தனது விலை உயர்ந்த காரை தனது வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்தார் ஒருவர்.
அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது.
அதைப் பார்த்த அவர் சிரித்தார்.
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் உதவியாளர் " ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து விரட்டி விடாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்களே..." என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
அதற்கு அவர் மிகவும் அமைதியாக, "அந்த நாய், அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. அதைப் பற்றிச் சொன்னாலும் அதற்குப் புரியாது" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இது போலத்தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள், உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். ஏனென்றால், சிலருக்கு நாம் என்னதான் அறிவுரை சொன்னாலும் திரும்பத்திரும்ப அவர்களுக்கு அது புரியாது. எனவே, அதைச் சிரித்துக் கொண்டே கடந்து போங்கள்.
உங்கள் கடமை எதுவோ அதைச் சரியாக செய்யுங்கள்.