இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

துணையின்றி முடியுமா?


வல்லவன்பட்டினம் என்ற ஊரில் திண்ணன் என்றொரு பலவான் இருந்தான். திண்ணன் என்ற பெயரைக் கேட்டாலே அந்த வட்டாரத்தில் உள்ள தீயவர்கள் அஞ்சுவார்கள்.

திண்ணன் நல்ல உடற்கட்டு உடையவன். நாள்தோறும் விடாமல் செய்து வரும் பயிற்சினால் அவன் தன் உடல் வலுவைக் காப்பாற்றி வந்தான். வீரர்களுக்கு உரிய பல அருங்கலைகளில் அவன் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான். மற்போரிலும், சிலம்பம் ஆடுவதிலும் அவன் மிகுந்த புகழ் பெற்றிருந்தான்.

திண்ணன் இருந்ததால் வல்லவன்பட்டினத்தில் திருட்டுப் பயமே அற்றுப் போயிருந்தது. அவன் கைப்பிடியில் சிக்கி உயிரை விட்டு விடக் கூடாதென்று திருடர்கள் அந்தப் பக்கமேத் தலை காட்டாமல் இருந்தார்கள்.

திண்ணனிடம் ஒருநாள் ஒரு மனிதன் வந்து சேர்ந்தான். அவன் தன் பெயர் பஞ்சப்பன் என்று கூறினான். இந்த பஞ்சப்பன் என்ற மனிதன் பார்ப்பதற்கே ஒடிந்து போன முருங்கை போல் தோற்றமளித்தான். ஊதினால் சாய்ந்து விடும் புல்லரும்பு போல் இருந்தான். எலும்பே வடிவமாக இருந்த அந்த மனிதன், திண்ணனிடம் வந்து, தன்னை வைத்துக் காப்பாற்றும்படி வேண்டினான்.

திண்ணனுக்குப் பஞ்சப்பனைப் பார்த்த போது இரக்கமாக இருந்தது. தான் காப்பாற்றாவிட்டால் அவன் இறந்து போக வேண்டியதுதான் என்று எண்ணினான். ஆகவே, அவனைத் தன்னிடத்தில் வைத்துக் கொண்டான்.

பஞ்சப்பனுக்காகத் திண்ணன் அதிகமாகச் செலவு செய்ய வேண்டி இருக்கவில்லை. ஓர் இட்டிலிக்கு மேல் அவனால் சாப்பிட முடியாது. இரண்டு கவளம் சோற்றுக்கு மேல் அவன் தொண்டையில் இறங்காது.

உணவு செல்லாததால் உடலிலும் வலுவில்லாமல் இருந்தான் பஞ்சப்பன். பிறவியிலேயே அவனுக்கு இந்த மாதிரிக் கோளாறு இருந்ததால், பின்னால் அவனால் தன் உடலை வளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

பஞ்சப்பன் வலிமை சிறிதும் அற்றவனாக இருந்தும், அவன் வந்த பிறகு, திண்ணனின் புகழ் பெருகியது. புகழ் காரணமாக அவனுக்குச் செல்வமும் குவிந்தது. எல்லாம் பஞ்சப்பன் வந்த நல்ல நேரத்தின் பலன்தான் என்று திண்ணன் மனத்திற்குள் எண்ணிக் கொண்டான்.


திண்ணனுடைய புகழ் பெருகுவதற்குப் பஞ்சப்பனும் ஒரு வகையில் ஒரளவு உதவியாயிருந்தான் என்று சொல்லலாம். ஓங்கி வளர்ந்த திண்ணனுக்குப் பக்கத்தில் பஞ்சப்பன் நிற்கும் போது, திண்ணனுடைய உடலின் தோற்றம் மிகுந்த எடுப்பாகத் தோன்றியது வீமசேனன் மாதிரி அவன் காட்சி அளித்தான்.

திண்ணன் பின்னால் வரும்போது, பஞ்சப்பன் சிறிது தூரம் முன்னால் கட்டியங் கூறிக் கொண்டு போவான்.

“மாவீரர் திண்ணன் வருகிறார்! மல்லிலே வெல்லும் மாவீரர் வருகிறார் ! யானையை அடக்கும் ஐயன்! சிங்கத்தை வெல்லும் சீரியர் ! புலியைப் புறங்கானச் செய்யும் போர்வீரர் ! மாவீரர் திண்ணன் வருகிறார் !என்று உரத்த குரலில் அவன் கட்டியங் கூறிக் கொண்டு செல்வதைப் பார்த்தாலே கலங்க வேண்டும்.

