இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
கதை

ஆசிரியையும் மாணவர்களும்...!

வாணமதி


நான் பார்த்திருக்கிறேன் பெரிய யானை பக்கத்தில ஒரு குட்டியானை என்றான் நோவேல்.

எங்கள் பாட்டி தாத்தாவுடன் போன போது இவ்வளவு பெரிய பாம்பைப் பார்த்தேன் என்று இயன்றளவு தனது கைகளை நீண்டி காண்பித்தான் ஜீவன்...

இவர்களது உரையாடல்களை மாறிமாறிக் கண்களை உருட்டி உருட்டி கேட்டுக் கொண்டிந்தார்கள் ஏனைய பத்துச் சிறார்களும்.

தொடருந்து நிலையத்தில் நின்றிருந்த சில பெரியவர்களும் புன்னகையோடு இவர்களை இரசிக்கத் தவறவில்லை.

தலையில் தொப்பியும், கண்களில் கறுப்பு நிறக்கண்ணாடியும், கழுத்தில் நூலில் கட்டிய ஒரு விசிலும்,தோளில் பையுமாக இவர்கள் அருகில் வந்தார் ஆசிரியை பாரதி.

கழுத்தில் தொங்கிய விசிலைத் தனது உதடுகளில் பொருத்தி அழுத்தி ஊதிய போது வெளிவந்த ஒலியில் தமது உரையாடல்களை நிறுத்திய யாவருமே ஆசிரியரை உற்று நோக்கினர்.

பிள்ளைகளே இப்போது நாம் "சூரிச்" என்ற நகரத்தில் உள்ள விலங்குகள் பூங்காவுக்குச் செல்லவிருக்கின்றோம். இது குறித்த தகவல் பள்ளியில் உங்களுக்கும் பெற்றோருக்கும் அறிவிக்கபட்டுவிட்டது. இதற்காக சூரிச் என்ற நகரை நோக்கிப் பயணிக்கும் தொடருந்தில் ஏறி அரைமணி நேரம் பயணம் செய்யப் போகின்றோம்.

எல்லோரும் உங்கள் தலையில் அணிந்துள்ள தொப்பி, கண்ணாடி, பை என்பவற்றைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

இருவராக சோடி சேருங்கள் என்றாள் ஆசிரியை...

இந்த ஒழுங்குவிதிகளுக்கு பழக்கப்பட்ட ஆண்டு ஒன்று மாணவர்கள் கண்மூடித் திறப்பதற்குள் இருவராகக் கைகோர்த்து ஒருவர் பின் ஒருவராக ஒழுங்கில் நின்றனர்.

பல கண்கள் ஆசியயையும், மாணவர்களையும் பெருமையுடன் நோக்கின...



நீண்ட இரும்புத் தண்டவாளங்களின் ஓரத்தில் நடப்பட்ட தூணில் பொருத்தப்பட்டிருந்த சிவப்புநிற விளக்கு எரியத் தொடங்கியது. தொடருந்து நிலையத்தில் நின்ற பயணிகள் தூரத்தில் வேகமாக வந்து கொண்டிருக்கும் தொடருந்தை நோக்கியவாறு பயணத்துக்கு தயாராகினர்.

பாம்பு போல நீளமான தொடருந்து என்றாள் கவிதா. யாவரும் சிரித்துக் கொண்டே ஆசிரியை பாரதியின் அருகில் நின்றனர்.

ஓபர்கிளாட் தரிப்பிடத்தில் "கிரிச்" என்ற சத்தத்துடன் வந்து நின்றது பாம்பு போன்ற நீளமான தொடருந்து.

வண்டியில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்காக வழிவிட்டு பொறுமையாக காத்திருந்தனர் ஏற இருக்கின்ற பயணிகள்.

இறங்க வேண்டியவர்கள் இறங்கிய பின்னர் மிக ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக பயணிகள் வண்டியின் உள்ளே ஏறினர்.

ஆசிரியை பாரதி முதலில் வண்டியுனுள் ஏறினார்...

பின்னர் ஒவ்வொருவராக வண்டியுனுள் ஏறச் சொன்னார். ஏறிவரும் மாணவர்களைக் கவனித்தவாறே இருக்கைகளைச் சுட்டிக்காட்டி அமரச் சொன்னார்.

தொடருந்து மீண்டும் வேகமாக "சர்" என்று ஓடத்தொடங்கியது.

யாவரும் மகிழ்ச்சியுடன் கலகலக்கத் தொடங்கினர்.

ராதிகாவும், அமிரும் யன்னல் வழியாக ஓடிமறையும் மரங்களையும்,கட்டடங்களையும் இரசித்தனர்.

எவளினும், பீற்றரும் சிங்கம், கரடி குறித்துப் பேசினர்... நேரம் கடந்ததை மறந்திருந்தனர் யாவரும்.

