என்னைச் சரி செய்ய நீ தேய்ந்து போகிறாயே...?
ஒரு சிறுவன் பள்ளியில் தன்னுடைய பையிலிருந்து பென்சில், ரப்பர் என்று இரண்டையும் எடுத்து வெளியில் வைத்தான்.
அப்போது பென்சில், ரப்பர் இரண்டும் பேசிக் கொண்டன.
பென்சில்: என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்:எதற்காக மன்னிப்பு?
பென்சில்: நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய். ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய். என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்: நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன். என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்கு முழுமையான மகிழ்ச்சியே. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து, ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு என்னைப் போன்ற ஒரு புதிய ரப்பர் கிடைக்கும்.
- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.