப்பதாக கூறும் வரிகளில் அரசியல் களமாடுகிறது.

காலம் காலமாக திருட்டுப் பட்டம் கட்டி ஒரு சமூகத்தையே அடிமையாக வைத்திருக்கும் மானுடத்தின் அதிகாரத் தொனியை கருவறுக்கிறது இவரது காகம் பற்றிய கவிதை.

அரசியல் என்பது சாக்கடை யல்ல நாம் நமது உரிமைகளை மீட்டெடுக்கும் களம். களமாட வேண்டும் இப்படியான வாழ்வை. இன்னும் உங்களுக்காக நிறைய கவிதைகளை விட்டு வந்திருக்கிறேன்.

அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்துச் சுவையுங்கள்!

- தயானி தாயுமானவன்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p134.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License