இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

முனைவர் ரெ. கார்த்திகேசு படைப்புகளில் திருக்குறளின் தாக்கம்

பெ. பழனிவேல்
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் - 636007.


முன்னுரை

“முப்பது கோடி முகமுடை யாளுயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்”

என நம் தமிழ்த் தாயின் சிறப்பினைப் பாட்டுக்கொரு புலவர் பைந்தமிழ் பாரதியார் கூறுவதைப் போல சிந்தனையால் ஒன்றுபட்டுள்ள தமிழை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் அமைத்து ஏழுசீர், இரண்டடியில் உலக மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத கருத்துக்களை வள்ளுவப் பெருந்தகை செவ்வனே செப்புகின்றார். இவ்வாறாக அமைந்துள்ள வாழ்க்கை முறைகளைத் தமது படைப்புகளின் மூலம் முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் குறள் வழிக் கருத்துக்களை மையமாகக் கொண்டும், தன்னுடைய படைப்புகளில் திருக்குறள் செப்புகின்ற அறக்கருத்துக்களைப் பின்பற்றியும் உள்ளதை இங்கு காண்போம்.

கடவுள் வாழ்த்து

மலேசியாவில் பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் ஒன்றாகக் கூடி வாழ்ந்து வந்தாலும், அங்கும் நம்முடைய தமிழ்க் கடவுளாக விளங்குகின்ற முருகப்பெருமான் குடிகொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

பல்வேறு மொழிகளையும் கற்றுத் தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருகின்ற மலேசிய மக்களிடத்தில்,

“யாதும் ஊரே! யாவரும் கேளீர்!”

என்ற கணியன் பூங்குன்றனாரின் கூற்றின்படி, நமது தமிழ் மொழியை முதன்மையாகக் கொண்டுள்ள படைப்பாளர் முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் தமது படைப்புகளில் ஒன்றாகிய “அந்திம காலம்” நாவலில் ஆங்கிலத்தை மட்டுமேப் பிரதானமாக கொண்டுள்ள சுந்தரம் என்பவரின் பேரக்குழந்தையாகிய பிரேம் என்பவருக்குத் தமிழ் மொழியின் அவசியத்தையும், தமிழ்ச் சுவையுணர்வினையும் வழங்கி, திருக்குறளின் அறக்கருத்துக்களை எடுத்துக்கூறியது மட்டுமின்றி கற்றுக்கொடுக்கவும் செய்கின்றார்.


எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்றும், அதுபோல உலகம் ஆதிகபவன் அவர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பதையும்

“அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” (குறள் -1)

என்னும் வள்ளவரின் கடவுள் வாழ்த்து, குறட்பாவை சொல்லிக் கொடுத்து ஆனந்தப்படுகின்றார். இதன் மூலம் திருக்குறளின் முக்கியத்துவத்தையும், இன்றியமையாமையையும் படைப்பாளர் தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது.

அறம் வலியுறுத்தல்

திருக்குறள் வாழ்க்கை மற்றும் அறத்தையே அடிப்படையாகக் கொண்டது.

“அறத்துப்பாலுக்கு அடிப்படை அறமே”

“பொருட்பாலுக்கு அடிப்படை அறமே”

“இன்பத்துப்பாலுக்கு அடிப்படை அறமே”

சுருங்கக் கூறினால் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களும் அறத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

தொல்காப்பியர் கூறுவது போல,

“சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (தொல். கற்பு - 51)

இவற்றில் சிறந்தது என்பதற்கு. ‘அறம், பொருள், இன்பத்திற்குச் சிறந்தது வீட்டின்பம் என்று நச்சினார்க்கினியர் எடுத்துரைக்கின்றார். தமிழர் மெய்யியலில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அடிப்படை நோக்கங்களில் இன்பம் நோக்கப்படுகிறது.


இவற்றையெல்லாம் முதன்மையாகக் கொண்டு முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் தன்னுடைய படைப்புகளில் குறிப்பாக நாவல்களில் வீட்டின் சூழலுடன் கதைகளை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறாகப் படைத்துள்ள ஒரு நாவலில் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் சுந்தரம் அவர்கள் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துபராகவும், இன்னும் சற்றுக் கூடுதலாகத் தன்னுடைய மனைவி ஜானகி, செல்லப்பிள்ளையாகிய மகள் மற்றும் அருமை நண்பர் ராமா போன்ற எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துபவராக காட்டப்படுகிறார். ஏனென்றால்,

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்
பண்பும் பயனும் அது” (குறள் - 45)

என்று திருவள்ளுவர் சொல்லுகின்றார்.

அன்புதான் இல்வாழ்க்கையின் பண்பு, அறம் தான் அதன் பயன், இவையே இல்வாழ்க்கையின் பண்பாகும், பயனும் ஆகும்.

இவ்வாறான கருத்துக்களை எல்லாம் முதன்மையாகக் கொண்டு அன்பு பொருந்திய குடும்ப அமைப்புகளையும், சூழல்களையும் எழுத்தாளர் முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் தன்னுடைய “அந்திம காலம்”, “தேடியிருக்கும் தருணங்கள்”, “வானத்தினால் அல்ல”, “ இன்னொரு தடவை” போன்ற படைப்புகளில் அறக்கருத்துகளை முன்னிலைப்படுத்துகின்றார்.

ஒழுக்கத்தின் உயர்வு

எவரொருவர் ஒழுக்கத்துடன் இருக்கின்றாரோ, செயல்படுகின்றாரே அவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு தானாக வந்து சேரும்.

“இழுக்கத்தின் மிக்க இழிவில்லை இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு” (பழமொழி -64)

ஒழுக்கத்தைப் பின்பற்றினால் என்றும் மேன்மை அடைய முடியும்.

நல்ல ஒழுக்கம் உடனே பயன் தராது என்றாலும், பின்னர் விளையப்போகும் நன்மைகளுக்கு வித்திடுவது போன்றதாகும் என்று வள்ளுவர்,

“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி” (குறள் 137)

ஒழுக்கத்தினைக் கடைப்பிடிக்காதவர்கள் சமுதாயத்தில் மதிப்பிழந்து கீழான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று வள்ளுவர் கூறுகின்ற கருத்தினைச் சிந்தையிலே முன் நிறுத்தி முனைவர் ரெ. கார்த்திகேசு படைப்புகளான நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றில் ஒழுக்கத்தின் மேன்மையை முன்னிருத்த அவ்வொழுக்கத்துடன் கூடிய கதை மாந்தர்களையும், கதைக் கருத்துகளையும் அமைத்து ஒழுக்கத்தினால் அடைகின்ற மேன்மைகளையும் பட்டியலிட்டுத் தந்திருக்கின்றார்.


மேலும், ஒழுக்கமில்லாதவர் அடையும் நிலையையும் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்” (குறள் 136)

கல்விச்சிறப்பு

உழைக்கின்ற மக்களை மட்டுமின்றி, எந்த ஒன்றையும் அதன் இருப்பில், நடப்பில் போக்கில் புரிந்து கொள்ளவேண்டும் என்றால் நல்ல கல்வி வேண்டும்.

எண்ணும் எழுத்தும் தான் உயிர் வாழுகின்றவருக்குக் கண் என்று சொல்லுகிறார் வள்ளுவர்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” (குறள்: 392)

இப்படிப்பட்டக் கல்வியைக் கல்லாதவர்களைத் திருவள்ளுவர் எப்படிப் பார்க்கிறார்?

“கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்” (குறள் - 393)

என்று முகத்திலிருக்கும் இரண்டு கண்களையும் புண்ணாகப் பார்க்கின்றார்.

