இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

வண்ணதாசன் சிறுகதைகளில் குழந்தைகளின் மனநிலை

மு. சசிகலா
முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்), தமிழாய்வுத்துறை,
மாமன்னர் கல்லூரி (தன்.), புதுக்கோட்டை-622001


முன்னுரை

குழந்தைகள் எதிர்காலச் சமுதாயத்தின் தூண்கள். சமுதாயத்தின் முகவரிகளாகவும் இக்குழந்தைகள் திகழ்கின்றனர். அத்தகையக் குழந்தைகள் எந்த விதமான மனநெருக்கடிகளுக்கும் ஆளாகாமல் வளர வேண்டும். குழந்தைகள் மனதழுத்தத்துடன் வளர்கின்ற போது அவர்களின் வாழ்க்கை இருளடைந்து விடுகிறது. சமுதாயம் கலையிழந்துவிடுகிறது. குழந்தைகளை அவர்களின் குழந்தைமைப் பருவம் பாதிக்காத வகையில் வளர்க்கப்பட வேண்டும்.

வண்ணதாசன் சிறுகதைகளில் குழந்தைகள்

வண்ணதாசன் தமது சிறுகதைகளில் குடும்ப வறுமைச்சூழலில் சிக்குண்டு குழந்தைமைப் பருவ வாழ்க்கையை இழந்து வாடும் குழந்தைகளின் மனநிலையைப் பல்வேறு நிலைகளில் எடுத்துரைத்துள்ளார். வண்ணதாசனின் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள குழந்தைகளின் மனநிலையை

1. குழந்தைத் தொழிலாளர் மனநிலை

2. எதையும் ஏற்றுக்கொள்ளும் சூழல்

3. குழந்தைப்பருவ மனப்பண்பு

என மூன்று வகைகளாகப் பகுக்கலாம்.

குழந்தைத் தொழிலாளர் மனநிலை

குழந்தைத் தொழிலாளர்களை நியமிப்பதற்கான சட்ட விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மனிதப் பரிமாண வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலைகளுக்கும் உண்டான செயல்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழ்வதே அதன் இயல்பாக அமைந்துள்ளது. அவ்வாறு இல்லாமல் ஏழ்மையினால் குழந்தைகள் தங்களின் கலை, கல்வி, விளையாட்டு, சுகாதாரங்களை இழந்து மகிழ்வின்றி மனச்சோர்வோடு வாழ்கின்றனர்.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள் குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்குச் சென்று அவதியுறுவதை ‘நிலை’ என்ற சிறுகதையில் வரும் கோமு வீட்டு வேலைக்குச் செல்வதையும், ‘சில நிமிர்வுகள் சில குனிவுகள்’ என்ற சிறுகதையில் கோயில் வாசலில் சிறுசிறு அலுமினியக் கிண்ணங்களில் வைத்துக் குங்குமமும் மஞ்சள் கிழங்கும் விற்றுக் கொண்டிருக்கக் கூடியக் குழந்தைகளை வண்ணதாசன் படைத்துக் காட்டுகிறார். கோயிலுக்கு வரும் வெளியூர்ப் பயணிகளிடம் பரட்டைத்தலையை நிமிர்த்திக் கையேந்திப் பிச்சை கேட்டு வறுமையில் வாடும் குழந்தைகளை ஆசிரியர் இக்கதையில் சித்திரிக்கிறார்.

குழந்தைகள் கல்வி கற்பதும் குழந்தைமைப் பருவ நுகர்வுகளை நுகர்ந்து வளர்வதும் அடிப்படை உரிமைகளைப் பெற்று வாழ்வதும் ஆகிய வாழ்வுரிமைகளை வறுமைச் சூழலில் வாழும் குழந்தைகள் இழந்து விடுகின்றனர் என்பதை இச்சிறுகதையின் வாயிலாக ஆசிரியர் உணர்த்துகின்றனர். வண்ணதாசனின் இச்சிறுகதை “தனுஷ்கோடி ராமசாமியின் கந்தககிடங்கினிலே” (1) என்ற சிறுகதையில் வரும் குழந்தைத் தொழிலாளர்களை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது.


எதையும் ஏற்றுக்கொள்ளும் சூழல்

நம்பிக்கைக்குரிய ஒருவர் அந்த நம்பிக்கை பொய்த்து விடுவது போன்று நடந்து கொள்ளும் நிலையை ஏமாற்றும் மனநிலை எனலாம். பள்ளிக்கூடத்தில் வருடந்தோரும் சுதந்திர தினத்தை ஒட்டி உல்லாசப் பயணம் செல்ல ஏற்பாடு செய்வது வழக்கம். அடுத்த ஆண்டு கண்டிப்பாக அனுப்பி வைப்பதாகத் தந்தை கூறியிருந்தார். இந்த ஆண்டும் குடும்ப வறுமையால் அனுப்ப முடியாத சூழல் அமைந்துவிடுகிறது. தமக்குரிய ஒன்றை இழக்கும் போது அல்லது தாம் விரும்பிய ஒன்றை அடைய முடியாத போது ஏற்படும் மன உளைச்சலைக் கவலைப்படும் மனநிலை எனலாம். குழந்தைகள் தான் ஆசைப்பட்டதை அழுது அடம் பிடித்தாவது நிறைவேற்றிக் கொள்ள நினைப்பர். அவ்வாறு அடையமுடியாத போது தம் குடும்ப வறுமையை மனதில் கொண்டு தன் விருப்பத்தை வேறு வழியில் நிறைவேற்றிக் கொள்வதாக அமைகிறது.

