ஒரு சிறுவன் ஒரு முடிதிருத்தும் கடைக்குள் நுழைந்தான்.
அப்போது அந்த கடைக்காரர் அங்கிருந்த வாடிக்கையாளரிடம் மெதுவாகச் சொன்னார், “இந்த உலகிலேயே இவன்தான் மிகப் பெரிய முட்டாள் குழந்தையென்றும், அதை இப்போதே நான் உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்றார்.
பின்அந்தக் கடைக்காரர் ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயத்தையும், மறுகையில் இரண்டு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு அந்தப் பையனை அழைத்து, “உனக்கு எது வேண்டும்?” என்று கேட்டார்.
அந்தப் பையன் இரண்டு ரூபாயைப் பெற்றுக்கொண்டு சென்றான்.
அந்த கடைக்காரர் சொன்னார், “பார்த்தீர்களா... இவன் முன்னேறப்போவதே இல்லை...” என்றார்.
கடையிலிருந்து சென்ற அந்த வாடிக்கையாளர், அந்தப் பையன் ஒரு ஐஸ்கீரிம் கடையிலிருந்து வருவதைக்கண்டார்.
அவர் அவனிடம் சென்று, “ஒரு கேள்வி கேட்கலாமா?” என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பையன் பதில் எதுவும் கூறாமல் சரி என்று தலையசைத்தான்.
“அந்தக் கடைக்காரர் ஐந்து ரூபாய், இரண்டு ரூபாய் என்று எடுத்துக் காண்பிக்கும் பொழுது, ஏன் நீ குறைவான இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டாய்?” என்று அவர் கேட்டார்.
அந்தப் பையன் ஐஸ்கிரீமை நக்கிக்கொண்டே சொன்னான்:
'நான் ஐந்து ரூபாயை எடுத்திருந்தால், அடுத்து அந்த முட்டாள் கடைக்காரர் என்னை ஏமாற்ற முடியாது என்று நினைத்து விடுவார்... எனக்கு அவரிடமிருந்து இப்படித் தொடர்ந்து கிடைக்கும் இரண்டு ரூபாய் கிடைக்காமல் போய்விடுமே...”
எப்பொழுது மற்றவர்களை முட்டாள் என்று எண்ணுகிறோமோ, அப்போதே நாம் முட்டாளாகி விடுகிறோம்.