பஞ்சப்பன் கட்டியங் கூறுவதோடு மட்டும் தன் வேலையை நிறுத்திக் கொள்ளவில்லை. திண்ணணுடன் போட்டியிட வரும் வீரர்களை ஆராய்வதிலும், அவர்கள் கையாளும் சூழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வதிலும் திறமை மிக்கவனாக இருந்தான். அவனால் திண்ணன் பலமுறை முன்னெச்சரிக்கையடைந்து போட்டிகளிலே வெற்றி பெற்றிருக்கிறான்.

ஒரு முறை திண்ணனோடு மல் புரிய வந்த ஒரு வீரன் தன் கையில் மிளகாய்ப் பொடியைத் தடவிக் கொண்டு வந்திருந்தான். போரிட்டுக் கொண்டிருக்கும்போதே, தன் கையைத் திண்ணனுடைய கண்ணில் வைத்து அழுத்தித் தேய்த்தால், கண் எரிச்சல் தாங்க முடியாமல் திண்ணன் திணறுவான்; அப்போது, தான் வெற்றியடைந்து விடலாம் என்று அந்தப் போர் வீரன் எண்ணியிருந்தான். ஆனால், பஞ்சப்பனுடைய மூக்கில் அந்த மிளகாய்ப் பொடியின் வாசம் பாய்ந்துவிட்டது. அவன் மல் புரிய வந்த வீரனைக் கையை நன்றாகத் தேய்த்துக் கழுவி விட்டு வரும்படி கட்டளையிட்டான். அன்று போரில் திண்ணனே வென்றான்.

மற்றொரு முறை போர் புரிய வந்த வீரன் ஒருவன், தன் காற் பெருவிரல் நகங்களை ஊசி போல் கூராகச் சீவி விட்டுக் கொண்டு வந்திருந்தான். மல்லுக்கட்டி நிற்கும்போது பெருவிரலால் திண்ணனைக் குத்தி வருந்தச் செய்து எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பது அவன் திட்டம். பஞ்சப்பனின் கூரிய கண்கள் அந்தக் கூரான நகங்களைக் கண்டுபிடித்து விட்டன. அவன் உடனே ஒரு சிறு பேனாக் கத்தியை எடுத்து வந்து அந்தக் கூரான நகங்களைச் சீவியெறிந்துவிட்டான். அத்தோடு வந்த வீரனின் திட்டம் தவிடு பொடியாகி விட்டது. அவன் மல்லுக்கே நில்லாமல் ஓடி விட்டான்.

இப்படிப் பலமுறை திண்ணன் வெற்றி பெறப் பஞ்சப்பனுடைய அறிவு பயன்பட்டிருக்கிறது.

ஆனால் திண்ணன் இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. ஒருநாள், பஞ்சப்பன் ஏதோ தவறு செய்து விட்டான். அந்தத் தவறு திண்ணனுக்குப் பெரிதாகப்பட்டது. அதனால் கோபமடைந்த திண்ணன், பஞ்சப்பனைத் தன் வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டான்.

பஞ்சப்பனும் திண்ணனுடைய கோபத்தைப் பொறுக்க முடியாமல் ஓடி விட்டான். அவன் போனது பற்றித் திண்ணன் சிறிது கூடக் கவலைப்படவில்லை. தனக்கு ஒரு மெய்க்காப்பாளன் போலவும், சிறந்த அமைச்சன் போலவும் விளங்கிய ஒருவனை விரட்டி விட்டோமே என்று அவன் சிறிது கூட எண்ணிப் பார்க்கவில்லை.


பஞ்சப்பன் போன பிறகு, அயலூரிலிருந்து வல்லவன்பட்டினத்துக்கு ஒரு பயில்வான் வந்திருந்தான். அவன் தன்னுடன் போட்டிக்கு வரத் திண்ணன் ஆயத்தமா? என்று சவால் விட்டழைத்தான். எந்தச் சவாலையும் திண்ணன் மறுத்துத் தள்ளியதில்லை.