தெய்வப்புலவர் கூறுவது போல ஒருவர் பெற்ற கல்விச் செல்வம் என்றும் அழியாது, அதனை விட வேறு எந்தச் செல்வமும் செல்வம் ஆகாது, நன்றாகக் கல்வி கற்றவர்கள், அதனால் தாங்கள் மட்டுமின்றி பிறருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்துகின்றனர்.

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை” (குறள்-400)

எனவேதான் முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் தமது படைப்புகளில் கல்விக்கு மிக முக்கியப் பங்கினை வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு படைப்பிலும் கதை மாந்தர்களின் கல்வி முறைகளைப் பார்த்தோம். ஆனால், தொடக்கக்கல்வி, உயர்நிலைக் கல்வி, உயர்கல்வி, மேலைநாட்டுக் கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகள், பொருளாதார வளர்ச்சி பற்றிக் கல்வி, முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகள், மருத்துவம், பொறியியல் மற்றும் விஞ்ஞானம் என பல்துறைகளில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கின்ற விதமாக ஒவ்வொரு நாவலிலும் கதை மாந்தர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வியைக் கற்பதன் சிறப்பியல்புகளையும் எடுத்துரைக்கும் விதமாகச் சூழல்கள் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

ஒருவர் கல்வி கற்பதன் மூலம், தனக்கு மட்டுமின்றி தன்னைச் சார்ந்துள்ள அனைவருக்கும் இக்காலம் மட்டுமின்றி எக்காலத்திலும் செல்வத்தைக் காட்டிலும் கல்வியே துணையாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் முனைவர் ரெ. கார்த்திகேசு படைப்புகளில் கல்வி கற்பதன் சிறப்புகளைச் சுட்டிக்காட்டுவதை நம்மால் அறிய முடிகிறது.


நட்புணர்வு

நட்புரிமை கொள்வதற்கு அடிக்கடி சந்தித்துப் பழக வேண்டும் என்பதில்லை. ஒரு நாள் கண்டாராயினும் உணர்வுடையார் அவ்வுணர்வுடைமை தானே நட்பாகும் என்பார்.

“கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்குபல கழிய
வழுவின்றிப் பழகிய கிழமையர்” (புறம் : 216:1-3)

இவ்வாறான நட்புணர்ச்சியைத் தன்னுள் கொண்டுள்ள முனைவர் ரெ. கார்த்திகேசு தன்னுடைய “அந்திம காலம்” நாவலில் முக்கியமான கதை மாந்தராக அமைகின்ற சுந்தரம் மற்றும் அவரது உயிர்த் தோழர் ராமா அவர்களின் நட்பின் வெளிப்பாடுகளை மிகுதியாக காணமுடிகின்றது. அதே போல, செவிலியர் மதர்மேகி மற்றும் சுந்தரம் ஆகியோரின் நட்பு, நட்பிற்கே இலக்கணமாக திகழுகின்றது என்று சொன்னால், அது மிகையாகாது.

இவர்களுடைய நட்பு, முகத்தளவிலே காட்டக்கூடிய நட்பு அன்று, மலர்ச்சியோடு உள்ளத்திலே இருந்து வருகின்ற அன்பினால் காட்டக்கூடிய நட்பாக இருக்கின்றன.

“புணர்ச்சி பழுகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்” (குறள் 785)

இவர்களுடைய நட்பிற்குச் சிறந்த அடையாளம் என்று எதைச் சொல்லலாம் என்றால்,

“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு” (குறள் 782)

என்ற குறட்பாவிற்கு ஏற்ப முனைவர் ரெ. கார்த்திகேசுவின் படைப்புகளில் எந்த நிலையிலும் மனம் வேறுபடாமல், தேவைப்படும் போதெல்லாம் உதவி செய்து, நட்பின் மிகுதியால் தாங்க வேண்டும் என்று சொல்லுகின்ற நட்பு அமைந்திருக்கும் விதமாகப் படைப்புகளைத் தந்திருக்கின்றார்.

காதல் சிறப்புரைத்தல்

காதல் சிறப்பை இருவரும் பரிமாறிக் கொள்ளுவதைத்தான் காதற் சிறப்புரைத்தல் என்று திருவள்ளுவர் சொல்லுகிறார்.

