இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

காணாமல் போன சிறுவன்


ஒரு கிராமத்தில் ஐந்து முட்டாள் சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் எந்தச் செயலில் இறங்கினாலும் அதைத் திறமையாகச் செய்யாமல் கோமாளித்தனமாக எதையாவது செய்து விடுவார்கள்.

அவர்கள் ஒரு நாள் காலையில், "நம்ம ஊர் காட்டாற்றில் மீன் பிடிச்சுட்டு வருகிறோம்," என்று அவர்களின் அம்மாவிடம் சொன்னார்கள்.

"நல்ல மீனாகப் பிடித்து வாருங்கள், நான் அதை உங்களுக்குச் சுவையாகச் சமைத்துத் தருகிறேன்" என்றாள் அவள்.

"இரவுச் சாப்பாட்டுக்கு நாங்கள் பிடிச்சுட்டு வரும் மீன் தான்,"என்றான் மூத்தவன்.

"எனக்கும் மீன் ரெம்பப் பிடிக்கும். கவனமாக ஆற்றில் இறங்காமல் தூண்டில் போட்டு மீன் பிடியுங்கள். தண்ணீருக்குள் தவறி விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும் "என்று அம்மா புத்திமதி சொல்லி அனுப்பினார்.

"நான்தான் பெரியவனாக இருக்கிறேனே... அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்"என்றான் மூத்தவன்.

ஐந்து சகோதரர்களும் காட்டுக்குள் சென்றனர்.

அங்கு ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையை ஒட்டி இருந்த இடத்திலிருந்து தேவையான தூண்டிலுக்குத் தேவையான மண்புழுக்களைச் சேகரித்தனர்.

நான்கு சகோதரர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தூண்டிலில் மண்புழுவைக் கோர்த்து ஆற்றுக்குள் ஒவ்வொருவரும் தங்கள் தூண்டிலை வீசினர்.

மூத்தவன் தூண்டில் உள்ளே இழுக்கப்பட்டதால் அதை வெளியே எடுத்தான். அந்தத் தூண்டிலில் ஒரு மீன் வந்தது.

இப்படியே மற்ற சகோதரர்களும் தூண்டிலின் மூலம் மீனைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

கடைசிச் சகோதரன் மட்டும் தூண்டிலில் விழும் மீனை எடுத்துப் பாத்திரத்தில் போடும் வேலையைச் செய்தான்.

ஒரு மணி நேரம் ஆனது.

"இதுவரை மொத்தம் எத்தனை மீன் கிடைத்துள்ளன?"என்றான் மூத்தவன்.

கடைசித் தம்பி மீனை எண்ணி, "இதுவரை 15 மீன்கள் கிடைத்திருக்கிறது அண்ணா"என்றான்.

"அம்மா, இந்த மீன்களைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் "என்றான் இரண்டாவது சகோதரன்.

"நேரமாகி விட்டது. பிடித்த மீன்கள் போதும். வீட்டுக்குப் போகலாம்" என்றான் மூன்றாமவன்.

"நாம எல்லோரும் இங்கே சரியாக இருக்கிறோமா?"என்றான் நான்காமவன்.

"அஞ்சு பேர் இருக்கிறோமா என்று எண்ணிப் பார்த்து விடலாம்" என்றான் ஐந்தாவது சகோதரன்.

உடனே மூத்தவன் எண்ணத் தொடங்கினான். தனக்கு எதிரில் இருந்த சகோதரர்களை, “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு..."என்று சொல்லி நிறுத்தினான். ஒருத்தன் குறைகிறானே என்றான்.

அடுத்தவன் எண்ணிப் பார்த்தான். அவனும் “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு... அட... நான்கு பேர்தான் இருக்கிறோம்,"என்றான்.

அடுத்தவனும் அதே போல எண்ணினான். அவனுக்கும் நான்கு பேர்தான் எண்ணிக்கை வந்தது.

கடைசியாக ஐந்தாவது சகோதரனும் எண்ணிப் பார்த்து விட்டு அழ ஆரம்பித்து விட்டான்.

"அண்ணா, நாம் நான்கு பேர்தான் இருக்கிறோம். அம்மா சொன்ன மாதிரி நம்மில் ஒருவர் தண்ணீரில்தான் விழுந்திருக்கனும்,"என்று சொல்லி அழுதான்.

"ஆமாம்... நீ சொல்வது சரிதான்... நம்மில் ஒருவரைக் காணோம். வாருங்கள்... ஆத்தங்கரை ஓரமாக ஓடித் தேடுவோம். தண்ணீரில் தான் விழுந்திருக்க வேண்டும்," என்று மூன்றாமவன் அழுது கொண்டே சொன்னான்.

