நீண்ட போராட்டத்திற்கு பிறகு தென்னாப்பிரிக்கக் குடியரசுத்தலைவரான நெல்சன் மண்டேலா, ஒருநாள் தனது முதல் கட்டப் பாதுகாப்புப் படையினருடன் நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தார்.
அவரவர் தமக்கு விரும்பிய உணவுக்குச் சொல்லிவிட்டு அமர்ந்திருந்தனர்.
அப்போது மண்டேலாவிற்கு எதிர் மேசையில் ஒருவர் தனியாக அமர்ந்து தனது உணவுக்காகக் காத்திருந்தார்.
அதைப் பார்த்த மண்டேலா, தனது பாதுகாப்புப் படைவீரர் ஒருவரை அனுப்பி அவரைத் தன்னுடன் அமர்ந்து உணவருந்த அழைத்து வரச் சொன்னார்.
அவரும் மண்டேலாவுடன் வந்தமர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து சென்றார்.
அப்போது மண்டேலாவின் பாதுகாப்புப் படை வீரர், "அந்த மனிதர் பார்க்க நோய்வாய்ப்பட்டவராகத் தெரிந்தார், உண்ணும் போது அவரின் கைகள் மிகவும் நடுங்கின" என்றார்.
அதனைக் கேட்ட மண்டேலா, “அது உண்மை அல்ல வீரனே... நான் முன்பு சிறையிலிருந்த போது இந்த மனிதர் என் சிறைக்காவலராக இருந்தார். என்னை அடிக்கடிக் கொடுமைப்படுத்தும் போதெல்லாம் நான் கூக்குரலிட்டு, களைத்துப் போய் கொஞ்சம் தண்ணீர் அருந்தக் கொடுங்கள் என்று கேட்பேன். அப்போது இந்த மனிதர் என்னிடம் வந்து என் தலை மேல் சிறுநீர் கழித்து விட்டுச் செல்வது வழக்கம். அவர் தென் ஆபிரிக்க ஜனாதிபதியான என்னை இப்போது இனங்கண்டு விட்டார். நான் இப்போது அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று நினைத்தே அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அது என்னுடைய பழக்கம் அல்ல. பழிக்குப்பழி வாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதரையோ கட்டியெழுப்பாது. அதே நேரம் சில விஷயங்களில் மனதில் தோன்றும் சகிப்புத்தன்மை பெரிய சாம்ராஜ்யங்களையே உருவாக்கும்' என்றார்.