ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாகச் சொல்லிக் கொடுத்தான்.
அந்தக் கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாகத் தன் மகன் கேட்கும்படி படித்தாள்.
"உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது. அவனுக்குக் கற்பிக்கத் திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை. அதனால் தயவு செய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது"
பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார், எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.
இப்படி இருக்கையில், ஒருநாள் தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது அவர் தன் அம்மாவிடம் முன்பு பள்ளியிலிருந்து கொண்டு வந்து கொடுத்த கடிதம் கண்ணில் பட அதை எடுத்து படித்துப் பார்த்தார்.
அதில் இப்படி எழுதியிருந்தது.
"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்"
இதைப் படித்த எடிசன் கதறி அழுதார்.
பின் அவரது நாட்குறிப்பில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
“மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்”