டெங்கு ஒழிப்போம்.. வாங்க!
நல்ல நல்ல பிள்ளைகளே இங்கே ஓடி வாங்க...
நான் சொல்லப் போற விஷயத்தை நல்லாக் கேளுங்க
ஊரெல்லாம் பரவுது ஒரு கொடிய நோயுங்க
உயிர் பறித்து விடும் அந்த நோய் பேரு டெங்குங்க
அந்த நோயைப் பரப்புறது ஏடீஸ் கொசுதானுங்க.
அந்தக் கொசு வளரக் காரணம் தேங்கும் நீர்தானுங்க.
தண்ணீருள்ள பானையை மூடி போட்டு வையுங்க
தண்ணீர் தேங்கும் பொருட்களெல்லாம் ஓரங்கட்டுங்க
பள்ளமிருந்தால் மண்ணைப் போட்டு நிரப்புங்க
பாழாய்ப்போன கொசு லார்வாக்களை வளர விடாதீங்க
பாதுகாப்புக்காக நிலவேம்புக் குடிநீரைக் குடித்திடுங்க
பாவிக் கொசுவிடமிருந்து பாதுகாப்பைப் பெற்றிடுங்க
இந்த டெங்கு வந்தா இரத்த அணுக்கள் குறைஞ்சிடுங்க
இரண்டு மூன்று நாட்ளுக்குக் காய்ச்சல் இருக்குமுங்க
இந்த அறிகுறிகள் தெரிந்தாலே சிகிச்சை அவசியமுங்க
அரசு மருத்துவமனைகளில் அது இலவசமாக் கிடைக்குதுங்க
எங்கும் இந்தச் செய்தியை எடுத்துச் சொல்லுங்க
எல்லாம் எனக்குத் தெரியுமுன்னு ஏமாந்திடாதீங்க!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.