சுபி ஞானி ரபியாவிடம் ஒருவர் கேட்டார்,
“உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன?”
ரபியா, “நான்கு அங்குலம்?” என்றார்.
கேட்டவர்க்கு இந்த விசித்திரமான பதிலின் பொருள் தெரியாமல் விழித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரே சொன்னார்,
“காதுக்கும், கண்ணிற்கும் உள்ள இந்த இடைவெளிதான் பொய்க்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசம். ஏனெனில் காதால் கேட்பது பொய். கண்ணால் பார்ப்பதுதான் மெய்”
இதில் நமது திருவள்ளுவர் கருத்து மிகத் தெளிவானதாக இருக்கிறது.
“கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்”