அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்காக இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார் கொலம்பஸ்.
பல நாட்கள் ஆகியும் கரை எதுவும் தென்படவில்லை.
இருபது நாட்கள் கடந்த நிலையில் இன்னும் இருபது நாட்களுக்குத்தன உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பசிடம், ''இப்போது திரும்பினால், பிரச்சினை இல்லாமல் ஊர் திரும்பி விடலாம். கடலில் வீணாக உயிர்விட வேண்டாம்'' என்றனர்.
ஆனால், கொலம்பஸ் முன் வைத்த காலைப் பின் வைக்கத் தயாராயில்லை. தமது பாதை முன்னோக்கியேத் தவிர, பின்னோக்கி அல்ல என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.
கொலம்பஸின் பேச்சைக் கேட்டால் கடலில்தான் எல்லோருக்கும் சமாதி என்று கூறி மாலுமிகள் கொலம்பசுக்கு எதிராகத் திரும்பினர்.
கப்பலின் பொறுப்பை அவர்கள் ஏற்கத் தீர்மானம் செய்து விட்டார்கள்.
அப்போது கொலம்பஸ் ஒரு முக்கியமான முடிவெடுத்தார். மனதுக்குள் சிறு கணக்கு ஒன்று போட்டார்.
அவர் மாலுமிகளிடம், ''நண்பர்களே, உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. இருபது பேருக்கு இருபது நாட்களுக்குத் தேவையான உணவு இருக்கிறது. ஒருவர் குறைந்தால், கூடுதலாக ஒரு நாளைக்கு உணவு இருக்கும். எனவே இன்னும் ஒரு நாள் கப்பலை முன்னோக்கிச் செலுத்துங்கள். அதற்குள் கரை தென்படாவிட்டால் என்னைக் கொன்று விட்டுத் திரும்புங்கள். அப்போது உங்களுக்கு ஊர் போய் சேரும்வரை உணவு சரியாக இருக்கும்'' என்றார்.
கொலம்பஸ் அப்படிச் சொன்னதும் மற்றவர்களுக்கு அதிர்ச்சி.
ஒன்றும் சொல்லாது கப்பலை முன்னோக்கிச் செலுத்தினர். அடுத்த சில மணி நேரங்களிலேயேக் கரை தென்பட்டதும் எல்லோரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
இன்றும் கொலம்பஸின் பெயர் உலகில் நிலைத்திருப்பதற்குக் காரணம், கொலம்பஸ் சிக்கலான தருணத்தில் எடுத்த சரியான முடிவுதான்.