உலகத்தையே வெல்ல நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசிக் காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தான்.
தோல்வி அடைந்த நெப்போலியனைப் பிரிட்டிஷ் ராணுவம் சிறைப் பிடித்து ஆப்பிரிக்கத் தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.
சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.
அவனைப் பார்க்க வந்த நண்பர் ஒருவ்ர் அவரிடம், ஒரு சதுரங்க அட்டையைக் கொடுத்து “இது உங்களின் சிந்தனையைச் செயல்பட வைக்கும், தனிமையைப் போக்கும்” என்று கூறிக் கொடுத்தார்.
ஆனால், சிறைப்படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் செல்லவில்லை.
சிறிது காலத்தில் இறந்தும் போனான்.
பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட, அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது.
அதில் அந்தச் சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழிக்கான குறிப்பு சொல்லி இருந்தது.
ஆனால் அவரின் மன உளைச்சலும், பதட்டமும் அவரின் சிந்தனையைச் செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.
உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி, அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலிப்பொறியை உடைக்கும் வழியை விட்டுவிட்டு அந்தப் பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்.
மாவீரனுக்கும் சரி... சாதாரண எலிக்கும் சரி... பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையைச் செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது.