இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

கி. ரா. சிறுகதை காட்டும் மாற்றுப்பாலினத்தின் மனவெளி

ம. செந்தில்குமார்


முன்னுரை

காலந்தோறும் தோன்றிய இலக்கியங்கள் அவ்விலக்கியம் தோன்றிய காலத்தின் கண்ணாடியாக இருந்து அச்சமூகத்தைக் காட்டி வருகிறது. அந்த வகையில் ஆங்கிலேயர் வருகையால் தோன்றிய சிறுகதை இலக்கியமும் மிக முக்கியமான பங்களிப்பைத் தருகிறது. சிறுகதை உலகில் புதுமைப்பித்தன் கல்கி என்ற மிகப்பெரிய ஆளுமைகள் சிறுகதைகளைப் படைத்திட்டப் பிறகு “மழைக்காகத்தான் பள்ளிக்கூடம் சென்றேன் அப்போதும் பாடத்தைக் கவனிக்காமல் மழையையே இரசித்து விட்டு வந்து விட்டேன்” என கூறும் கி. ரா முறையான கல்வியறிவினைப் பெறாமல் தன் மண் சார்ந்த மக்களின் வாழ்வியலை அனுபவத்தின் ஊடாகப் பெற்றுத் தன் முப்பாதாவது வயதில் எழுதத் தொடங்கியவர். 1958-ல் சரஸ்வதி இதழுக்கு எழுதிய மாயமான் எனும் சிறுகதை மூலம் தன்னை எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டவர். அதனைத் தொடர்ந்து இறவாப் புகழ் பெற்ற பல்வேறு படைப்புகளைத் தமிழ் உலகிற்கு வழங்கியவர் கி. ரா. இவர் 1964-ல் தீபம் இதழுக்காக எழுதிய கதை ‘கோமதி’. இக்கதையில் 30 வயது மதிக்கத்தக்க கோமதி செட்டியார் என்கின்ற ஆண் உருவம் பெற்று பெண் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கிய மாற்றுப்பாலினத்தின் மனவெளியைக் காணமுயலும் இக்கட்டுரை, முதலில் கி. ரா. வின் படைப்பாளுமையையும், பின் அக்கதைக் காட்டும் மூன்றாம் பாலினத்தின் மனவெளியையும் அக்காலச் சமூகம் மூன்றாம் பாலினத்தின் மீது கொண்ட முழுப்பார்வையையும் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கரிசல் வட்டார எழுத்தின் முதல்வர்

ஒவ்வொரு காலக்கட்டத்தில் தோன்றிய ஒவ்வொரு இலக்கியமும் அது தோன்றிய நிலப்பின்னனியையும், அந்நிலத்தில் வாழும் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை இவற்றைத் தன்னுள் பதிந்தே வரும். இவ்வாறாகத் தோன்றிய இலக்கியங்களில் தமிழில் 19-ம் நூற்றாண்டுக்கு முன் அனைத்து தமிழ் மக்களுக்குமான வாழ்வியலைப் பொது நிலையில், பொதுமொழியில் பதிந்து வந்துள்ளன. ஆனால் 19, 20-ம் நூற்றாண்டில் இலக்கிய வகைகளிலும் கதை புனையும் மரபிலும், மொழிநடையிலும் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அம்மாற்றத்தில் ஒன்றுதான் வட்டார இலக்கியம். இவ்வட்டார இலக்கியத்தின் முதல்வராக கி. ராஜ நாராயணன் அவர்களைக் குறிப்பிட முடியும். முதன்முதலாக கரிசல் வட்டாரத்தைப் பதிவு செய்தவர் கு. அழகிரிசாமி. அவரைத் தொடர்ந்து கரிசல் வட்டார மக்களை மட்டுமே தம்படைப்பில் படைத்திட்டவர் கி. ராஜ நாராயணன். அவருக்குப் பின் பூமணி, பா. செயப்பிரகாசம், முத்தானந்தம், வீர. வேலுச்சாமி, கோணங்கி, தமிழ்ச்செல்வன், எஸ். ராமகிருஷ்ணன், சொ. தருமன் போன்றோர் கரிசல் வட்டாரத்தை இலக்கிய வெளியில் பதிவிட்டு வருகின்றனர். கரிசல் வட்டார எழுத்தைப் போன்றே பிற வட்டார இலக்கியங்களும் தோற்றம் பெற்று வருகின்றன. அந்த வகையில் திருவனந்தபுரம் சாலைக்கடைப்பகுதி மக்களின் வாழ்வியலை ஆ. மாதவன் “சாலைக்கடைப் பகுதி இலக்கியம்” என்றும் குமரி மாவட்ட மக்களின் வாழ்வியலை நாஞ்சில் நாடனும் எழுதிவருகின்றனர். மேற்கண்டவைகள் மூலம் வட்டார இலக்கிய உருவாக்கத்தில் கி. ரா. மிக முக்கிய இடம் வகிக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.



கி. ரா படைப்பிலிருக்கும் கரிசல் மக்கள்

கி. ரா. வின் படைப்பிலிருக்கும் கரிசல் மக்கள் யார் என்பது குறித்தும் அவர்கள் தொழில் குறித்தும் கி. ரா பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இப்பகுதியில் வாழ்பவர்கள் ஆந்திராவிலிருந்து குடியேறிய மக்கள் பெரும்பாலும் தெலுங்கு மொழி பேசும் மக்கள். இங்கு விவசாயமே முக்கியமான தொழில். இந்தப் பகுதி நிலங்களின் விவசாய அமைப்பே விநோதமானது. மழை அதிகமாகிடவும் கூடாது! குறைந்து விடவும் கூடாது. இம்மண்ணின் முன்னேற்றத்திற்குத் தனித்திட்டம் வேண்டும். கரிசல் மாவட்டம் என்று தனியாகப் பிரிப்பது பயன்தரும். மேற்கண்டவைகள் மூலம் கி. ரா. தம் மண் மீதும், மக்கள் மீதும் கொண்டிருந்த அக்கறையை விளங்கிக் கொள்ளலாம்.

கி. ரா. வின் பன்முகத்திறன் கொண்ட படைப்பாளுமை

கல்வி அறிவைப் பள்ளிப்படிபின் மூலம் முறையாக பெறாத கி. ரா. தன் முதல் கதையை எழுதத் தொடங்கிய போது 30 வயது. சிரத்தையான வாசிப்பு மற்றும் தன் மண் சார்ந்தும், மக்கள் சார்ந்தும் கூர்ந்த கவனிப்பின் ஊடாகப் பெற்ற அனுபவத்தைத் தன் படைப்பினுள் கொண்டுவந்தவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, கரிசல் காட்டு கடுதாசி, கடிதங்கள், சொல்கதை, நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு என பல்வேறு படைப்பாளுமையின் வெளிப்பாடாக கி. ரா. மிளிர்வதைக் காணமுடிகிறது. ‘என்னுடைய மக்கள் பேசுகிற பாஷையில், அவர்கள் சிந்திக்கிற மனோ இயலில் அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமையவேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற சூழ்நிலையில் என்னுடைய சிருஷ்டிகள் அமைய வேண்டும் என்று நினைக்கிறவன் நான். அவர்கள் சுவாசிக்கிற காற்றின் வாடை, அவர்கள் பிறந்து விளையாடி நடந்து திரிகிற என் கரிசல் மண்ணின் வாசமெல்லாம் அப்படியே என் எழுத்துக்களில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது என்னுடைய தீராத விருப்பம். இந்த மண்ணை நான் அவ்வளவு ஆசையோடு நேசிக்கிறேன்.” (கரிசல் காட்டு கடுதாசி நூலின் பதிப்புக் குறிப்பு) என்று கூறும் கி. ரா. தான் சொல்லியதைத் தன் படைப்புகளில் நிகழ்த்திக் காட்டியவர்.

தம் சிறுகதைக்குரிய வடிவமாகக் கி. ரா. புனைகதை மரபையும் நாட்டுப்புறக் கதை மரபையும் இணைத்துப் புதிய வடிவமாக உருவாக்குகிறார்.

கோமதியின் இளமைக் காலமும் ஏக்கமும்

முப்பது வயது மதிக்கத்தக்க கோமதி செட்டியாரின் கதையை கி. ரா. கதை சொல்லியாக இருந்து, அவன் இளைமைக் காலத்தையும், அவனுக்கு இருந்த விருப்பத்தையும் பின்வருமாறு கூறுகிறார். “அவனுக்கு முன்பிருந்த ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடையோடு பூ வைத்துக் கொள்வதிலும், வளை அணிந்து கொள்வதிலும் கொள்ளை ஆசை... பெண் குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போவான். ஆண்களோடு விளையாட வேண்டியது ஏற்பட்டு விட்டால் வீடுகட்டி, கல்யாணம் பண்ணி விளையாடும் விளையாட்டில் தான் பிரியம் அதிகம். அதிலும் மணப்பெண்ணாகத் தன்னை வைப்பதென்றால் தான், விளையாட வரச் சம்மதிப்பான். (கி.ரா. சிறுகதைகள் ப.24) எனக் கூறுவதிலிருந்து கோமதி செட்டியார் ஆண் உருவம் பெற்றிருந்தாலும், தன்னைப் பெண்ணாகவும், ஆண் உருவத்தை மாற்றிப் பெண்ணாகவே மாற வேண்டுமென்று விரும்பிய கோமதியின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.



பெண்கள் மனதை தன்வயப்படுத்தும் பாங்கு

பெண்களைப் போலவே அனைத்து செயல்களையும் செய்து வந்த கோமதி செட்டியார், பெண்கள் தன்னையும் அவர்களுடன் சேர்த்துக் கொள்ளவும் தான் அவர்களுடன் பழகவும் வேண்டுமானால் பெண்களுக்குப் பிடித்தமான விடயங்களைக் கற்றுக்கொண்டு அவர்களைத் தன்வயப்படுத்த “ஆண், பெண் சம்பந்தமான பால் உணர்ச்சிக் கதைகளைச் சொல்லி அவர்களை மகிழ்விப்பான். மனசைத் தொடும்படியான ஒப்பாரிகளைப் பாடி அவர்களின் கண்ணீரை வரவழைப்பான். இவனுக்கு ஒரே ஒரு கலை அற்புதமாகக் கை வந்திருந்தது. சமையல் பண்ணுவதில் இவனுக்கு நிகர் இவனேதான். (கி.ரா.சிறுகதைகள் ப.24) என்று கி. ரா கூறுவதன் மூலம் அவன் மனம் பெண்மையுடன் இருப்பதற்காக அவர்களுக்குப் பிடித்தமானதையே தனக்கு பிடித்தமானதாக மாற்றிக் கொண்டான் என்பதும் புலனாகிறது.

பெண்மையை ரசிக்கும் மனம்

உலகில் ரசிக்க எவ்வளவோ இருந்தாலும், கோமதியின் மனம் என்னவோ பெண்களுக்கு அழகைத் தரும் அல்லது அடையாளத்தைத் தரும் (புடவை,வளையல்) பொருட்களின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவனாக இருந்தான். என்பதனைப் ‘பட்டுச் சேலைகளின் சரசரப்பும் வியர்வையோடு கலந்த மல்லிகைப் பூவின் சுகந்த நெடியும் கோமதியைக் கிறங்க அடித்தது... யக்கா... இந்தச் சேலை என்ன விலை... ? ... யக்கா உனக்கு இந்தச் சேலை ரொம்ப நல்லாயிருக்கு...