அப்போது வண்டியுனுள் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் "இன்னும் சில நிமிடங்களில் வண்டி சூரிச் புகைவண்டி நிலையத் தரிப்பிடத்தினை நெருங்கிவிடுமென அறிவிக்கப்பட்டது.

ஆசிரியை பாரதி ஏனைய பயணிகளுக்குத் தொந்தரவு செய்யாதவாறு மீண்டும் கழுத்தில் தொங்கிய விசிலை மெல்ல ஊதினாள்...

பிள்ளைகளே !

உங்கள் பொருட்களை சரி பாருங்கள்....



இன்னும் சில நிமிடங்களில் இறங்கப் போகின்றோம். நான் முதலில் இறங்குவேன்...

பின்னர் ஒவ்வொருவராக இறங்கி வரவேண்டும்...

மீண்டும் இருவராகக் கைகளை கோர்த்து வரிசையாக நிற்கவேண்டும் என்றாள்.

யாவரும் புரிந்து கொண்டதன் அடையாளமாக வலது கையை மேலே உயர்த்தினர்.

இது இவர்களது வகுப்பறையில் கற்றுக் கொடுக்கப்பட்ட உடல்மொழி.

பொது இடங்களில் கோசம் இடாதவாறு தங்களது பதிலை இவ்வாறே அறிவிக்க வேண்டும்.

புரியாது விட்டால் ஆட்காட்டி விரலை உயர்த்திக் காண்பிக்க வேண்டும்.

மகிழ்ச்சியுடன் ஆசிரியை பாரதியும் வலது கையை மேலே உயர்த்தினார்.

பயணிகள் இறங்கும் வரை காத்திருந்துவிட்டு அமைதியாக ஆசிரியை பாரதி இறங்கினார்.

படிப்படியாக மாணவர்களும் இறங்கி ஒரு ஓரமாக ஒழுங்காக நின்றனர்.

யாவரும் மிகச்சிறப்பாக நடந்து கொண்டீர்கள் "சூப்பர் " என மாணவர்களை உற்சாகப்படுத்திய ஆசிரியை "நன்றி " என்றார்.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் உற்சாகமானார்கள்...

இங்கிருந்து ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும்...

இருவராகக் கைகோர்த்தவாறு நடைபாதையில் வலது புறமாக ஒருவர் பின் ஒருவராக நடக்க வேண்டும் என்றவர் நடுவே நடந்து செல்லும் மாணவர்களுடன் இணைந்து கொண்டார் ஆசிரியை பாரதி.

ஆ... அங்கே பார் விலங்குகள் பூங்கா என உற்சாகமானார்கள் மாணவர்கள்...

எல்லோரும் தம்மையறியாது வேகமாகவே நடந்தனர்.

விலங்குகள் பூங்கா வாயிலில் சிங்கம், புலி, யானை, மயில், குருவி, தென்னைமரம் பூச்செடிகள் என்பன அழகான வண்ண நிறத்தில் வரையப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது.

பெரிய கதவின் அருகில் ஒரு அறிவிப்பு பலகை நாட்டப்பட்டிருந்தது.

அதனருகில் சிறிய ஒரு அறை ...

அங்கு ஒரு பெண் மேசையில் பொருத்தப்பட்டிருந்த கணினியுடன் காத்திருந்தார்.

வரிசையாகப் பெரியவர்களும் சிறியவர்களும் காத்திருந்தனர்.

ஆசிரியை பாரதியும் மாணவர்களுடன் வரிசையில் காத்திருந்தார்.

காலை பத்து மணி .


சூரியன் மெல்ல மெல்ல உச்சி வானை நோக்கி வந்து கொண்டிருந்தான். சிலர் தமது பையில் உள்ள தொப்பியை எடுத்து தலையில் அணிந்தனர். இன்னும் சிலர் சூரியக் கதிருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பசைகளை எடுத்துக் கை, முகம் போன்றவற்றில் பூசினார்கள்.

மெல்ல மெல்லக் கூட்டம் நகரத்தொடங்கியது. இப்போது ஆசிரியை பாரதி அந்தப் பெண்னை நெருங்கிவிட்டார்.

மேசையின் ஓரத்தில் வெள்ளைநிற உலோகத்தகட்டில் எழுதப்பட்டிருந்த திருமதி.அலேக்ஸ் என்ற பெயரை கண்களால் கவனித்தவர்...

நாங்கள் ஓபர்கிளாட் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறியவாறே, தமது ஆசிரியை அடையாள அட்டையைக் காண்பித்தார்.

இருக்கையில் இருந்தவாறே உடலைச் சரித்து ஆசிரியையின் பின்னேயுள்ள மாணவர்களைப் பார்த்த திருமதி. அலேக்ஸ் புன்னகைத்தவாறே அடையாள அட்டையை வாங்கி கணினியில் ஏதோ பதிவு செய்தார்.

