இரவு நேரம். அன்றைக்கு கடுமையான வேலைகள் இருந்ததால் தாமதமாக இரவு உணவைச் சமைத்தாள் அம்மா. சுட்ட தோசைகளையும் சட்னி சாம்பாரையும் முன் வைத்தாள் அம்மா.
அதில் சில தோசைகள் மிகவும் கருகியிருந்தன. நன்றாக இருந்த தோசைகளை அம்மாவிற்கும், மகனுக்கும் போட்டுவிட்டு கருகிய தோசைகளை தான் எடுத்துக் கொண்டார் அப்பா.
அந்தக் கருகிய தோசைகளை மகனுடன் இனிமையாக அன்றைய நிகழ்வுகளை பேசிக்கொண்டே ரசித்து ருசித்து சாப்பிட்டார் அப்பா.
சாப்பாடு முடிந்தவுடன் அம்மா, அப்பாவிடம் தோசை கருகிப் போனதற்காக மன்னிப்பு கேட்டார். ஆனால் அப்பாவோ, “எனக்கு கருகிய தோசைகள்னா ரொம்ப பிடிக்கும்மா...” என்று கனிவோடு கூறினார்.
அன்றிரவு தூங்கும் முன் மகன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா உங்களுக்கு உண்மையாலுமே கருகிய தோசை பிடிச்சிருந்ததா?”
அப்பா அதேப் புன்னகையுடன் சொன்னார், “உங்கம்மாவுக்கு இன்னைக்கு ரொம்ப அதிகமான வேலை... அது அவங்களை ரொம்ப களைப்பா ஆக்கிடுச்சு... ஆனால், இந்தக் கருகின தோசை என்னை என்ன செஞ்சிடப் போவுது!”
வாழ்க்கை குறைபாடான விஷயங்களாலும், குறையுள்ள மனிதர்களாலும் நிரம்பியுள்ளது... எல்லாராலும் எல்லாச் சமயங்களிலும் சிறந்தவராக நடந்துகொள்ள முடியாது. நம்மால் அப்படி நடந்து கொள்ள முடியாத போது, நாமும் மற்றவர்களின் வேறுபாடுகளை ஒதுக்காமல் விரும்பி அதைப் போற்ற வேண்டும்.
இது ஒரு நலமான, வளரும், நீடித்த உறவினை உருவாக்குவதற்கான முக்கியப் படியாகும்.