மற்போர் நடைபெற ஏற்பாடாயிற்று. ஊர்ப் பொதுவெளியில் போட்டி நடந்தது. நூற்றுக் கணக்காண மக்கள் போட்டி காணக் குழுமியிருந்தார்கள்.

அயலூர்ப் பயில்வானும், திண்ணனும் அந்த மல்லரங்கில் வந்து நின்றது இரண்டு பெரிய யானைகள் ஒன்றோடொன்று மோதிச் சண்டையிடமுனைந்து நிற்பது போல் இருந்தது.

இரண்டு பேரும் தோள் தட்டித் தொடை தட்டி ஆர்ப்பரித்துப் பாய்ந்தனர். ஒருவரையொருவர் கையினால் பிடித்துக் கையை முறுக்கினர். தோளிலே தோளையழுத்திச் சாய்க்க முயன்றனர். கட்டிக் கொண்டு புரண்டனர்.

கட்டி புரளத் தொடங்கியவுடன் இடுப்பில் பல ஊசிகள் குத்துவதைப் போல் உணர்ந்தான் திண்ணன். வலி தாளாமல் பிடி நழுவியவுடன் திண்ணனைக் கீழே தள்ளிச் சாய்த்து விட்டான் அந்தப் பயில்வான். தவறான ஆட்டம் என்று சொல்லத் திண்ணன் வாய் திறக்கு முன் அந்தப் பயில்வான் தன் கையைத் திண்ணனுடைய வாய்க்குள் திணித்து அவனைப் பேச விடாமல் செய்து விட்டான்.

திண்ணன் கீழே சாய்ந்துவிட்டதை, அவ்வளவு விரைவில் சாய்ந்து விட்டதைக் கண்டு உள்ளுர் மக்கள் வருந்தினர். நல்லதொரு பந்தயத்தைப் பார்க்க வந்த பலர் சப்பென்று போன இந்தப் போட்டியைக் கண்டு ஏமாற்றமடைந்தனர். தீயவர்கள் சிலரோ, திண்ணன் சாய்ந்ததைப் பெருவெற்றியாகக் கருதிச் சீட்டியடித்துக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

அயலூர்ப் பயில்வானே வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவனுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

திண்ணன் என்றுமில்லாத அவமானத்துடனும், குன்றிய மனத்துடனும் வீட்டுக்குத் திரும்பினான்.

திண்ணனை எளிதாக வெல்ல அந்த அயலூர்ப் பயில்வான் செய்த சூழ்ச்சி இதுதான். தன் இடைத் துணிக்குப் பின்னால் பல சிறு ஊசிகளைப் பொருத்தியிருந்தான். உடலோடு உடல் சேர்த்து அழுத்தும் போது எதிரியின் உடலில் அவை குத்துமாறு அமைக்கப்பட்டிருந்தன ஊசிகள். இந்தச் சூழ்ச்சியை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

இடையில், சூழ்ச்சிக்கு ஆளான திண்ணனும் அப்போதே சொல்ல முடியவில்லை. அப்போதே சொல்லியிருந்தால், அந்த அயலூர்ப் பயில்வான் திண்ணனிடம் தப்பினாலும் ஊர் மக்களிடம் தப்பிப் போயிருக்க முடியாது.

வெற்றி தோல்வி அறிவிக்கப்பட்ட பின்னர், ஏற்பட்ட ஆரவாரத்தில் திண்ணன் தன் சொல் ஏறாது என்று கண்டு கொண்டான். பேசாமல் வீடு திரும்புவதைத் தவிர, வேறு செய்யத்தக்கது ஒன்றுமில்லை.


வீடு திரும்பும்போது, தன்னுடன் பஞ்சப்பன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று திண்ணன் எண்ணினான். இம்மாதிரியான சூழ்ச்சிகளைப் பஞ்சப்பன் எளிதாகக் கண்டுபிடித்து விடும் திறமையுள்ளவன். அவனைக் கோபித்து வீட்டை விட்டுத் துரத்தியது தன் தவறு என்று உணர்ந்தான் திண்ணன். அன்றே அவனைத் தேடத் தொடங்கினான்.

கருத்துரை: எவ்வளவு வலிமையுள்ளவர்களானாலும், துணையில்லாமல் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்ய முடியாது.

நன்றி:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா எழுதிய “நல்வழிச் சிறுகதைகள்-2” நூல்.

தொகுப்பு: பா. காருண்யா

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p160.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License