இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




Book Review
புத்தகப் பார்வை

ஈகிள் கேர்ள் சாகசங்கள்


ஆசிரியர் ஜெ. வீரநாதன்
பிரிவு படக்கதை
பக்கங்கள் 76
பதிப்பு 2026
ISBN 978-81-960339-2-7
விலை ரூ. 200/-
பதிப்பகம் எஸென்சியல் பப்ளிகேசன்ஸ்
முகவரி கோயம்புத்தூர்.
தொலைபேசி எண் -----
அலைபேசி எண் 9842213782

புத்தகப் பார்வை:


குழந்தைகள் பாடப்புத்தகங்களில் இருப்பதைத் தெரிந்து கொள்வது மட்டுமின்றி, அரியதான தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், குழந்தைகளின் சிந்தனைத் திறனுடன், வாசிப்புத் திறனையும் அதிகரிக்க வேண்டுமென்கிற நோக்கத்தில் சிறுவர்களுக்கான இதழ்கள் தோற்றம் பெற்றன. தமிழ் மொழியில் அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, கோகுலம், கண்ணன் என்று பல்வேறு சிறுவர் இதழ்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. தமிழில் வெளியாகும் நாளிதழ்களும் தங்களது நாளிதழுடன் இணைப்பிதழ்களாகச் சிறுவர் இதழ்களை வழங்கிக் கொண்டிருந்தன.

கணினி மற்றும் இணையப் பயன்பாடு, திறன்பேசிகளின் பயன்பாடு அதிகரிப்புகளால் சிறுவர்களிடையே சிறுவர் இதழ்களுக்கான வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. இதனால், தமிழில் வெளிவந்த பல சிறுவர் இதழ்கள் நின்று போய்விட்டன. நாளிதழ்களின் இணைப்பிதழ்களான சிறுவர் இதழ்களும் வாசிப்பின்றி, பக்கங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து பெயரளவில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சிறுவர் இதழில் அவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படியான படைப்புகள் அதிக அளவில் இடம் பெற்று வந்தது. அவற்றுள், படக்கதை (Comics) என்பது கதைகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். படக்கதைகள் என்பது படங்களாகவும், உரையாடல்களைச் சிறு கூண்டு வடிவங்களாகவும் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படக்கதைகளைப் படிக்கும் போது, திரைப்படம் பார்ப்பது போன்ற அனுபவம் ஏற்படும். அதுமட்டுமின்றி, சிறுவர்கள் அது குறித்து கற்பனை செய்து, தங்களது சிந்தனைத் திறன்களை அதிகரித்துக் கொள்ள முடிந்தது.


முழுமையான படக்கதையை உள்ளடக்கமாகக் கொண்டு, படக்கதைப் புத்தகம் (Comics Book) சிறுவர்களுக்கான புத்தகங்களில் ஒன்றாக வந்து கொண்டிருந்தது. ஆனால், அதுவும் தற்போது படக்கதைப் புத்தகங்களும் காணாமல் போய்விட்டன. காணாமல் போன படக்கதைகளை மீட்டுக் கொண்டு வரும் நோக்கத்துடன், தனது புதிய முயற்சியாக, நூலாசிரியர் ‘ஈகிள் கேர்ள் சாகசங்கள்’ எனும் புதியப் படக்கதைப் புத்தகத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் படக்கதைப் புத்தகத்தில், முதல் பக்கத்தில் ஈகிள் கேர்ளை அறிமுகப்படுத்தும் நூலாசிரியர், சிங்கமுகனுடன் மோதல், கப்பலைக் காப்பாற்றினாள், ஈகிள் கேர்ள் தோழர்கள், எதிரி நாட்டுப் படையை வென்றாள், விலங்குகளுக்கு உதவுதல், கொள்ளையர்களை ஒழித்து மக்களைக் காப்பாற்றினாள், ஈகிள் கேர்ளின் உலகப் பயணம், சித்திரபுரியில் சாகசங்கள், சந்திரபுரியில் ஈகிள் கேர்ள், சொர்ணபுரியில் புதிய சாகசம் என்கிற தலைப்புகளில் ஈகிள் கேர்ளின் சாகசங்களைப் படக்கதையாகத் தந்திருக்கிறார்.

இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ஈகிள் கேர்ள் மட்டுமின்றி, படக்கதையில் இடம் பெற்றிருக்கும் ஈகிள் கேர்ள் சாகசங்கள் புத்தகத்திலுள்ள அனைத்துப் படங்களும் புதியத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் புதிதாக உருவாக்கியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நூலாசிரியரின் இந்தப் புதிய முயற்சியையும் சாகசம்தான் என்று பாராட்டி மகிழலாம்.


இந்துச் சமயப் புராணங்களில் இடம் பெறும் கருட பகவான் செய்தப் பல்வேறு சாதனைகளைப் போன்று, இந்த ஈகிள் கேர்ளும் பல்வேறு சாகசங்களை இப்புத்தகத்தில் செய்து காட்டியிருக்கிறார். இந்தச் சாகசங்களைப் படங்களுடன் படிக்கும் போது மிகவும் சிறப்பாக இருக்கிறது. சிறுவர்களுக்கான படக்கதைப் புத்தகமாக இருந்தாலும், இப்புத்தகத்தைச் சிறுவர்கள் மட்டும்தான் படிக்க வேண்டுமென்பதில்லை, பெரியவர்களும் படிக்கலாம். இப்புத்தகத்தைப் படிக்கப் படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கிப் படித்த இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் 007, ஸ்பைடர் போன்ற கதாப்பாத்திரங்கள் நினைவுக்கு வந்து சென்றன.

ஈகிள் கேர்ள் எனும் புதிய வரவை வரவேற்கலாம், வாய்ப்புடையவர்கள் அனைவரும் வாங்கிப் படிக்கலாம். பள்ளிகள் அனைத்தும் இது போன்ற படக்கதை நூல்களைப் பள்ளி நூலகங்களுக்கு வாங்கி வைத்திட வேண்டும். பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கச் செய்திட வேண்டும்.

- உ. தாமரைச்செல்வி

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p142.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License