இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




சிறுவர் பகுதி
கட்டுரை

ஆசிரியர் நாள்

வழக்கறிஞர் முனைவர் டி. ஏ. பிரபாகர்

இந்தியா விடுதலை பெற்ற 15 ஆவது ஆண்டில், அதாவது 1962 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஆசிரியர் நாள் கொண்டாடப்பட்டது. அப்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தவர் முனைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன். அவர் ஒரு மிகச் சிறந்த கல்வியாளர். ஆசிரியராகப் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பல்லாண்டுகள் பணியாற்றியவர். ஆசிரியர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவரது பிறந்த நாளே, இந்தியாவில் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

முனைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1988 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 5 ஆம் நாளில் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் பிறந்தவர். இவர் மதராஸ் பிரசிடென்சி கல்லூரியிலும், மைசூர் பல்கலைக்கழகத்திலும், அதன் பின்பு கல்கத்தாப் பல்கலைக்கழகத்திலும், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். 1962 ஆம் ஆண்டு மே 14 அன்று, சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இது இவரிடம் படித்த மாணவர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அம்மாணவர்களில் சிலர் இவரை அணுகி இவரது பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். முனைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நெடுங்காலமாக ஆசிரியர் பணி செய்ததாலும், ஆசிரியர் பணி மேல் அவருக்கு இருந்த அளப்பரிய ஈடுபாடு காரணமாகவும் தனது பிறந்த நாளை அனைத்து ஆசிரியர்களையும் சிறப்பிக்கும் விதத்தில் ஆசிரியர் நாளாகக் கொண்டாடலாம் என்கிற தன்னுடைய ஆவலினைத் தெரிவித்தார். அதனையடுத்து, 1962 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 5 ஆம் நாளன்று, நம் நாட்டில் ஆசிரியர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிடத்தக்க அளவில் சில ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘நல்லாசிரியர்’ விருதுகள் வழங்கிச் சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.

ஆசிர்யர்களுக்கு வழங்கப்படும் விருதுகளால், அவர்கள் ஊக்கம் பெறுவதுடன், அவர்களின் கற்பிக்கும் திறன் மேம்படும் என்பதையும், அதனைக் காணும் மற்ற ஆசிரியர்கள் தாங்களும் அச்சிறப்பை அடைய வேண்டுமென்று விரும்புவார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. மாநில அரசுகளால் மாநில நல்லாசிரியர் விருதும், இந்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதும். ஐக்கிய நாட்டு சபையினுடைய யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகளாவிய ஆசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. சமஸ்கிருதம், பெர்சிய மற்றும் அரேபிய மொழி கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்றுத் தரும் சிறப்பு ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக ஆசிரியருக்களுக்கும் தனித்தனியே நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதேபோன்று, பள்ளிக் கல்வியினை வழங்கும் பதின்ம (மெட்ரிக்) , மத்தியக் கல்வி வாரியம் (CBSE) பள்ளி ஆசிரியர்களும் சிறப்பிக்கப்பட வேண்டும் என்பது அப்பள்ளி மாணவர்களின் எதிர்பார்ப்புகளாக இருந்து வருகிறது.


ஆசிரியர்களில் விருதுக்கு தகுதியானவர் யார்? என்பது பலரிடமும் இருந்து வரும் கேள்வி. விருது என்பது கேட்டு பெறுவதாகவும், விண்ணப்பித்துக் கிடைப்பதாகவும் இருந்து விடக் கூடாது. இணையத்தில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி யார் வேண்டுமானாலும் யாரிடமிருந்தோ விருது பெறும் நடைமுறையும் வழக்கத்தில் இருக்கிறது. இது போன்ற விருதுகள் ஆசிரியர்களுக்கான மரியாதையைக் குறைத்து விடுவதாக இருக்கிறது.

ஆசிரியர்களில் சிலர் திறமையுள்ள ஆசிரியர்கள் என்றும், சிலர் பயனுள்ள ஆசிரியர்கள் என்றும் இரு பிரிவினராக வகைப்படுத்தப்படுகிறார்கள். திறமையான ஆசிரியர்கள், தங்களுக்குத் தரப்பட்ட பாடங்களைச் சரியாகக் கற்றுத் தருகிறார்கள். பயனுள்ள ஆசிரியர்கள் பாடங்களை சிறப்பாகக் கற்றுத் தருவதுடன், மாணவரின் தேவையை உணர்ந்து பாடத்திட்டத்தில் இல்லாத விஷயங்களையும் மாணவருக்குக் கற்றுத் தருகிறார்கள். திறமையான ஆசிரியர்கள் தேர்வு முடிவைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார்கள். பயனுள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் பெரும் கவனம் செலுத்துகின்றனர். இந்த இரண்டு விதமான ஆசிரியர்களின் தன்மையும் ஒரே இடத்தில் இணைகிற போது ஆரோக்கியமான ஆசிரிய - மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். அரசும் இதை உணர்ந்து, பொதி இல்லா மாணவர் சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுகிறது. “பயிற்றுப் பல கல்வி தந்து இப்பாரினை உயர்த்திடல் வேண்டும்”என்று ஆசிரியர் கடமை பற்றி பாரதிதாசன் கூறுகிறார். அத்தகையக் கடமை உணர்வுள்ள ஆசிரியர் ஒரு மாணவனுக்கு மிகப்பெரிய உந்துதலாகவும், அவன் அடைய விரும்பும் லட்சியத்துக்கு வழிகாட்டியாகவும் இருப்பார். அவரே நல்லாசிரியர்.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளி ஆசிரியரைக் கண்டால் உட்கார்ந்து இருக்கும் மாணவர்கள் எழுந்து நிற்பதையும், மடித்துக் கட்டிய வேட்டியை அவிழ்த்துவிடுவதும் இயல்பான ஒன்றாக இருந்தது. ஆசிரியர்களிடத்தில் மாணவர்களுக்கு பக்தி கலந்த மரியாதை இருந்தது. இன்று அந்தநிலை மாறிவிட்டது. என் மகன் தப்பு செய்தால், முட்டுக்கு கீழ் உரித்து விடுங்கள் என்று கூறி மாணவர்களைப் பள்ளியில் சேர்த்த பெற்றோர்களின் நிலைமை மாறி, என் மகனை அடித்து விட்டார் என்று ஆசிரியர் மீது காவல் துறையிலும், மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுக்கும் அளவுக்குப் பெற்றோர்கள் மாறி இருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு,

