இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி - மொழிபெயர்ப்புக் கதைகள்
முதன்மைப் பக்கம்

பாம்பு மனிதனுக்கு எதிரியான கதை
(துருக்கி நாட்டுக் கதை)

முனைவர் சித்ரா சிவக்குமார்


கிழக்கு துருக்கியில் உள்ள பண்டைய கற்கால தளமான கோபெக்லி டெபே (Göbekli Tepe) தூண்களிலும், அங்கு கிடைத்த இதர பொருட்களிலும் பல விலங்கு உருவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அங்கு சித்தரிக்கப்பட்ட உயிரினங்களில் மிக முக்கியமான ஒன்று பாம்பு. துருக்கியர்கள், குர்துகள், யெசிடிகள் மற்றும் ஈரானியர்களின் நாட்டுப்புறக் கதைகளில் அனடோலியா முழுவதும் பாம்பு இரண்டு முக்கிய அவதாரங்களில் இருப்பது சுவாரஸ்யமானது. ஒரு அவதாரம் கருவுறுதலின் அடையாளமாக உள்ளது. ஆனால், மற்றொரு அவதாரம் அழியாமையின் அடையாளமாக உள்ளது. மேலும், இந்த குறியீடானது கில்காமேஷின் காவியத்தில் முக்கியமானது. இதில் நாயகனுக்கு அழியாமையின் ரகசியம் வழங்கப்படுகிறது. ஆனால், அவர் தூங்கும்போது அது அவரிடமிருந்து ஒரு பாம்பினால் திருடப்படுகிறது. பாம்பின் அழியாத தன்மை அவற்றின் தோலை உதிர்ப்பதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது.

பாம்பு என்பது அனடோலியா முழுவதும், குறிப்பாக தென்கிழக்குப் பிராந்தியத்தில் பழமொழிகள், புனைவுகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் எங்கும் நிறைந்த ஒரு அங்கமாகும். ஆனால், கோபெக்லி டெபேவில் நாம் பார்க்கும் சிற்பங்கள் பண்டைய கலைகளில் எங்கும் இல்லை. கோபெக்லி டெபேவைப் பார்வையிடும் போது, ​​அங்கு ஏராளமான பாம்புகள் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணும் போது, ​​ஷாமாரன் மற்றும் அவரது மனிதக் காதலரின் கதையைப் பற்றி எண்ணத் தோன்றும்.

அந்தக் கதை இதுதான்...!

தகமாச்ப் (Tahmasp) என்று ஒரு இளைஞன் இருந்தான். அவன் உயரமாகவும் அழகாகவும் இருந்தான். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவன் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தான்.

ஒரு நாள், அவனும் அவனது நண்பர்களும் காட்டைச் சுற்றி விறகு சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ​​தேன் நிறைந்த கிணற்றைக் கண்டார்கள். தேனை எடுக்க முடிவு செய்தனர்.

தேனை எடுப்பதற்காக தகமாச்ப் கிணற்றில் இறங்கினான். ஆனால் தேன் கையில் கிடைத்ததும், அவனது நண்பர் அவனைக் கிணற்றில் விட்டுவிட்டுச் சென்று விட்டான். அவன் திரும்பி வரவில்லை என்பதை உணர்ந்ததும், நம்பிக்கையை இழந்தான் தகமாச்ப். கிணற்றின் அடிப்பகுதியில் ஒரு துளை இருப்பதைக் கண்டான். அவன் தனது கத்தியைப் பயன்படுத்தி துளையை, நுழையும் அளவுக்கு பெரிதாக்கினான். அதில் நுழைந்துச் சென்றான். அப்போது அங்கு அவன் ஒரு பெரிய குகைப் பகுதியைக் கண்டான். கடுமையாய் முயன்றதால், சுற்றிப் பார்த்த பின் களைத்துப் போய் உறங்கிப் போனான்.

கண் விழித்த போது, ​​சுற்றிலும் ஆயிரக்கணக்கான பாம்புகள் இருப்பதைக் கண்டான்.