கோமதிக்கு, சுலோ தன் வலதுகை நிறைய அணிந்திருந்த வளையல்கள் மீது தான் கண்ணாக இருந்தது. (கி. ரா. சிறுகதைகள் ப.25) என்ற வரிகளின் வழி கோமதி செட்டியாரின் மனம் பெண்ணுக்குரியதையும், பெண்மையையும் விரும்பியதை அறிய முடிகிறது.

பெண் என்ற அங்கீகாரத்திற்கு ஏங்கும் மனம்

ரகுபதி நாயக்கரின் வீட்டிற்கு சமையல்காரனாகச் சென்ற கோமதியின் உணவை உண்ட ரகுபதி நாயக்கர். இந்தப் புதுச் சமையல்காரனைப் பார்க்க வேண்டும் என்று தன் அறைக்கு அழைத்தார். அறையினுள் சென்ற கோமதி செட்டியாரைக் கண்டதும் ரகுபதி நாயக்கர், “ஆகாயத்தை நோக்கிச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். பலே, பலே வா இங்கே . உன் பேர் என்ன? ‘கோமதி’ கோமதியோ ! பேஷ் பேஷ்...!” என்று கூறியவர் தன் பீரோவைத் திறந்து ஒரு ஜோடி பட்டுக்கரை வேஷ்டிகளைக் கொடுத்தார். ஆனால் கோமதி செட்டியார் இதுவரை அதைக் கட்டவே இல்லை. இந்நிகழ்வின் மூலமாக அந்த பரிசுப்பொருள் ஆணிற்கு உரியது. அதுவே பெண் சார்ந்த பொருளாக இருந்தால் அதிகம் சந்தோப்பட்டிருப்பாள். இந்த இடத்திலும் கோமதிசெட்டியாரின் மனம் பரிசையும் மறுத்து பெண் என்ற அங்கீகாரத்திற்கு ஏங்குவதனை அறிய முடிகிறது.

ஆண்துணை தேடும் மனம்

ரகுபதி நாயக்கரின் மகன் ரகு என்பவன் வெளியூரிலிருந்து வீட்டிற்கு வருவதை அறிந்த கோமதிசெட்டியார், தன் காதலன் வருவதைப் போல் உணருகிறான். எவ்வளவுதான் பெண்கள் தன்னுடன் இருந்தாலும் தனக்கென்று ஓர் ஆணின் துணை வேண்டும் என்று ஏங்கிய கோமதிசெட்டியாரின் மனத்தினை “ ரகுவைப் பார்த்த கோமதிக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. முதலில் அதிர்ச்சியாயிருந்தது. மலமலவென்று கண்களை மூடித்திறந்தான். திடீரென்று எங்கேயும் இல்லாத வெட்கம் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டது. (கி.ரா. சிறுகதைகள் ப.26) என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.



கேலி அவமானத்தின் போது

எல்லா மாற்றுப் பாலினத்தாரையும் இந்தச் சமூகம் எப்படிப் பார்த்ததோ அதே போல் தான் கேலியும் அவமானமும் கோமதி செட்டியார்க்கும் இருந்தது. இதனை கோமதிசெட்டியார், ரகுபதி நாயக்கரின் மகன் ரகுவை முதன்முதலாக பார்க்கச் செல்லும் போது பால் கொண்டு செல்கிறான். இவனது தோற்றத்தைக் கண்டு “திரும்பிப் பார்த்தான். முகத்தைச் சுழித்தான். இந்த ரசவிஹாரத்தை அவன் ஆண்மை நிறைந்த உள்ளத்தால் தாங்க முடிவில்லை.(கி.ரா.சிறுகதைகள் ப.27) என்ற வரிகள் மூலம் அந்தச் சமூகம் மாற்றுப்பாலினத்தவர் மீது கொண்ட பார்வையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஓர் ஆணிற்கு மனைவியாகப் பணிவிடை செய்ய ஏங்கும் மனத்தினை கோமதி செட்டியார் ரகுவை கணவனாகவே கருதுகிறாள். அவனுக்கு மனைவியாக எல்லா பணிவிடைகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள். இதனைக் கதையின் பல இடங்களில் காண முடிகிறது. குளிப்பறையில் ரகுவுக்கு தண்ணீர் எடுத்து வைத்தான் சோப்பும் துவாலையும் கொண்டு வைத்தான்... உங்களுக்கு நான் முதுகு தேய்க்கிறேனே... என்ற வரிகளில் கோமதிசெட்டியாரின் மனோநிலை என்ன என்பதனைக் கதையாசிரியர் காட்டுகிறார்.

இறுதியில் கோமதிசெட்டியாட் ரகுவால் ஓங்கி அறையப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறான். பல்வேறு மனவேதனைகளுக்குப் பிறகு கதையின் நிறைவில் கோமதிசெட்டியார் ரகு இல்லாத ஏக்கத்தில் ரகுவின் புகைப்படத்தை முன்வைத்து, தன்னை முழுவதுமாகப் பெண்ணாக மாற்றிக் கொண்டு அழுது புலம்புவதாகக் கதையை நிறைவு செய்துள்ளார். அக்கதையின் ஊடாக கோமதிசெட்டியார் என்கிற கதாபாத்திரத்தின் மூலமாக, அவர் காலத்தில் மூன்றாம் பாலினத்திற்கு இருந்த சமூக மதிப்பையும், அவர்களின் மனநிலையையும் அறிய முடிகிறது.

முடிவாக

கி. ரா. இயல்பாகவே தன் மண் சார்ந்த மக்களை பதிவிடுதலில் ஆர்வம் கொண்டவர் என்றும், தன் படைப்பாளுமையை எவ்விதம் வெளிப்படுத்தினார் என்பதனையும், கரிசல் காட்டு வட்டார இலக்கியத்தின் தந்தையாக விளங்கும் இவா; 1964-லேயே பதிவிட்டு சு. சமுத்திரத்தின் வாடமல்லி போன்ற அரவாணிகள் இலக்கியம் என்ற வகைமைக்கு முன்னோடியாகத் தன் பங்களிப்பை அளித்துள்ளார். கரிசல் வட்டார மக்களை முழுமையாகப் பதிவிட்ட இவரின் எழுத்து, வாழ்க்கை, மூன்றாம் பாலினத்தை பதிவிட்டதில் முழுமை அடைகிறது. மாற்றுப்பாலினத்தின் மனவெளியைக் காண எத்தனித்த இக்கட்டுரை மாற்றுப் பாலினத்தைப் பதிவிட வேண்டும் என்ற படைப்பாளியின் மனவெளியையும், கதையின் நாயகன் மற்றும் நாயகியாக திகழும் கோமதியின் (மாற்றுப் பாலினம்) மனவெளியையும், கதைக்குள் வரும் ஏனைய கதாப்பாத்திரங்களின் மாற்றுப்பாலினம் குறித்த மனவெளியையும், இக்கதையை வாசிக்கும் வாசகன் அக்காலச் சமூகம் மாற்றுப்பாலினம் குறித்து கொண்டிருந்த புரிதலையும், பார்வையையும், சமகால மூன்றாம் பாலினத்தோடு பொருத்திப்பார்க்கும் போது வெளிப்படும் மனநிலையையும் விளக்கி நிற்கிறது.

பார்வை நூல்கள்

1. கரிசல் காட்டு கடிதாசி, கி. ராஜநாரயணன்.

2. கி. ராஜநாரயணன் சிறுகதைகள், அன்னம் பதிப்பகம்.

3. கி. ரா. சிறுகதை படைப்பாளுமை, கி. மங்கையர்கரசி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p103.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License