அரசன் ஆனையும் பூனையும் தின்பவனா?
அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்ல புலவர் ஒருவர் அரசவைக்குள் நுழைந்தார்.
அங்கு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசரைப் பார்த்து, "பாராளும் மன்னனிவன் ஆனையும் தின்பான்; பூனையும் தின்பான்" என்றார்.
அரசனுக்கு அதிர்ச்சி. "நிறுத்தும் புலவரே! இதுதான் புகழ்ந்து பாடும் லட்சணமா?" என்று கோபமுற்றார்.
அதற்குப் புலவர், "அரசே கோபமடையாதீர்கள். தாங்கள் ஆ+நெய் அதாவது பசுவின் நெய்யையும், பூ+நெய் அதாவது பூவிலிருந்து கிடைக்கும் தேனையும் உண்பீர்கள் என்றுதான் சொன்னேன். தவறு இருப்பின் வருந்துகிறேன்" என்றார்.
அரசன் கோபம் குறைந்து அந்தப் புலவருக்குப் பரிசு அளித்து மகிழ்ந்தான்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.