நம்முடைய தமிழ் இலக்கியங்களில் தலைவன் தலைவியின் அன்பின் வெளிப்பாடு காதல் பற்றிய செய்திகளை மிகுதியாகக் காணமுடிகிறது.

இவ்வாறாக, காதல் கொண்ட இருமனங்களும் பார்த்துப்பழகிப் பின்னர் ஏதேனும் ஒரு கடமைக்காகப் பிரிந்து இருக்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது. அப்போது தான் காதலின் உண்மையான அன்பின் வெளிப்பாடு மிகுதியாகின்றது. பார்த்துப் பழகிய கண்கள் பிரிந்த பிறகு உறங்குவதில்லை. உண்மைதான்.

“கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எங் காத லவர்” (குறள் - 1126)

பொதுவாகக் காதலர்களுக்குக் காத்திருப்பது மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். ஏனென்றால் முனைவர் ரெ. கார்த்திகேசுவின் “தேடியிருக்கும் தருணங்கள்” நாவலில் தந்தையின் ஆசைப்படி உயர் ஆய்வுப் படிப்பினைத் தொடர கோலாலம்பூரிலிருந்து இலண்டன் சென்ற சூரியமூர்த்தியின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றாள் அன்புக் காதலி பூங்கொடி.

“ஓர் உயிர் உடலை விட்டுப் பிரிய விரும்பாது”

இது அனைவரும் அறிந்ததே, அதாவது உயிரின்றி உடலில்லை, உடலின்றி உயிரும் இல்லை. இந்த உலகில் இயற்கையுடன் பொருந்தியதுதான் உண்மையான காதல், ஆம்,

“உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு” (குறள் - 1122)

இப்படிப்பட்ட அன்பு, வள்ளுவர் கூறுகின்ற வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றிச் சிறிதும் மாறாமல் அவற்றை ஒழுக்க நெறியுடன் பின்பற்றுவதால் காதல் மலர்ந்து நறுமணம் வீசுகின்றது. என்பதைப் படைப்பாளர் ரெ. கார்த்திகேசு அவர்களின் புதினங்கள் நமக்குக் காதல் சிறப்பினைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

முடிவுரை

இவ்வாறாக திருவள்ளுவரின் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலில் கூறுகின்ற அறக்கருத்துக்கள் மக்கள் அனைவராலும் ஏற்கத்தக்கன என்பதில் ஐயமில்லை.

இவைகளை மலேசிய எழுத்தாளர்களில் முதன்மையான எழுத்தாளர் என்ற சிறப்பினைப் பெற்ற முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்கள் வள்ளுவர் கூறுகின்ற அறக்கருத்துகளையேத் தனது படைப்புகளில் முன்னிலைப்படுத்துகின்ற பாங்கினை நம்மால் காணமுடிகிறது.

“அறம் எனப் பட்டதே இல்வாழ்க்கை”

துணை நூல்கள்

1. ரெ. கார்த்திகேசு, அந்திம காலம், சீதை பதிப்பகம், சென்னை-5

2. ரெ. கார்த்திகேசு, இன்னொரு தடவை, மித்ரா வெளியீடு, மலேசியா, சென்னை.

3. ரெ. கார்த்திகேசு, தேடியிருக்கும் தருணங்கள், சீதை பதிப்பகம், சென்னை-5

4. முரசு நெடுமாறன், மலேசியத் தமிழரும் தமிழும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-113

5. மு. அர்த்தனாரி, திருவள்ளவரின் நெஞ்சம், நாட்டுறவுப் பண்ணை நங்கவள்ளி, சேலம்-636454

6. ஜே ஸ்ரீ சந்திரன், திருக்குறள் விளக்கம், தமிழ் நிலையம், சென்னை-17.

7. கீர்த்தி, மகாகவி பாரதியார் கவிதைகள், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p122.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License