இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

தன்னைத் தாழ்த்துபவன் உயர்கிறான்!


எருசலேம் பெரிய கோவிலில் பஸ்கா பண்டிகை நடைபெற்றது.

வியாழன் இரவு, தாம் கைது செய்யப்படக் கூடும் என்று இயேசு எதிர்பார்த்தார். சாதாரணமாக, பஸ்கா பெருவிழா காலத்தில், வீடுகளில் பஸ்கா விருந்து நடைபெறும். இயேசுவும் சீடர்களும் தங்கியிருந்த மேல்மாடியில் பஸ்கா விருந்து ஆயத்தமாக இருந்தது.

யூதர்கள் நம்மைப் போல, தரையில் உட்கார்ந்து சாப்பிட மாட்டார்கள், யூதர்கள் படுத்துக் கொண்டு சாப்பிடுவர். பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு சாப்பிடுவர். இப்படி அவர்கள் சாப்பிடுவதால் சாப்பாட்டுக்கு முன்பு கைகளையும் பாதங்களையும் அலம்பிக் கொள்வர். சாப்பிடுவதற்கு முந்தி பாதங்களை அலம்ப வேண்டும் என்பது அவர்கள் மதச்சட்டம் சார்ந்த ஒழுங்கு.

பஸ்கா விருந்து ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. இயேசு வீட்டுச் சொந்தக்காரரோடு கீழே பேசிக் கொண்டிருந்தார்.

இயேசு வந்ததும் விருந்து சாப்பிட வேண்டியதுதான் பாக்கி. இந்த நேரத்தில், சீடர்களுக்குள் ஒரு சின்ன தகராறு.

யூத வழக்கப்படி, விருந்து நடக்கும் போது பிரதான விருந்தாளி ஒருவர் இருப்பார். பிரதான விருந்தாளிக்கு வலது பக்கமும் இடது பக்கமும் அமர்ந்து விருந்து சாப்பிடுபவர்கள், மற்ற விருந்தாளிகளை விட பெரியவர்களாக மதிக்கப்படுவர். இயேசு பிரதான விருந்தாளி! இயேசுவுக்கு இடப்பக்கம் யாருக்கு... இயேசுவின் வலது பக்கம் யாருக்கு. அந்த இடத்தில் உட்காரும் தகுதி பெற்ற பெரியவர் யார்? இதில்தான் தகராறு ஆரம்பித்தது.



"நான்தான் வயதில் பெரியவன். எனக்கு தான் வலது பக்கம்,'' என்றார் பெரியவர் பேதுரு.

"நம்ப கூட்டத்திலேயே நான் தான் கடைக்குட்டி ஆகவே நான்தான்,'' என்றான் எல்லோரிலும் இளையவனாகிய யோவான்.

"நம் கூட்டத்தின் பணப் பொறுப்பு என்னிடம்... எனக்குத்தான் முதலிடம் என்றான”,' யூதாஸ்.

இப்படி ஆளுக்கு ஆள் எனக்கு தான் எனக்குத்தான் என்று சொல்ல ஆரம்பித்து ஏதோ அடிதடி நடப்பதுபோல கூச்சல் கேட்டது மேல் அறையில்.

இயேசு மாடிப்படி ஏறி வந்தார். இவர்கள் போட்ட கூச்சலில் இயேசுவுக்கு விஷயம் விளங்கியது. இயேசு மாடி அறைக்குள் நுழைந்தார். கூச்சலும் குழப்பமும் அடங்கியது. நிசப்தம் நிலவியது. யாரும் எதுவுமே பேசவில்லை.

உள்ளறைக்குப் போனார். மேலங்கியைக் கழற்றினார். சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இயேசு என்ன செய்கிறார்?

யாருக்குமே தெரியவில்லை! என்ன என்று கேட்க யாருக்கும் துணிவும் வரவில்லை.

அறைக்குள் போன இயேசு திரும்பி வந்தார். ஒரு நீளமான துணி அவர் கையில் இருந்தது. அந்தத் துணியின் ஒரு பகுதியை இடுப்பில் கட்டினார். இன்னொரு பகுதி நீளமாகத் தொங்கியது.

