இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

அகிம்சையின் வலிமை - ஆகஸ்ட் 15

ஆல்பர்ட் பெர்னாண்டோ


இன்றைக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்க நம்மால் முடிகிறது. சும்மாவா சுதந்திரம் கிடைத்தது?

அந்த வீர சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர் ஈந்தவர் எத்தனை? தங்கள் சுகபோகங்களை சுட்டுப் பொசுக்கிக் கொண்டு வியர்வை சிந்தி இரத்தம் சிந்தி, உறவுகளை இழந்து, காவலர்களின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு தங்கள் அவயவங்களை இழந்து தங்களை நாட்டுக்காக மெழுகுவர்த்தியாக உருக்கிக் கொண்டவர்கள் எத்தனை எத்தனை பேர்கள்! 61 வயது காந்தி 241 மைல் தன் பாதத்தை தேய்த்து உடலை வருத்தி நடத்திய தண்டி யாத்திரை; பட்டினிப் போர் , உண்ணா நோன்பு, ஆசிரமம், சிறைச்சாலை என்று உடலை வருத்தி உருக்கிக் கொண்ட மகாத்மா! அந்த மகாத்மாவோடு உருகி உதிர்ந்த தியாகிகள் எத்தனை பேர்கள்? அந்த மெழுகுவர்த்திகள் தந்த வெளிச்சத்தில் இன்று நாம்...!

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு முக்கிய வரலாற்று நிகழ்ச்சியாக அமைந்ததுதான் வெள்ளையனே வெளியேறு இயக்கம். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் இந்தியாவை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. அச்சமயத்தில், பிரிட்டிஷாருக்கு இந்தியர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமானால் இந்தியாவின் அதிகாரத்தையும் முழு உரிமையையும் இந்தியர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும் என்று காந்தியடிகள் கூறினார்.

பர்மா, வங்காளம் உள்ளிட்ட பகுதிகளைத் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்த ஜப்பான் படையினரிடம் பிரிட்டிஷார் பின் வாங்கினர். சிங்கப்பூர், மலேசியா, பர்மா ஜப்பானிடம் சரணடைந்து விட்டன. அந்நாடுகள் போரில் சீர்குலைந்தன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதே நிலை இந்தியாவுக்கும் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆகவே, இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறிவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.



பிரிட்டிஷார் போரிலிருந்து நம்மை பாதுகாப்பார்கள் என்று நினைக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு ஓர் இயக்கம் வேண்டும் என்று காந்தியடிகள் சிந்தித்தார்; சிந்தனையின் விளைவில் பிறந்த இயக்கம்தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் காந்தி ஏன் இப்படி ஒரு கருத்தை தெரிவிக்கிறார் என்று பல தலைவர்கள் கருதினார்கள். கோரிக்கை வைப்பதற்கு இது சரியான நேரமா என்று கூட கேட்டனர். ஆனால், காந்தியடிகளோ, "பைத்தியக்காரன் என்று குற்றம் சாட்டினால் கூட பொருட்படுத்த மாட்டேன். இந்தியாவின் விமோசனத்துக்கு செய்ய வேண்டிய கடமை இது என்று நினைப்பேன் "என்று அப்போது காந்தியடிகள் கூறினார்.

"காங்கிரஸ் தனது விருப்பத்துக்கு இணங்காவிட்டால் , காங்கிரசையும் விட மகத்தான ஓர் இயக்கத்தை உருவாக்கப் போவதாக' காந்தியடிகள் எச்சரித்தார். இதனால் 1942 ஆகஸ்ட் 8-ல் மும்பையில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம், "வெள்ளையனே வெளியேறு' என்ற புகழ் மிக்க தீர்மானத்தை இயற்றியது. "வைஸ்ராயை சந்தித்து இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவேன். அதற்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். ஆனால் அதுவரை நீங்கள் சுதந்திர குடிமகனாகக் கருதிக் கொண்டு செயல்படலாம்' என்று காந்தியடிகள் கூடியிருந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசினார்.

காந்தியடிகள் வைஸ்ராயை சந்திக்கும் வரை பொறுத்திராமல், பிரிட்டிஷ் அரசு முந்திக் கொண்டது. காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களை அன்று இரவே கைது செய்தது. காந்தியடிகள் மும்பையிலிருந்து பூனா கொண்டு செல்லப்பட்டு ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். மறுநாள் காலை (ஆகஸ்ட் 9) இந்த செய்தியை கேள்விப்பட்டு இந்தியாவே கொதித்து எழுந்தது. காந்தியடிகளையும் கைது செய்யப்பட்ட தலைவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவெங்கும் ஓங்கி ஒலித்தது.

போராட்டம் புரட்சியாக உருவெடுத்தது. இப்புரட்சியை அடக்க பிரிட்டிஷார் நாடெங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் டில்லியில் மட்டும் 76 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமக்களை காரணமில்லாமல் கைது செய்தனர். விசாரணை இல்லாமல் தண்டனை வழங்கினர். தீவிரமான இம் மக்கள் புரட்சி, கோரமான பிரிட்டிஷ் அடக்குமுறையால் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இப்புரட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்ட வீரர்களின் உயிர்கள் காணிக்கையாக்கப் பட்டது.



