இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Children - Parable
சிறுவர் பகுதி - குட்டிக்கதை

வறுமை என்றும் நிரந்தரமில்லை!


நைஜீரிய தேசத்தை ஓர் அரசன் மிகுந்த ஆளுமையுடன் ஆண்டு வந்தான். குடிமக்கள் மட்டுமல்ல, விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தான். அவனுக்கு எக்பன்யான் என்ற மகன் இருந்தான். அவன் ஒரு நிலையில்லாத சிந்தனை உள்ளவன். அவனுக்கு நிறைய மனைவிகள் இருந்தும் யாரையும் விரும்பாமலும் நேசிக்காமலும் இருந்தான். அதனால் மன்னன், மகனின் கண்ணில் படும் அழகான பெண்களையெல்லாம் அவனுக்கு மனைவியாக்கி வைத்தான். பெண்ணின் தாயோ, தந்தையோ சம்மதிக்கவில்லையென்றால் அவர்களைக் கொன்று விடும் துர்க்குணம் கொண்டிருந்தான்.

அந்நாட்டில் மிகவும் புத்திசாலியான ஆமை ஒன்று இருந்தது. அந்த ஆமையின் மனைவியும், மகளும் மிகவும் அழகானவர்கள். மகள், இளவரசன் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க ஆமை, அவளைப் புதர்களில் ஒளிந்து இருக்க வைத்தது. ஒருநாள் அந்த ஆமை, உணவுக்காகத் தனது வயலில் வேலை செய்வதற்காகத் தன் மனைவியுடன் சென்றிருந்தது.

அந்த நேரத்தில் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த இளவரசன் ஒரு பறவையை நோக்கி அம்பைத் தொடுத்தான். அந்தப் பறவை பொத்தென்று புதர் அருகில் விழுந்தது. ஆமையின் மகள் அதைப் பார்த்து கலக்கம் அடைந்தாள். பறவையோ அவளின் அதீத அழகை ரசித்தபடி இருந்தது. அதை அவள் எடுத்து அன்புடன் தடவிக் கொண்டிருந்தாள். அப்போது பறவையைத் தேடிப் புதரின் அருகில் வந்த படைவீரன் ஒருவன், அழகின் உருவமாக இருந்த ஆமைப் பெண்ணைப் பார்த்து வியந்து போனான்.

அவன் ஓடிப் போய் இளவரசனிடம், அழகான பெண் ஒருத்தி புதருக்குள் ஒளிந்து இருக்கும் விஷயத்தைச் சொல்லி விட்டான். அதைக் கேட்ட இளவரசன் விரைந்து வந்து புதர் அருகில் சென்றான். அந்த அழகிய ஆமைப் பெண்ணை பார்த்ததும் அவனது கண்கள் விரிந்தன. அவன் வாழ்நாளில் அத்தகைய அழகிய பெண்ணைப் பார்த்ததேயில்லை. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த கணமே அந்த பெண்ணைத் தனது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

அந்த அழகியும் அவனை உற்றுநோக்கிக் கொண்டிருந்தாள். பிறகு அவளுடன் பேச்சுக் கொடுத்தான். அவளும் அவனுடன் பேச ஆரம்பித்தாள். வெகு நேரம் அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த அவன், அவள் அவனை ஏற்றுக் கொண்டு மனைவியாகத் தயார் என்று சொல்லும் வரை பேசிக் கொண்டிருந்தான். பின்னர் அரண்மனைக்குத் திரும்பினான். மன்னரான தனது தந்தையிடம் அந்த ஆமையின் மகளைச் சந்தித்தது பற்றிக் கூறாமல் மறைத்து விட்டான்.

மறுநாள் காலையில் ஆறு துணித் துண்டுகள், முன்னூறு மரத்துண்டுகளைப் பரிசாக ஆமையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அன்று பிற்பகலில், ஆமையின் வீட்டுக்குச் சென்ற இளவரசன் ஆமையிடம், தான் அந்தப் பெண்ணை மணக்க விரும்புவதாகவும் அவளுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயார் என்றும் கூறினான். ஆனால் ஆமை மிகவும் பயந்தது. மன்னனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் தன்னை மட்டுமல்ல, மனைவி, மகள் என எல்லோரையும் கொன்று விடுவான் என்று பயத்தின் உச்சியில் சொன்னது. ஆனால், இளவரசனான மன்னனின் மகனோ ஆமையிடம், அப்படி ஏதும் நடக்காமல் தன் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிச் சமாளித்தான். ஆமையும் அவனது வார்த்தையை நம்பியது.

இளவரசனோ தன் தாயிடம் சென்று, ஆமை அழகி பற்றிக் கூறினான். அவருக்கும் அரசரின் பிடிவாத குணம் பற்றிய வெறுப்பு இருந்தது. அவர், அரசருக்குத் தெரியாமல் அந்த ஆமைக் குடும்பத்தின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணைப் பார்க்க முடிவு செய்தார். உடை, உணவு வகைகள் மற்றும் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார். தன் மகனான இளவரசன் திருமணம் செய்துகொள்ள விரும்பிய ஆமையின் மகளைப் பார்த்தார். தான் கொண்டு வந்திருந்த பொருட்களையும் கூடவே ஆலிவ் எண்ணெயையும் அந்த அழகிக்குப் பரிசளித்தார்.