சகோதரர்கள் அனைவரும் இப்போது அழுது கொண்டே வெகுதூரம் ஓடிப் போய்ப் பார்த்தனர். தண்ணீர்தான் வேகமாக போய்க் கொண்டிருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் சோகமாக சகோதரர்கள் அழுது கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு சிறுமி பூக்கூடையுடன் வந்தாள்.

"ஏன் எல்லோரும் அழுகிறீர்கள்? என்ன நடந்தது? "என்று கேட்டாள்.

"நாங்கள் ஐந்து பேர் மீன் பிடித்துக் கொண்டு இருந்தோம். எங்களில் ஒரு சகோதரனைக் காணவில்லை. அவன் தண்ணீரில் தவறி விழுந்து விட்டான் போல. தேடியும் பாத்துட்டோம். அவனைக் காணவில்லை"என்று சொல்லி அழுதான்.

"நான், இப்போது எண்ணிப் பார்க்கிறேன், ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு.."என்று மூத்தவன் எண்ணினான்.

அவன் எண்ணியதை அந்தச் சிறுமி பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நீங்கள் மொத்தம் எத்தனை சகோதரர்கள்?"என்று சிறுமி கேட்டாள்.

"நாங்கள் ஐந்து பேர்கள்,"என்றான் இரண்டாமவன்.

பூக்கூடையுடன் வந்த சிறுமி புன்னகைத்தபடி, "இப்ப நான், காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துத் தருகிறேன்" என்றாள்.

"எப்படி?" என்று அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

"இந்தப் பூக்கள் உதவியுடன் கண்டுபிடிக்கலாம்" என்றாள் சிறுமி.

"பூக்கள் எப்படி உதவி செய்யும்?" அப்பாவியாய்க் கேட்டான் ஐந்தாமவன்.

"நான் உங்கள் ஒவ்வொரு " பூ" வாகக் கொடுப்பேன். நான் ஒரு பூ கொடுத்ததும் ஒன்று, இரண்டு என்று சொல்வேன். நீங்களும் அப்படியே சொல்ல வேண்டும் சரியா?"என்று சொல்லி முதலவதாக ஒருவனிடம் பூவைக் கொடுத்தாள்.

முதல் பூவை வாங்கியவன், "ஒன்று" என்றான்.

இரண்டாவது பூவை வாங்கியவன், "இரண்டு" என்றான்.

மூன்றாவது பூவை வாங்கியவன், "மூன்று" என்றான்.

நான்காவது பூவை வாங்கியவன், "நான்கு" என்றான்.

ஐந்தாவது பூவை வாங்கியவன், "ஐந்து" என்றான்.

"பார்த்தீர்களா?” உங்களில் காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துவிட்டேன்"என்றாள்.

"ஆமாம். நீ, கண்டுபிடித்துக் கொடுத்து விட்டாய்" என்று மூத்தவன் மகிழ்ச்சியுடன் கத்தினான்.

"உனக்கு மிகவும் நன்றி" என்றான் ஒருவன்.

"எங்க அம்மா இந்த மீனைக் கொண்டு போய்க் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் " என்றான் இன்னொருவன்.

"எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காணாமல் போன சகோதரனைக் கண்டு பிடித்துக் கொடுத்த உனக்கு எங்கள் பரிசாக இரண்டு மீன் தருகிறோம்"என்று மூத்தவன் அந்தச் சிறுமிக்கு இரண்டு மீன்களைக் கொடுத்தான்.



அந்தச் சிறுமியும் இரண்டு மீன்களைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக அவளுடைய வீட்டை நோக்கிப் போனாள்.

தாங்கள் பிடித்த மீன்களோடு சகோதரர்கள் ஐவரும் உற்சாகமாக வீடு திரும்பினார்கள்.

தாங்கள் பிடித்த மீனுடன் வீடு திரும்பிய மகன்களைக் கண்ட அம்மாவுக்கும் மகிழ்ச்சி.

"அம்மா, நாங்கள் யாரும் தண்ணீரில் விழவில்லை. உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் இந்தப் பூவை வைத்து எங்களை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றான் கடைசி மகன்.

காணாமல் போன சகோதரனைக் கண்டு பிடிக்க உதவியது அந்தப் பூக்கள்தான் என்று அந்த அம்மாவுக்குத் தெரியுமா?

இங்கிலாந்து நாட்டுக் கதை.

- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p62.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License