தாயின் அறிவுரையைப் பின்பற்றிய விஞ்ஞானி!

சி. வி. இராமன் இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார். இருந்தாலும், அவர் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை என்பதால் அவரது தாயார் மிகவும் வருந்தினார்.
ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டு வரச் சொல்லிக் காகிதங்களை கீழே போட்டுக் கண்ணாடியை வெய்யிலில் காட்டினார்.
பூதக்கண்ணாடியைப் பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு தனது கைகளைப் பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு நீட்டினார்.
ஒளியின் ஒரு முனையில் தீ காகிதத்தை எரித்தது. இதைக் கவனத்துடன் பார்த்த சி. வி. இராமன் ஆச்சரியப்பட்டார்.
உடனே அவரது தாயார், ஒருமுகப்படுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகிக் காகிதத்தை எரிக்கும். ஆனால் ஒருமுகப்படுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது.
அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகப்படுத்தினால் எந்த வேளையிலும் வெற்றி அடையலாம் என்று அவருக்கு அறிவுரை கூறினார்.
அன்று முதல் தாயின் அறிவுரையை மனதிற் கொண்டு மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களைச் செய்ய தொடங்கிய இராமன், பிற்காலத்தில் உலகமே போற்றும் சர் சி வி இராமன் என்று ஆனார்.
- கணேஷ் அரவிந்த்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.