இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




சிறுவர் பகுதி
கதை

நன்கொடை

சுபஸ்ரீ ஸ்ரீராம்

ஏமூர் என்ற ஊரில் ராமசாமி என்ற விறகுவெட்டி இருந்தான். நல்ல ஊழைப்பாளி. அவனுக்கு அன்பு என்ற பையன் இருந்தான். அவன் அரசு பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். அவன் நன்றாக படிக்கக் கூடியவன்.

அன்பு பேருக்குத் தகுந்தாற் போல் அனைவரிடத்திலும், அன்பாகவும், பணிவாகவும் இருப்பான். படிப்பை தவிர மற்றவர்களுக்கு என்ன தேவையோ உதவி செய்வான்.

அன்பு பள்ளிவிட்டு வந்தவுடன், அம்மாவிற்குத் தேவையான உதவி செய்துவிட்டு, பின்னர் இரவு பத்து மணி வரை தெருவிளக்கில் படித்துவிட்டு, தூங்கச்செல்வான். அவன் படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்தான். அவன் அம்மா அவனிடம் அடிக்கடி நமக்கு பணவசதி கிடையாது, நன்றாக உழைத்துப் படித்தால் பிற்காலத்தில் நல்ல வசதியுடன் வாழலாம் என்று சொல்லுவார்.

அவன் அப்பா பள்ளி விடுமுறை நாட்களில் அவனுக்கு நீதி போதனைக் கதைகளைக் கூறுவார். இவனுடன் படிக்கும் மாணவர்கள் எல்லாம் நல்ல வசதியுடன் இருந்தனர்.

இவனுடைய ஊருக்கு ஒரு மருத்துவமனை கட்டுவதற்கும், பழைய கோவிலைப் புதுபிக்கவும், இவனுடைய பள்ளி மேல்நிலைப் பள்ளியாக மாறுவதற்கும் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அந்த விழாவிற்கு அடிக்கல் நாட்ட ஒரு மகானை அழைத்து வருவதாக செய்தி வந்தது.

அந்த மகான் வந்தால் ஊருக்கு நல்ல அதிர்ஷ்டம் வரும் என்று மக்கள் நம்பினர்.



யாராருக்கு எவ்வளவு நன்கொடைகள் கொடுக்க முடியுமோ அவர்கள் எல்லாம் அந்த ஊர் தலைமையாளிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மக்களும் அவரவர் சக்திக்குத் தகுந்த நன்கொடைகளைக் கொடுத்தனர்.

ஆனால் அன்பு அப்பா ஒரு விறகுவெட்டி என்பதால், ஒருநாள் சாப்பாடு சாப்பிடுவதே பெரிய கஷ்டம். இதில் நன்கொடை எங்கே கொடுப்பது என்று மிகவும் கவலைபட்டார்.

அன்புக்கு நம்மால் பணம்கொடுக்க இயலாது. ஆனால் பணத்தைதவிர வேறு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தான்.

நாட்களும் கடந்தன. இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், ஊரில் மகானை வரவேற்பதற்காக எல்லாரும் ஒற்றுமையாக வேலை செய்து கொண்டு இருந்தனர்.

அவனுடைய கிராமத்தில் பழைய கோவிலைச் சுற்றி புதுப்பிக்கப்பட்டது. அன்பு நினைத்தான், பெரியவர் வருவதற்கு ஒற்றையடிப் பாதை மட்டும் சுத்தம் செய்யப்பட்டது. மீதியுள்ள இடங்களில் தேவையில்லாத செடி, கொடிகள் படர்ந்து இருந்தன. இவற்றை நாம் சுத்தம் செய்தால் என்ன என்று தோன்றிற்று.

அதனால் இரவு பகல் பார்க்காமல் மும்முரமாக அவன் நெருஞ்சி முட்கள் நிறைந்த பகுதி எல்லாம் அழகாக சுத்தம் செய்து, ஒருவழிப் பாதையாக அல்லாமல், எந்தப்பக்கம் வந்தாலும், மக்கள் வருவதற்கு அழகானப் பாதையை ஏற்படுத்தி இருந்தான்.

இவன் இவ்வளவு சுத்தமாக செய்ததைப் பற்றி யாரும் புகழ்ந்து சொல்லவில்லை. ஏன் என்றால், மகான் வருவதற்கு யார் யாரோ என்னவெல்லாம் செய்யும் பொழுது, இந்த வேலை மற்றவர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

மகானும் வந்தார். கோவிலை அழகாகப் புதுப்பிக்க ஏற்பாடு செய்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்தார். மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

கடைசியாகப் பள்ளிக்கு வந்தார்.



அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் அருள் என்ற வியாபாரி அன்னதானம் அளிக்க முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டதால் அனைவருக்கும் சாப்பாடு போடப்பட்டது.

அனைவரும் சாப்பிட்ட பிறகு பள்ளி மைதானத்தில் கூடினர்.

மகான் சொன்னார், எந்த ஒரு விஷயத்திற்கும் ஊர் கூடி செய்யும் பொழுது, அதன் பலன் பலமடங்கு அதிகமாகும். இந்த ஏமூர் மக்கள் இவ்வளவு ஒற்றுமையாக செய்தது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

அந்த ஊர் மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கினார். அப்பொழுது அந்த ஊர் தலைவர் யார் யார் அதிக தொகை கொடுத்துள்ளார்களோ, அவர்கள் பெயர்களை வாசித்தார். அவர்களுக்கு எல்லாம், அந்த மகான் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தார்.

இந்த பொன்னாடை போர்த்திய போது, அன்புவிற்கு, மனதில் சிறிது வருத்தம் இருந்தது. அவனுடன் கூடப்படிக்கின்ற பையன்களின் பெற்றோர்கள் எல்லாம், அந்த மகானிடம் ஆசி வாங்கினர்.

நம்மால் இந்தக் கிராமத்திற்கு சிறிய நன்கொடையைக் கூடக் கொடுக்க முடியவில்லையே என்று மனதில் ஆதங்கம் எழுந்தது.

இதனிடையில் அனைவரது பெயரும் வாசித்து முடிந்த போது, மகான் அவர்கள் ஒரு காசோலையை இந்தக் கிராமத்திற்காக வழங்கினார். இந்த ஏமூர் கிராம் நல்ல செல்வச் செழிப்போடும், மனநிம்மதியோடும் மக்கள் வாழ வேண்டும் என இறைவனை ப்ரார்த்திக்கின்றேன் என்று சொன்னார்.

கோவில், மருத்துவமனை, பள்ளி ஆகிய மூன்று இடத்திற்கும் பணம் கொடுத்தாகி விட்டது. இன்னும் ஒரு காசோலை இருக்கிறது. அது தகுந்த இடத்திற்கு செல்ல வேண்டும். எந்த இடம் என்று மக்களால் யூகிக்கமுடிகிறதா என்று ஒரு கேள்வி கேட்டார்.

மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தனர்.



அப்பொழுது அந்த மகான், மைக்கில் அன்பு என்ற பையன் யார்?. அவன் எங்கு இருந்தாலும், உடனே வரவேண்டும் என்று கூறினார். அன்பிற்கும், அவன் பெற்றோருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

ஒரு வழியாக அன்பு அவர் இருக்கும் இடத்திற்குச் சென்றான். அவரை விழுந்து வணங்கினான்.

அப்பொழுது அந்த மகான் சொன்னார். இரண்டு நாட்கள் முன்பு என்னுடைய சீடனை இந்தக் கிராமத்தின் நிலவரத்தைப் பற்றி அறிய அனுப்பி வைத்தேன். இந்த அன்பு என்ற மாணவன் தனி ஒரு ஆளாக அனைத்து நெருஞ்சி முட்களையும் வெட்டி,ப் பாதையை அழகாக சரி செய்து கொண்டு இருந்தான். இவ்வளவு சிறிய வயதில், தன்னம்பிக்கையுடன் அந்த வேலையை முடித்து இருப்பதாக என் சீடன் சொன்னான்.

இந்தச் சிறுவனிடம் இருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னால் பணத்தால் முடியாததை, தன் மன பலத்தால் உடல் உழைப்பால் செய்துள்ளான். இது மிகப்பெரிய நன்கொடை. வழியில் ஒரு சிறு முள் இருப்பதைப் பார்த்து அதை எடுத்து ஒரு ஒரமாகப் போடமல், அப்படியே விட்டு விட்டால், யார் காலிலாவது குத்திப் புண்ணாக்கி விடும். என்று தெரிந்த போதும் அந்த முள்ளை எடுத்து ஓரமாகப் போட விரும்பாமல் பார்த்துக் கொண்டே செல்லும் நிலையில்தான் பலர் இருக்கின்றனர். ஆனால் இந்த ஊரில் உள்ள தேவை இல்லாத முட்கள் அனைத்தையும் இந்தச் சிறுவன் அகற்றி விட்டான். இது பணத்தால் செய்த நன்கொடைக்கு மேலானது. நல்மனத்தால் செய்த இந்தச் செயல் சிறப்பானது.

இந்தக் காசோலையை இந்த அன்பின் படிப்புச் செலவிற்காக நன்கொடையாக அளிக்கிறேன்.

அன்பிற்க்கும், அவனது பெற்றொருக்கும், மனது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/story/p3.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License