வகுப்பு முடிய சற்று நேரம் இருந்தது.
'உலகின் சிறந்த கணித மேதைகளால் தீர்க்க முடியாத இரண்டு கணக்குகளை கரும்பலகையில் எழுதியுள்ளேன். இந்தக் கணக்குகள் இரண்டும் இன்றும் தீர்க்க முடியாத புரியாத புதிராகவே உள்ளது' என்றார் ஆசிரியர்.
ஆசிரியர் எழுதும் போது அந்த மாணவன் வகுப்பில் இருக்கவில்லை. சற்று தாமதமாய் அந்த மாணவன் வகுப்பிற்கு வந்தான். அதற்குள் வகுப்பு முடிந்து விட்டது.
அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள் என்று நினைத்துக் குறித்துக்கொண்டு போனான், அந்த மாணவன்.
மறுநாள் வகுப்பிற்கு விடையுடன் வந்தான் அவன்.
ஆசிரியர் உட்பட அந்தப் பள்ளிக்கூடமேத் திகைத்து நின்றது.
அந்தச் சம்பவத்தாலேயே அந்த மாணவன் உலகப் புகழ் பெற்றான்.
அந்த மாணவன் பெயர் 'ஜோர்ஜ் டாந்த்ஸிக்' (George Dantzig)
அந்தச் சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம், “அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது. எனவே என்னால் முடிந்தது”
கணிதம், கணனி விஞ்ஞானம், பொருளியல், புள்ளியியல் போன்ற துறைகளில் பல சாதனைகளைச் செய்த அந்த அமெரிக்க மேதை, அவரது 90 ஆவது வயதில் 13-5-2005 அன்று காலமானார்.