மைக்கேல் ஏஞ்சலோ என்பவர் உலகப்புகழ் வாய்ந்த சிற்பி. இவர் ஓரு சிலையை வடிக்க சலவைக் கல்லைத் தேர்ந்தெடுக்கும் போதே, “இந்தச் சலவைக் கல்லுக்குள் ஒரு தேவ தூதனைப் பார்த்தேன். அதிலிருந்து அவனை விடுவிக்கும் வரைக்கும் செதுக்கினேன்”என்று கூறியிருக்கிறார். உலகில் ஒருவர் எந்த ஒரு உயர்ந்த நிலையில் இருந்தாலும், அவர் வகுப்பறை என்ற பட்டறையில் ஒரு ஆசிரியரால் உருவாக்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை. மாணவர்கள் ஒவ்வொருவரும் செதுக்கப்பட வேண்டிய சலவைக் கற்களாகவே ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். மாணவரின் திறமைக்கேற்ப அவர்களை செதுக்கி உருவாக்குவது ஆசிரியரின் கடமை. ஒரு மாணவனுக்கு இறைவன் தந்த வரம் ஆசிரியர் ஆவார்.


மாவீரன் அலெக்சாண்டர் மகனாகப் பிறந்தவுடன் அவரது தந்தையான மாசிடோனிய மன்னர் பிலிப் தனக்கு மகன் பிறந்ததை விட, தன் மகன் பிறந்த நேரத்தில் தனது மகனுக்கு கல்வி கற்பிக்க அரிஸ்டாட்டில் என்ற பேரரறிஞர் இருக்கிறார் என்று அகமகிழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் தனது பதவிக்காலம் முடிந்ததும், சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் ஆசிரியர் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார். மாணவர்களுக்கு கற்பிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக அவர் பல நேரங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் இன்று வரை வாழ்வதற்காக என் பெற்றோருக்குக் கடமைப்பட்டுள்ளேன்; நான் நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கு கடமைப்பட்டுள்ளேன்”என்று மகா அலெக்சாண்டர் கூறி இருக்கிறார். வில்லியம் மாக்லே என்ற அறிஞர் “குழந்தைகள் நிறைய வாய்ப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் போன்றவர்கள். இதனை ஒரு பெற்றோர் அல்லது ஆசிரியர்களால் தான் அடையாளம் காணமுடியும்”என்று கூறுகிறார்.

நன்றிக்கு வித்தாகும் நல்ஒழுக்கம் என்கிறார் வள்ளுவர். இந்த ஒழுக்கத்தை மாணவர்களின் வாழ்வில் விதைப்பவர்கள் ஆசிரியர்கள். பண்பட்ட மனதை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். இதற்கென்றே தனியாக நல்லொழுக்க வகுப்பு என்று ஒவ்வொரு வகுப்பிலும் முன்பு நடத்தப்பட்டது. இந்த வகுப்புகளில் ஆசிரியர்கள், ஒழுக்கத்தின் மேன்மை, சுத்தம், சுகாதாரம், ஒற்றுமையின் வலிமை, சாதி, சமய, இனப் பாகுபாடின்மை போன்றவற்றைப் போதித்து மாணவர்களை நல்லொழுக்கப்படுத்தினர். இன்று அத்தகைய வகுப்புகள் இல்லை என்பதும், பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் மட்டுமே போதிக்கப்பட்டு, அதிக மதிப்பெண்களைப் பெற வைக்கும் வழியில் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் இயந்திரங்களாக கல்விக்கூடங்கள் மாறிவிட்டதையும் காணமுடிகிறது. முன்பு இருந்தது போன்று, பாடத்திட்டத்தில் நல்லொழுக்க வகுப்பு ஏற்படுத்த வேண்டும். நல்ல மாணவர்களை உருவாக்கும் நல்ல ஆசிரியர்களும் உருவாக்கப்பட வேண்டும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/essay/p13.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License