உயர்வது தவறாது!
திருக்குறள் திருக்குறள் திருக்குறளாம்
தெய்வப்புலவர் வள்ளுவரின்
திருக்குறள் திருக்குறள் திருக்குறளாம்
திருக்குறள் படித்தால் உருப்படலாம்!
உண்மை பேசும் அவசியத்தை
உணர்த்திக் காட்டும் திருக்குறளாம்!
எண்ணப் படியே செயலாற்றும்
இயல்பைத் தருவது திருக்குறளாம்!
தினமும் ஒரு குறள் படிப்பதனால்
தெரியும் நன்மை தீமையெல்லாம்!
மனதில் பிறரைத் தம்மைப் போல்
மதிக்கச் சொல்லும் திருக்குறளாம்!
யார்க்கும் நன்மை செய்வதெனும்
அன்பை வளர்க்கும் திருக்குறளாம்
வேர்க்க உழைக்கும் மனிதர்களே
வெல்வார் என்னும் திருக்குறளாம்!
- கவிஞர். செல்ல. கணபதி
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.