பாம்புகள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. அவன் நகர்வதை பாம்புகள் கவனித்தவுடன், அவை அவனை அணுக ஆரம்பித்தன. அவற்றால் அவன் கொல்லப்படுவான் என்று நினைத்தான். அவன் மிகவும் உதவியற்றவனாய் உணர்ந்தான்.

அவன் கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண்களைத் திறந்தான். அவனுக்கு முன் பாதி மனித உருவும் பாதி பாம்பாகவும் இருந்த ஒரு அழகான இளம் பெண்ணைக் கண்டான். அவன் மிகவும் ஆச்சரியமடைந்தான். ஆனால், அந்த விசித்திரமான உயிரினம் ஒன்றும் செய்யாமல், “பயப்படாதே. நாங்கள் உங்களைக் காயப்படுத்த மாட்டோம். நான் சாமாறன். நான் பாம்புகளின் ராணி. நீங்கள் எங்கள் விருந்தினர். இப்போது, ​​நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள், நீங்கள் பாதுகாப்பாக உணர வேண்டும்; நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். நாளை பேசுவோம்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.


தகமாச்ப் கனவு காண்பதாய் நினைத்தான். பிறகு, அவன் கண்களை மூடிக்கொண்டு மீண்டும் தூங்கிப் போனான்.

காலையில், தகமாச்ப் விழித்தபோது, ஒரு பெரிய அறையில் தன்னைக் கண்டான். அருகிலேயே சாமாறன் ஒரு ஆடம்பரமான காலை உணவு போடப்பட்டிருந்த மேஜையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவளது அழகில் முழுவதுமாக மயங்கிய போதும், எச்சரிக்கையுடன் மேசை முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்தான். சாமாறனை விட்டு அவனால் கண்களை எடுக்க முடியவில்லை. அவர்கள் ஒன்றாகக் காலை உணவைச் சாப்பிட்டார்கள், சாமாறன் மனித குல வரலாற்றைப் பற்றிய கதைகளை அவனிடம் சொன்னாள். தகமாச்ப் கதைகளால் கவரப்பட்டான். சாமாறனின் கருணை மற்றும் அவளது ஆறுதலான அக்கறையால் ஈர்க்கப்பட்டான். பிறகு வெகு காலத்திற்கு அவர்கள் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

அவளுடன் மகிழ்ச்சியாய் இருந்த போதிலும், தகமாச்ப் தனது குடும்பத்தை எண்ணி, இன்னும் வெறுமையாய் உணர்ந்தான். சாமாறனுக்கு அவனை விட விருப்பமில்லை, ஆனால் அவள் அவனை மிகவும் நேசித்ததால், அவள் அவனை மேலே உள்ள நில உலகத்திற்குத் திரும்ப அனுமதித்தாள். ஆனால், சாமாறனின் பாதாள ராஜ்ஜியம் மற்றும் பாம்புகளின் தேசம் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவள் அவனை எச்சரித்தாள். அவனுடன் நீண்ட காலம் இருந்ததால், பாம்புகளின் தேசத்தின் சில குணாதிசயங்களை அவன் எடுத்துக் கொண்டான் என்றும், அவள் அவனை எச்சரித்தாள். மற்றவர்களுடன் குளிக்க வேண்டாம் என்று அவள் அவனிடம் சொன்னாள். ஏனென்றால் நீருடன் தொடர்பு கொண்டால் அவனுடைய தோல் ஒரு பாம்புத் தோலின் தோற்றத்தை எடுக்கும் மற்றும் மனிதகுலம் அவனுடைய ரகசியத்தை அறிந்து கொள்ளும் என்பதையும் வலியுறுத்தினாள்.

தகமாச்ப் மேற்பரப்புக்குத் திரும்பி, தனது வாழ்க்கையைத் தொடங்கினான். சாமாறனுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தகமாச்ப் வாழ்ந்த நில உலகின் மன்னன் நோய்வாய்ப்பட்டான், மேலும் அவனது நோய்க்கான ஒரே தீர்வு சாமாறனின் இறைச்சியை உண்பதுதான் என்று அவரது மருத்துவர்கள் சொன்னார்கள். பாம்புகளின் பாதாள சாம்ராஜ்யத்தைப் பற்றி அறிந்தவர்கள் நாட்டில் இருப்பதாகவும், அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரே வழி அவர்கள் மீது நீரை ஊற்றுவதுதான் என்றும் அவர்கள் கதை சொன்னார்கள். ஏனென்றால், நீர் அவர்களின் தோலை பாம்பு போல செதில்களாக மாற்றும். இந்த வழியில் அவர்கள் சாமாறனின் ராஜ்யத்திற்குள் செல்லும் வழி தெரிந்த ஒருவரைக் கண்டுபிடிக்க முடியும் என்று அறிந்திருந்தனர்.

