ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டார்.
“ஏன் வாகனங்களில் நிறுத்தக் கருவி வைக்கப்பட்டுள்ளன?”
"வாகனத்தை நிறுத்துவதற்கு"
“வேகத்தைக் குறைப்பதற்கு"
“மோதலைத் தவிர்ப்பதற்கு"
"மெதுவாக செல்வதற்கு"
"சராசரி வேகத்தில் செல்வதற்கு"
என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.
அப்போது ஒரு மாணவன் மட்டும் “வேகமாக ஓட்டுவதற்கு" என்றான், அந்தப் பதிலைச் சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர்.
ஆனால் அந்த ஆசிரியர், அந்தப் பதிலேச் சிறந்த பதில் என்றார்.
“ஆமாம்... நிறுத்தக் கருவிகள் நாம் வேகமாகச் செல்வதற்காகத்தான் வைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் நிறுத்தக் கருவிகள் இல்லை என்றால் வாகனத்தை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. நிறுத்தக் கருவிகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாகச் செல்வதற்கான தைரியத்தைக் கொடுக்கிறது. இதுபோலத்தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தைக் குறைக்க வந்ததாக நினைத்து, நம் மனதைச் சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளைச் சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம். உங்கள் வாழ்க்கையில் வரும் “நிறுத்தங்கள்” உங்கள் வேகத்தைக் குறைப்பதற்கு அல்ல, நீங்கள்வேகமாகச் செல்வதற்குத்தான். தடைகளைக் கடந்து விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்” என்று அந்த ஆசிரியர் சொன்னார்.