கடமை
 கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன்.
- செல்ஸன்
 உன் கடமையைச்செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்து கொள்வாய்.
- கதே
 கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள்ளன. இரண்டும் ஒன்று கூடி விட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை.
- அனடோல் பிரான்ஸ்
 சாந்தம், குதூகலம் - இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன.
- ஆர். எல். ஸ்டீவன்ஸன்
 நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால், உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருவ்பொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
- வஸதே
 பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது? அவரை நல்லவராக்குவதா? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும். அவன் நானே. பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும்.
- ஆர். எல். ஸ்டீவன்ஸன்
 செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக.
- ரொமெய்ன் ரோலண்டு
 உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன்.
- எபிக்டெட்டஸ்
 செய்ய வேண்டியதைச் செய்ய முயல்க; முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது.
- ஆவ்பரி
 கெட்ட காலம் வந்தால் எப்படிச் சகிப்பது என்பது குறித்து, நல்ல காலத்தில் சிந்தனை செய்வது மாந்தர் கடன்.
- டெரன்ஸ்
 இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும்.
- நியூட்டன்
 அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக.
- ஆப்ரகாம் லிங்கன்
 உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும்.
- ஸெனீக்கா
 கடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும்.
- பால் ரிச்சர்டு
 ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான்.
- ஆவ்பரி
 ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே.
- மீல்டன்
 உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ங்ணம் செய்தால் நீ அறிய விரும்பும் மறை பொருள்களையெல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய்.
- செம்பிராண்ட்
 தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது.
- இப்ஸன்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|