விடுகதைக்கு விடை சொல்லுங்க...!
சித்ரகலா செந்தில்குமார்
1. இதயம் போலத் துடிப்பிருக்கும்
இரவு பகல் விழித்திருக்கும். -அது என்ன?
2. காவி உடை அணியாதக் கள்ளத் தவசி
கரையோரம் கடும் தவம் செய்கிறான் - அவன் யார்?
3. காண உருவம் உண்டு
கட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன?
4. வீதியெல்லாம் கூட வந்தாலும்
வீட்டுக்குள் இவனைச் சேர்ப்பதில்லை - அவன் யார்?
5. காய் காய்க்கும். ஆனால்
பழம் பழுக்காத மரம் இது. - அது என்ன?
6. மண்ணுக்குள் முளைக்கும்
மங்கையருக்கு மட்டும் அழகு தரும். -அது என்ன?
7. விதையில்லாத செடி இது மழையில் பிறந்து
வெயிலில் காயுது. - அது என்ன?
8. இரவல் கிடைக்காதது
இரவில் மட்டும்தான் வரும். -அது என்ன?
9. பறந்து போகும் விமானம் அல்ல
படீரென வெடிக்கும் பட்டாசும் அல்ல. -அது என்ன?
10. குழந்தைக்குப் பலமான கையே
இந்தக் கைதான். - அது என்ன?
விடைகள்:
1. கடிகாரம்.
2. கொக்கு.
3. புகை.
4. செருப்பு.
5. முருங்கை மரம்.
6. மஞ்சள்.
7. காளான்.
8. தூக்கம்.
9. பலூன்.
10. அழுகை.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.