தாலமும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். இரண்டையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சீடனிடமும் போனார். கீழே குனிந்து மண்டியிட்டு தாலத்தைக் கீழே வைத்து, சீடனின் காலை எடுத்து தாலத்தில் வைத்தார். கூஜாவிலிருந்து தண்ணீர் ஊற்றி பாதங்களைக் கழுவினார். இடுப்பில் கட்டியிருந்த துணியினால் பாதங்களைத் துடைத்தார்.

இப்படி ஒவ்வொருவர் பாதங்களையும் இயேசு கழுவினார். சீடர்கள் வாயடைத்து நின்றனர். காற்றுக் கூட அசையாத மவுனம் நிலவியது. இந்த சீடர்கள்தான், யார் பெரியவன் என்று அவர்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொண்ட சீடர்கள். ஆனால், எல்லாருக்கும் பெரியவர் பிரதான விருந்தினரான இயேசு, எல்லார் பாதங்களையும் கழுவுகிறார்.



இயேசு பேதுருவிடம் வந்தார். இவர்தானே, இயேசுவுக்கு வலதுபக்கம் வேணும்ன்ணு கேட்டவரு!

இயேசு, பேதுருவின் காலைத் தொட்டவுடன், வெடுக்கென்று காலை பின்னால் இழுத்துக் கொண்டார் பேதுரு.

"ஆண்டவரே... மன்னியுங்கள். ஆண்டவரும் போதகருமாகிய தாங்கள் இந்த அற்பனின் கால்களைத் தொட்டுப் பாதங்களைக் கழுவலாமா? நான் சம்மதிக்க மாட்டேன்,'' என்று சொன்ன பேதுருவின் குரல் கம்மிவிட்டது.

இயேசு அமைதியாக திரும்பவும் பேதுருவின் பாதங்களைத் தொட்டு, கட்டாயமாக எடுத்து தாலத்தில் வைத்தார்.

"பேதுரு... உன்னை நான் கழுவ வேண்டும். இல்லையென்றால் உனக்கு என்னுடன் பங்கில்லாமல் போய்விடும...'' என்றார் இயேசு.

எல்லாருடைய கால்களையும் இயேசு கழுவித் துடைத்து முடித்தார். தாலத்தையும் ஜாடியையும் எடுத்துக் கொண்டு உள்ளறைக்குப் போனார். இடுப்பில் கட்டியிருந்த நீண்ட துணியை எடுத்துக் காயப் போட்டு விட்டு, அவருடைய அங்கியை எடுத்து அணிந்து கொண்டார். திரும்பி விருந்து நடக்கும் அறைக்கு வந்தார்.

மவுன முகம் இன்னும் கலையவில்லை. சீடர்கள் பிரமிப்பில் இருந்தனர்.



"என்னை ஆண்டவர் என்கிறீர்கள்... சிலர் போதகர் என்கிறீர்கள். என் செயலைக் கவனித்தீர்களல்லவா?

"ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் பாதங்களைக் கழுவினேனானால்... நீங்கள் ஒருவர் பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும். இதற்கான மன நிலை உங்களுக்கு இருக்க வேண்டும்."

"என்னைக் குருவாக நீங்கள் ஏற்றுக் கொண்டது உண்மையானால் குருவுக்கு மிஞ்சியவனல்ல சீடன். வேலைக்காரன் எஜமானை விட பெரியவன் ஆகிவிட முடியாதே. இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். என்னை முன் மாதிரியாக வைத்து நீங்களும் பிறருக்கு சேவை செய்து வாழுங்கள்.'' என்றார்.

சீடர்களின் தலை கவிழ்ந்திருந்தது. அவர்கள் உள்ளம் உயர்ந்திருந்தது. சேவை செய்வதில் முதல் இடம் பெற வேண்டும் என்ற உண்மையை சீடர்கள் கற்றுக் கொண்டனர்.

இயேசு தன் வாழ்நாள் முழுவதும் பணிவு, தாழ்மை, அன்பு, நேர்மை இவைகளுக்கே முன்னுரிமை கொடுத்தார். நாமும் நம்மை தாழ்த்தியவர்களாக வாழும் போது உயர்வு நிச்சயம் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

- கிறித்தவக் கதை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p30.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License