தலைவர்கள் வழிகாட்டுதல் இல்லாதது, கட்டுக்கோப்பாக மக்கள் செயல்படுவதற்கு வழி தெரியாதது, பிரிட்டிஷாரின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாதது ஆகியவற்றால் இந்தப் புரட்சி அடக்கப்பட்டது. என்றாலும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்குமா... என்ற மக்கள் மனதில் இருந்த சந்தேகம் மாறி இந்தியா எப்போது சுதந்திரம் பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பு சுதந்திரமாக மலரவும் இந்த போராட்டம் அடிப்படையாக அமைந்தது.

அந்தப் பரபரப்பான 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ! இந்தியா சுதந்திரம் அடைந்ததைக் கண்ட பிறகே இறப்பேன் " என்ற காந்தியின் கண்கள் சுதந்திர இந்தியாவைத் தரிசித்தது. அடிமை இருளில் சிக்கித் தவித்த இந்தியத் திருநாட்டு மக்கள் சுதந்திரச் சுடரைக் கண்டனர். இந்துஸ்தானம் முழுக்க வந்தே மாதரமும் ஜெய்ஹிந்த் கோஷங்களும் எங்கும் எதிரொலித்தது.

டில்லிப் பட்டணம் சுதந்திரக் களிப்பில் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த போது காந்திஜி கல்கத்தாவின் சேரிப்பகுதி ஒன்றில் அமைதியாகச் சேவை செய்து கொண்டிருந்தார். இந்தியத் திருநாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசத் தந்தையை வைஸ்ராய் மாளிகையில் தங்க நிகர் சிம்மாசனத்தில் வைத்து ஏந்திப் பிடிக்கத் தயாராயிருந்தனர். தன் சீடர்களான நேருவும் பட்டேலும் உப்பரிகையில் வீற்றிருக்க காந்தி எளிமையான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்.

உலக சமாதானத்துக்காக, ஒற்றுமைக்காக கடவுளை வணங்கினார். ஜனங்களிடையே தேச பக்தியும், தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் வளர பிரார்த்தனைக் கூட்டத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே பேசினார். புத்தரும், மகாவீரரும் ஏசுநாதரும், நபிகள் நாயகமும் செய்த மார்க்க சேவையை அன்று மகாத்மா செய்து கொண்டிருந்தார். இந்து - முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார்.

மெளண்ட்பேட்டன் கவர்னர் ஜெனரலாக இருக்க காங்கிரசு ஆமோதித்தது. ஆங்கிலேயர்களில் ஒரு வித்தியாசமான ஆசாமி மெளண்ட்பாட்டன். நேருவின் நேசக்கரங்களுக்குள் கை கோர்த்து அதிரடியாக நடவடிக்கைகளை பேட்டன் எடுத்தார். ஜின்னாவின் கண்களுக்குள் கருக்கொண்டிருந்த பாகிஸ்தான் கனவையும் நனவாக்கினார். கிழக்கு வங்காளமும், மேற்கு பஞ்சாபும், சிந்தும் பாகிஸ்தானாக உருப்பெற்றது. மற்றப் பகுதிகள் எல்லாம் இந்திய யூனியனாயின. மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத் இந்திய யூனியனில் இணைய மறுத்து முரண்டு பிடித்தாலும் பட்டேல் நெறிப்படுத்தி ஒருங்கிணைத்தார்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தியக் கொடி பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்தது.



ராஜாஜியை கவர்னர் ஜெனரலாக்கிவிட்டு, மெளண்ட்பேட்டன் இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்டார். ஆகக்கடைசி வெள்ளையனும் கப்பலேறிய பிறகு சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்கின்ற காட்சியையும் காந்தி கண்டுகளித்தார்.

நேரு முதலமைச்சர். படேல் உள்நாட்டு அமைச்சர். சண்முகம் செட்டியார் நிதியமைச்சர். அம்பேத்கார் சட்ட அமைச்சர்; சர்தார் பல்தேவ்சிங் பாதுகாப்பு அமைச்சர். ஜெகஜீவன்ராம் தொழிலமைச்சர்; மத்தாய் போக்குவரத்து அமைச்சர்; காட்கில் சுரங்க மின்சார மந்திரி; சியாமபிரசாத் முகர்ஜி உணவு அமைச்சர்; அபுல்கலாம் ஆசாத் கல்வி அமைச்சர்; அம்ருத்கெளரி சுகாதார அமைச்சர்; கித்வாய் வர்த்தக அமைச்சர்; கோபால்சாமி அய்யங்கார் உபரி மந்திரி; ராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணயசபைத் தலைவர்; மோகன்லால் சக்சேனா அகதிகள் மந்திரி என்று, இன்று போல இரண்டடுக்கு மூன்றடுக்கு என்றில்லாமல் மிகக் குறைந்த மந்திரி சபையோடு தேச பரிபாலனம் துவங்கியது.

மகாத்மாவின் உழைப்பு வீண் போகவில்லை! அவரின் தவம் பலித்தது. கத்தியின்றி... இரத்தம் இன்றி அகிம்சா மூர்த்தியின் கனவு நிறைவேறியது.

இந்த ஆகஸ்ட் 15

இந்தியாவிற்குக் கிடைத்த சுதந்திர நாள் என்பதை விட அகிம்சையின் வலிமை அறியப்பட்ட நாள் என்பதுதான் சரியானது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p15.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License