* இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான், அதற்குப் பணிந்து போவதற்கல்ல.
* நன்மையிலும் தூய்மையிலும் வலிமை உள்ளது.
* கடவுளின் தோற்றமே உலகம்.
* நீ உன்னை நம்புவதற்கு முன் கடவுளை நம்ப முடியாது.
* மிருகத்தை மனிதனாகவும், மனிதனைக் கடவுளாகவும் உயர்த்தும் கருத்தே மதம்.
* நோக்கமே நீ செய்யும் வேலையின் அளவுகோல். நீ கடவுளே என்பதைவிட, எவ்வளவு தாழ்ந்த மனிதனும் கடவுளே என்பதைவிட உயர்ந்த நோக்கம் வேறு எது இருக்க முடியும்?
* இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப் படுத்திக் கொள்வதற்கே நாம் இங்கு வந்திருக்கிறோம்.
* உண்மையை ஆயிரம் விதமாகக் கூறலாம், அவை ஒவ்வொன்றும் உண்மையே.
* முடிவற்ற சங்கிலியில் சில வளையங்களை விளக்க முடியுமானால், அதே முறையில் அனைத்தையும் விளக்க முடியும்.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
* கடவுள் மனிதனாகியுள்ளார், மனிதன் மீண்டும் கடவுள் ஆவான்.
* மனிதன் ஒருபோதும் இறப்பதுமில்லை, பிறப்பதுமில்லை. உடல்களே சாகின்றன, மனிதன் ஒருபோதும் சாவதில்லை.
* உண்மையில் இருப்பது ஒரே ஆன்மாதான், மற்றவையெல்லாம் அதன் தோற்றங்களே.
* பாமரர்கள், தைரியசாலிகளான ஒரு சிலர் என்று பக்தர்களை இரு வகையாகப் பிரிக்கலாம்.
* சுவைப்புலனை அதன் விருப்பப்படி விட்டால், மற்ற புலன்களும் கடிவாளமின்றி ஓடும்!
* ஞானம், பக்தி, யோகம், கர்மம் இவை முக்திக்கு அழைத்துச் செல்லும் நான்கு பாதைகள். தனக்கு மிகவும் ஏற்புடைய வழியையே ஒருவன் பின்பற்ற வேண்டும். இந்தக் காலத்தில் கர்மயோகத்தை வலியுறுத்த வேண்டும்.
* உண்மையான மதத்தின் எல்லைக்குள் நூலறிவிற்கு நுழைய உரிமை இல்லை.
* குருவின் அருளால் சீடன் நூல்களைக் கற்காமலேயே அறிஞன் ஆகிறான்.
* உலகாயதம் விலகாமல் ஆன்மீகத்தை அடைய முடியாது.
* பலவீனத்தைச் சக்திபோல், உணர்ச்சியை அன்புபோல், கோழைத்தனத்தை வீரம்போல் காட்டவே நாம் எப்போதும் முயன்று வருகிறோம்.
66. வீண் ஆடம்பரம், பலவீனம் முதலியவை தோன்றும் போது, ‘இது உனக்கு உகந்ததல்ல, உனக்கு இது தகாது’ என்று மனத்திற்குக் கூறு.
* எல்லோரிலும் இறைவன் உள்ளான், ஆன்மா இருக்கிறது; மற்றவையெல்லாம் கனவு, மனமயக்கம்.
* கடவுளை அறிய உதவும் எந்தப் பிரிவும் விரும்பத்தக்கதே. இறையனுபூதியே மதம்.
* குரு ஆவதற்கென்று பிறந்தவர்களைத் தவிரப் பிறர் குரு ஆவதற்கு விரும்பி அழிந்து போகின்றனர்.
* மிருகத் தன்மை, மனிதத் தன்மை, கடவுள் தன்மை இவற்றின் கலவையே மனிதன்.
* பொருட்களில் மாற்றம் செய்வதால் அவை முன்னேறுவதில்லை, நாமே முன்னேறுகிறோம்.
* எல்லோருக்கும் இன்பமே நோக்கம் என்று கொள்வது தவறு. எத்தனையோ பேர் துன்பத்தைத் தேடவும் பிறக்கின்றனர். பயங்கரத்தை, அதற்காகவே நாம் வழிபடுவோம்!