பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா தனது முதுமைக் காலத்தில் ஒருநாள் மிகவும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டபோது, தன்னுடைய மருத்துவருக்குப் போன் செய்து, நெஞ்சுவலி அதிகமா இருக்கு, எனவேத் தன் வீட்டிற்கு உடனே வருமாறு அழைத்தார்.
அதற்கு மருத்துவர், தன்னுடைய கிளினிக்கில் நிறைய நோயாளிகள் காத்திருக்கின்றனர், எனவே தன்னால் வரமுடியாது, ஏன் நீங்க கிளினிக் வரவேண்டியதுதானே? என்றார்.
ஷா, "தன்னால் எழுந்து நடக்க முடியவில்லை", "காபி போட்டு குடிக்க முடியவில்லை", "தொடர்ந்து நிற்கவே முடியவில்லை" என்றார்.
சரியென்று மருத்துவரும் பெர்னார்ட்ஷா வீட்டிற்கு வந்தார்.
மாடியில் தங்கியிருந்த ஷாவைப் பார்க்கப் படியேறிவந்தார்.
ஷாவைக் காட்டிலும் முதியவரான மருத்துவருக்கு மூச்சுவாங்க தன்னுடைய நெஞ்சைப் பிடித்தபடி சேரில் அமர்ந்துவிட்டார்.
அதைப் பார்த்து பதறிப்போன ஷா, எழுந்து சூடாக காபி போட்டு வந்து டாக்டருக்குக் கொடுத்து, அவரின் நெஞ்சைத் தடவிவிட்டபடி நின்றார்.
டாக்டர், காபி குடித்து முடித்து, கூலாக தன்னுடைய பேப்பர்பேடை எடுத்து 30 பவுண்ட்ஸ் பில் எழுதி பெர்னார்ட்ஷா கையில் கொடுத்தார்.
ஷா, சிரித்துக் கொண்டே டாக்டரைப் பார்த்து, “என்ன டாக்டர் இது? எனக்கு வைத்தியம் பார்க்க வந்த உங்களுக்கு நெஞ்சுவலி வந்து நான்தானே பணிவிடை செய்தேன். எனக்கேப் பில் எழுதி தருகிறீர்களே?” எனக் கேட்டார்.
அதற்கு டாக்டர், “உங்களுக்கு பார்த்த வைத்தியக்குத்தாங்க இந்த ஃபீஸ்...” என்றார்.
மீண்டும் டாக்டர் சொன்னார்:
“போனில் என்னிடம் என்னவெல்லாம் பிரச்சினை சொன்னீர்கள்... "எழுந்து நடக்க முடியவில்லை" என்றீர்கள். இப்போது ஓடோடி வந்தீர்கள். "உங்களுக்கேக் காபி போட்டுக் கொள்ள முடியவில்லை" என்றீர்கள். இப்போது எனக்கும் காபி போட்டு தந்தீங்க. "தொடர்ந்து நிற்கவே முடியலைன்னு" சொன்னீங்க. இப்போ அரைமணி நேரமா நிற்கிறீர்கள்” என்று கூறிய டாக்டர் மேலும் தொடர்ந்தார்.
“அப்பொழுது, உங்கள் கஷ்டத்தை மட்டும் பார்த்தீர்கள்; அதனால் அவை பெரிதாக தெரிந்தன. இப்போது எனது கஷ்டத்தையும் சேர்த்துப் பார்த்ததால் உங்களின் கஷ்டம் மறந்துவிட்டது. இதுவும் எனது ஒரு வகையான ட்ரீட்மெண்ட்...தான், அதற்குத்தான் இந்த பீஸ்...” என்றார்.