எனவே, அரசர் அனைவரையும் பொதுக்குளியலுக்குச் செல்லுமாறும், படைவீரர்களின் கண்களுக்குக் கீழே நீரில் மூழ்கும்படியும் கட்டளையிட்டார். தகமாச்ப் மறைந்து கொள்ள முயன்றான், ஆனால் வீரர்கள் அவனை நகரக் குளியலறைக்கு அழைத்துச் சென்று உள்ளே வீசினர். சாமாறன் சொன்னது போல், அவனது தோல் ஒரு பாம்பின் தோற்றத்தை எடுத்தது. வீரர்கள் அவனை நீரிலிருந்து இழுத்து, நன்றாய்க் கட்டினர். அவனை அரசரிடம் அழைத்துச் சென்றனர்.

சித்திரவதையினால், அவன் தனது ரகசியத்தை வெளியிட வேண்டி வந்தது. வீரர்கள் கிணற்றுக்குச் சென்று பாம்புகளின் ராஜ்யத்திற்குள் நுழைந்து, சாமாறனைப் பிடித்து அரசனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

சாமாறனைப் பார்த்ததும் தகமாச்ப் வெட்கமும் வருத்தமும் அடைந்தான். பிறகு சாமாறன் படை வீரர்களிடமும் அரசனிடமும் திரும்பி “நான் இறக்கப் போகிறேன், என்னைப் பற்றிய ரகசியத்தைக் கூறுகிறேன். என் வால் பகுதியையும் உடல் பகுதியையும் உண்பவர்கள், அளவுகடந்த ஞானத்தையும் நீண்ட ஆயுளையும் அடைவான். ஆனால் என் தலையை உண்பவன் சாவான்." அதன் பேரில், மன்னரின் காவல்படையின் தலைவன் சாமாறனைக் கொன்று மூன்று துண்டுகளாக வெட்டினான். காவல்படையின் தலைவன், ஞானத்தைப் பெற விரும்பி, அவளது வாலின் ஒரு பகுதியைச் சாப்பிட்டான், அரசன் அதன் உடல் பகுதியை உண்டான். அதே சமயம் சாமாறனின் மரணத்தைக் கண்டு கலங்கிய தகமாச்ப், இறக்க விரும்பி அவளது தலையின் ஒரு பகுதியை நுகர்ந்தான். ஆனால் அவனுக்கு எதுவும் ஆகவில்லை. அரசனைப் போலவே காவல்படையின் தலைவன் சுருண்டு விழுந்து இறந்தான். உண்மை என்னவென்றால், சாமாறனின் ஞானம் அவள் தலையில் நிரம்பி இருந்தது.


இப்போது தகமாச்ப்பின் ஒரு பகுதியாய் அது ஆனது. இருப்பினும், சாமாறனை இழந்த சோகத்தை தகமாச்ப்பினால் தாங்க முடியவில்லை, அதனால் அவன் தனது வீட்டை விட்டு வெளியேறி, நிலத்திலிருந்து நிலம் மற்றும் மலையிலிருந்து மலை வரை நாடு முழுவதும் அலைந்து திரிந்தான், மேலும், அவன் ஒரு பேரறிஞனாக அறியப்பட்டான். ஆனால், சாமாறன் எப்படி கொல்லப்பட்டாள் என்பது பாம்புகளுக்குத் தெரியும் என்றும், அதன் காரணமாகவே பாம்புகள் மனிதனின் கொடிய எதிரியாக மாறியது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

*****

இக்கதையானது கீழ்க்கண்ட இணைய முகவரியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/translation/story/p1.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License