* பயந்தாங்கொள்ளிகள் எதையும் குழப்புவார்கள்.
* முறையாகச் செய்யப் பெறாத மருத்துவம் நோயை விடக் கொடியது.
* ஆசிரியர், மாணாக்கரை அறிவால் வளர்க்கும் கடமை உடையவர்.
* காலம் தவறிச் செய்யப் பெறும் பணிகள் பொருள் இழப்பைத் தரும்.
* சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு கானா விட்டால், புதிய சிக்கல்கள் தோன்றும்.
* அரைகுறைகள், மற்றவர்கள் சொல்வதை மதித்துக் கேட்கமாட்டார்கள்.
* சலுகைகளால் ஒரு சமுதாயத்தை வளர்த்து விட முடியாது.
* பாசம் மிகுந்தாலும் தொல்லைகள் வரும்.
* ஆசைகள் ஒவ்வொன்றும் சுதந்தரத்திற்குப் போடப்படும் விலங்குகள்.
* ஒற்றுமையை விரும்புகிறவர்கள் காரண காரியங்களை ஆராய மாட்டார்கள்!
* அக்கறையுடைய வாழ்க்கையே ஆளுமையைத் தரும்.
* ஓய்வு எடுக்காது உழைக்கும் உழைப்பின் தரம் குறையும்.
* உடம்பு நல்ல நிர்வாக முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
* தவறுகளைக் கூட ஏற்கலாம். ஆனால் முறைகேடுகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
* மனித முயற்சிகள் தோற்கலாம். ஆனால், மனிதன், தோற்கக் கூடாது.
* பெண் தனித்திருக்க முடியாது என்ற கருத்து பிழையானது.
* அலட்சியங்கள் கோடிக் கணக்கில் இழப்பைத் தரும்.
* ஒப்புரவு இல்லாத உறவு, உப்புக்கும் பயனில்லாதது.
* நாலுபேர் நன்மைக்கு மட்டுமல்ல; தீமைக்கும் சேர்கிறார்கள்.
* நல்லதை நாடிச் செய்யும் மனிதன் நாளும் வளர்வான்.
* அரசியல் வேறு. அரசாங்கம் வேறு.
* உடலை வளர்த்தவர்கள், உணர்வை வளர்த்துக் கொள்ளத் தவறிவிட்டார்கள்.
* காரியங்கள் நடந்தால் மட்டும் போதாது. உரிய காலத்தில் நடக்க வேண்டும்.
* விரோதிகளை விட வஞ்சகர்கள் மோசமானவர்கள்.
* திட்டமிடாத வாழ்வு, காட்டாற்று வெள்ளம் போன்றது.