தொடருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த வணிகர் ஒருவர், தனது அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரின் சாதியைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.
அந்தப் பெரியவரோ சாதியைக் குறிப்பிடுவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார்.
வணிகரும் விடாமல் வற்புறுத்தவே, "நான் ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவனாக இருந்திருந்தால் கூறியிருப்பேன்" என்றார் .
அதைக் கேட்டவுடன் "ஓ, நீங்கள் கலப்பு சாதியா...? உங்கள் பெற்றோர்கள் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களா?" என்று கேட்டார் அந்த வணிகர்.
"சரி… நீங்கள் இவ்வளவு துரம் கேட்பதால் என் சாதியைச் சொல்கிறேன்… கேளுங்கள்" என்றார் பெரியவர்.
"காலையில் நான் என் வீட்டினை,கழிவறைகளைச் சுத்தம் செய்யும் போதும் நான் முழுமையான சூத்திரனாகவும், எனக்கு நானே முகச்சவரம் செய்யும் போது நாவிதனாகவும், எனது காலணிகளை மெருகூட்டும் போது அருந்ததியராகவும், துணி துவைக்கும் போது வண்ணாராகவும், கணக்கு எழுதும் போது வணிகராகவும், கல்லூரியில் பாடம் நடத்தும் போது பிராமணனாகவும் ஆகிறேன். தற்போது தாங்களேச் சொல்லுங்கள். நான் எந்த சாதி? "என்று கேள்வி எழுப்பினார் பெரியவர்.
அதற்குள் பெரியவர் இறங்க வேண்டிய தொடருந்து நிலையம் வந்தது. அந்தப் பெரியவரை வரவேற்க ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் காத்திருந்தது.
அவர் இறங்கியவுடன், “ஆச்சாரிய கிருபளானி ஜிந்தாபாத்” என்று சொல்லி அவருக்கு மாலையிட்டனர் .
அந்த காட்சியைப் பார்த்து அந்த வணிகர் பிரமித்து நின்றதோடு, தனது தவறுக்கு வருந்தினார்.