“திருநீறு இட்டார் கெட்டார்... திருநீறு இடாதார் வாழ்ந்தார்”
வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். அதேப் போல், எதிர் மறையாக இருந்தால் கூட, அதை நேர் மறையாக மாற்றிச் சிந்திப்பவர்.
அவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள்.
“திருநீறு இட்டார் கெட்டார்; திருநீறு இடாதார் வாழ்ந்தார்” என்று எழுதி இருந்தார்கள்.
உடன் வந்தவர், “காலம் கெட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார்.
அதற்கு வாரியார், “இல்லை... சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார்.
“சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?” என்றார்.
அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்துப் படித்துப் பார்” என்று சொல்லி, அவரேப் பதம் பிரித்துச் சொன்னார்.
“திரு நீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)” என்றும், அடுத்தது, “திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) யார் வாழ்ந்தார்” என்றும் சொன்னார்.