பின்பு விலங்குகள் பூங்கா குறித்த வழிகாட்டி வரைபடத்தைக் கைகளில் எடுத்தவர், “எத்தனை மாணவர்கள்?” என்றார் வரிசையில் உள்ளவர்களைக் கண்களால் நோட்டமிட்டவாறு...

பன்னிரண்டு மாணவர்கள்... மொத்தமாக பதின்மூன்று வரைபடங்களைத் தாருங்கள்... என்றார் ஆசிரியை.

வரைபடங்களைக் கொடுத்தபடியே "இன்றைய பொழுது மகிழ்ச்சியாக அமையட்டுமென வாழ்த்தியவாறு கைகளை அசைத்தாள் திருமதி. அலேக்ஸ்"

யாவரும் கைகளை அசைத்தவாறே, "உங்களுக்கும் மகிழ்ச்சியான பொழுதாக அமையட்டும்" என்றவாறு வரிசையை விட்டு நகர்ந்தனர்.

ஆசிரியை பாரதி மாணவர்களை அழைத்துக் கொண்டு ஒரு மரத்தின் கீழே அமர்ந்தார். எல்லோரும் சற்று ஓய்வெடுங்கள் என்றவர் தனது பையில் உள்ள தண்ணீர்ப் போத்தலை எடுத்து கட கட என்று குடித்தார்.

மாணவர்களும் தமது பையிலுள்ள தண்ணீர் போத்தல்களை எடுத்துக் குடித்தனர்.

எல்லோருக்கும் ஒவ்வொரு வரைபடத்தைக் கொடுத்தவர் தனது வரைபடத்தை உற்று நோக்கினார்.

ஆசிரியை போலவே மாணவர்களும் உற்று நோக்கத் தொடங்கினர்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தது அந்தச்சூழல்...

மீண்டும் விசிலை ஊதிய ஆசிரியை, மாணவர்களை நோக்கிப் பேசத்தொடங்கினார்.

இந்த வரைபடத்தில் அம்புக்குறி காட்டும் வழியே நாம் நுழைவாயினுள் செல்ல வேண்டும்.

முதலில் வலது புறமாக உள்ள ஆசிய நாட்டு மிருகங்களை பார்க்கப் போகிறோம்..

இங்கு யானை, சிங்கம், புலி, கரடி, மான், குரங்கு, பாம்பு... எல்லாமே உள்ளது.

ஆசிரியரின் விரல் தொட்ட இடத்தையும், தமது வரைபடத்தையும் மாறி மாறி யாவரும் பார்த்தனர்.

பின்பு கங்காரு...,அதன் பின் பாம்புகள்... என்றார் ஆசிரியை.

ஆ... மீன்கள் என்றான் குமார்.

ஆமாம்! என்றாள் ஆசிரியை.

பிறகு பறவைகள் என்றாள் லேனா...

பிறகு குதிரை, வரிக்குதிரை, கழுதை... என்றான் ஜீவன்.

ம்... ம்... ஆ... ஆடு, மாடு, கோழி... என்றாள் சமிரா.

மாணவர்களுக்கு வரைபடக்குறிப்பு புரிந்துவிட்டதென மகிழ்ந்தாள் ஆசிரியை.

பிறகு இடது புறமாக திரும்பி நடக்க வேண்டும் பிள்ளைகள்.

இங்கு சூடான நாட்டில் வளரும் மிருகங்கள், பறவைகள், மரங்கள் என்பவற்றைப் பார்க்கலாம்.

சூடான நாடு... என்று இழுத்தான் ஜோன்.

ஆமாம் ஜோன்.. இந்தியா, இலங்கை, ஆபிரிக்கா... போன்ற சூடான நாடுகளில் வளரும் தென்னைமரம், வாழைமரம், பூச்செடிகள், வண்ணக்கிளிகள் என்பன... என்றாள் ஆசிரியை.

இதன் பின்பு ஓய்வு எடுப்போம்.



மதிய உணவு உண்ட பின் நீரில் வாழும் உயிரினங்களை பார்ப்போம்..

பிறகு குளிர்களி (ஐஸ்கிறிம்) என்றான் லெவின்.

யாவரும் ஐஸ்கிறிம், ஐஸ்கிறிம் என்றனர் உற்சாகத்தோடு...

ஆசிரியை பாரதி சிரித்துக் கொண்டே வலது கையை மேலே உயர்த்தினார்.

ஆசிரியை தமது வேண்டுகோளை ஏற்றுவிட்டாரென மகிழ்ந்த மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தமது வலது கைகையை உயர்த்தித் துள்ளினர்.

சிரித்துக் கொண்டே ஆசிரியை பாரதி முன்னே நடக்க, சிங்கம் போன்ற வீறுநடையுடன் மாணவர்கள் பின்தொடர்ந்தனர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/story/p18.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License