அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகர வீதியில், சுவாமி விவேகானந்தர் கையிலே ஒரு தடியுடன் உடலின் மீது ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி சுவாமிஜியின் தோற்றத்தைக் கண்டு, மிகவும் சிரித்ததோடு மட்டுமின்றி கேலியாகவும் பேசினார்.
விவேகானந்தர் அதைக் கேட்டுச் சிறிதும் கோபப்படவில்லை.
அவர் சிரித்தபடி, “அம்மா, எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் இருக்கிறது” என்று அப்பெண்ணிடம் சொல்லி விட்டு அங்கிருந்து நகன்றார்.
அந்தப் பெண் அவரின் பதிலுக்கு ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள்.