அந்த ஆமையிடம், “என் மகனே, உன் மகளை மணந்து கொள்வான், வேறு யாருக்கும் அவளை மணம் பேச வேண்டாம்” என்று உறுதியாகக் கூறினாள். ஆமையும் அரசியிடம், அப்படியே தான் காத்திருப்பதாகவும் வேறு யாருக்கும் தனது அழகிய மகளை மணமுடித்துக் கொடுக்க மாட்டேன் எனவும் மறு உறுதி அளித்தது. ஐந்து ஆண்டுகள், அரசி அந்த ஆமையையும் தன் மகனின் வருங்கால மனைவியான ஆமையின் அழகிய மகளையும் தொடர்ந்து சந்தித்து வந்தாள்.

அதெத் என்பது அந்த ஆமை அழகியின் பெயர். ஒரு நல்ல தருணத்தில் அவன் தன் தந்தையான மன்னரிடம் தான் ஆசைப்பட்ட ஆமை அழகி பற்றிச் சொன்னான். அதைக் கேட்டதும் மன்னன் கடும் கோபம் கொண்டான். உடனே மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதிக்கு அந்த ஆமைக் குடும்பத்தினை இழுத்து வரும்படி தன் படைத்தளபதிக்குக் கட்டளை இட்டான். படைத் தளபதியும் தன் வீரர்கள் சிலருடன், ஆமைக் குடும்பத்தை இழுத்து வரப் புறப்பட்டுச் சென்றான்.

நாட்டின் மக்கள் எல்லோரும், அதற்குள் செய்தி அறிந்து சந்தைப் பகுதியில் கூட்டமாகச் சேர ஆரம்பித்து விட்டனர். இளவரசனோ இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடிக்க ஆரம்பித்தான். ஆமை அழகியையும் அதன் குடும்பத்தினரையும் நிச்சயம் கொன்று விடுவார்கள் என்று வருந்தத் தொடங்கினான். மன்னனோ எந்தவிதச் சலனமும் காட்டாமல் இருந்தான். படைத்தளபதியும் வீரர்கள் சிலரும் ஆமைக் குடும்பத்தை இழுத்து வந்தனர்.



ஆமை அழகியின் அழகு எல்லோரையும் மயங்கச் செய்வதாய் இருந்தது. இப்படி ஓர் அழகி இந்த நாட்டில்தான் இருந்தாளா என்று மக்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். சிலரோ, இந்த அழகிய பெண் இவ்வளவு நாள் எங்கே ஒளிந்திருந்தாள் என்று வாய் விட்டே, பலரும் கேட்கும்படிக் குரல் எழுப்பினர். மன்னன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.

கொடுமைக்கார மன்னனான அவன் தன் முன்னால், படைத் தளபதி கொண்டு வந்த நிறுத்திய ஆமையின் மகளைப் பார்த்தான். அவனுக்கும் ஆச்சர்யம் தொற்றிக் கொண்டது. அவன் வாழ்நாளில் அப்படி ஒரு அழகியை அவன் பார்த்ததில்லை. உலகத்திலேயே இவள் தான் சிறந்த அழகி என்பதில் கொஞ்சமும் ஐயம் இருக்காது என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அவன் என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்று தெரியாமல் பயத்துடன் இருந்தது ஆமைக் குடும்பம். இளவரசனுக்கும் பயமாகத்தான் இருந்தது. மக்களோ மன்னன் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய ஆவலாய் இருந்தனர்.

மீண்டும் ஒரு முறை அந்த அழகிய பெண்ணைப் பார்த்த மன்னன், “இவளை விட என் மகனுக்குப் பொருத்தமானவள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள், இவள்தான் என் மகனை மணக்கப் போகிறவள்” என்று உரத்த குரலில் சொன்னான். தொடர்ந்து தன் அரசில் பாதியை ஆமைக்கு எழுதித் தருவதாகவும், மேலும் தன் பண்ணைகளையும் ஆமைக்கே அளிப்பதாகவும் அதைப் பராமரிக்க நூற்று ஒரு பெண்களை நியமிப்பதாகவும், இது தவிர முன்னூறு பெண்களை ஆமைக்கு அடிமைகளாக அளிப்பதாகவும் தெரிவித்தான்.

மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடனேயே மன்னன் பெரிய விருந்து ஒன்றையும் அறிவித்தான். விருந்தில் பலவகை உணவுகளும் பழங்களும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. ஆமை தனக்கு அளிக்கப்பட்ட பகுதியினை நாட்டைத் திறம்பட ஆட்சி செய்தது.
- நைஜீரிய நாட்டுச் சிறுவர் கதை.

தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/parable/p83.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License