“ஓர் உல்லாசப்பயணம்” என்ற சிறுகதையில்,

“எதிர்வீட்டு மச்சுத் தட்டோட்டி வடிகாலிலிருந்து தண்ணீர் இரண்டு உள்ளங்கை அகலத்திற்குப் பட்டையாய் பாதிதெருவில் விழுகிற அளவுக்கு வேகமாய் வளைந்து விழுந்து கொண்டிருந்தது. அதில் அந்த பையன் கண்களை மூடி இரண்டுகைகளையும் நெஞ்சோடு பின்னிக்கொண்டு குளித்துக் கொண்டிருந்தான். வாய் மாத்திரம் அவ்வப்போது சிரித்துக் கொண்டும் தண்ணீரை வாங்கி வாங்கிக் கொப்பளித்துக் கொண்டுமிருந்தது. அருவி விழுது அருவி விழுது என்ற வார்த்தைகளையே ஒரு ராகம் போல் பாடிக்கொண்டு கால்களை மாற்றி மாற்றி உற்சாகமாய் அவன் ஆடிக்கொண்டிருந்தான். உச்சித்தலையில் தண்ணீர் விழுந்து முடியெல்லாம் நெற்றியை மறைத்துக் கிடந்தது. சுவர்ப்பக்கமாய்த் திருப்பி முதுகைக் காட்டிக் குளித்தான்.’ஹோய்’ என்று கைகளை உயர்த்தி சத்தம் போட்டு மேலே பார்த்து தண்ணீருக்கு எதிரே முகத்தைக் காட்டினான். கீழே இருந்து அங்குலம் அங்குலமாகக் கையை உயர்த்தித் தண்ணீரை மேல் நோக்கித் தள்ளுகிற போது தரைச்சக்கரம் போல் உள்ளங்கைகளிலிருந்து பூப்பூவாய்ச் சிதறுகிற தண்ணீரை ரசித்தான்” (2) குற்றால அருவியாக நினைத்துத் தனது உல்லாசப் பயணத்தை அவன் அனுபவித்துக் கொண்டுள்ள அக்குழந்தையின் மனநிலையினை வண்ணதாசன் காட்சிப்படுத்துகிறார்.


குழந்தைப் பருவ மனப்பண்பு

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் தானும் வாடி நின்றதாகப் பாடினார் வள்ளலார். அவரைப் போல் வண்ணதாசனும் மனிதர்கள் மட்டுமல்லாது சகல உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவராக இருக்கிறார். அதிலும் குழந்தையின் அன்பு என்பது எந்த ஒரு பயனும் இன்றி, எதிர்ப்பார்ப்பும் இன்றி அமையக்கூடிய குழந்தைக்கே உரித்தான பண்பு அது. குழந்தைகள் பிற உயிரினங்களிடத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது அன்பு காட்டுவதை ‘வரும் போகும்’ என்ற சிறுகதையின் மூலம் உணர்த்துகிறார். இச்சிறுகதையில்,

“பஸ்ஸில் ஒரு நரிகுறவர் குடும்பம் ஏறியது. அதில் ஒரு சிறியவன் பெரிய அணில் மாதிரி, கீரிப்பிள்ளை மாதிரி, மரநாய் என்று சொல்கிறார்களே அதுவோ என்னவோ அவன் ரொம்பச் செல்லமாக அதன் ரோமம் அடர்ந்த பழுப்பு உடம்பை இரண்டு கைகளுக்குள்ளும் மாறி மாறி வைத்துத் தடவி அதன் நாசிக் கருப்பில் உதட்டைக் குவித்து அடிக்கடி முத்திக் கொண்டான். இந்தப் பிரயாணத்தைப் பஸ்ஸை அவன் கூட வந்தவர்களை எல்லாம் மறந்துவிட்டது போன்று ஒரு சிறுவனுக்கே உரிய அன்னியோனியத்துடன் அதைக் கொஞ்சிக்கொஞ்சி உட்கார்ந்திருந்தான். இது அவனுக்கு பெரியதாக வளர்ந்தால் எந்தப் பிரயோஜனமும் அளிப்பதாக இருக்காது. காவல் செய்யஉதாவது குரங்கை போலச் சட்டைப்போட்டுச் சலங்கை கட்டி ராமா ராமா என்று வித்தை காட்ட உதவாது என்றாலும் அவன் கொஞ்சிக் கொண்டிருந்தான்” (3) என்று குழந்தைகளால் மட்டுமே எதிர்பார்ப்பு இல்லாமல் பிற உயிர்களிடத்தில் ஆழ்ந்த அன்பு செலுத்த முடியும் என்பதை உணர்த்துகிறார்.


முடிவுகள்

பெற்றோர்கள் சிறுவயதிலேயே குழந்தைகளுக்குக் குடும்பப் பொறுப்புகளை கொடுக்கின்றனர். வறுமையின் விளைவினால் குழந்தைகள் தங்களின் ஆசைகளைத் தொலைத்து விடுவதை, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வளரும் குழந்தைகளைப் பெரியவர்கள் குழந்தைகளின் மனநிலை பாதிக்காத வகையில் நல்வழிப்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர் வண்ணதாசன் தமது சிறுகதைகளின் மூலம் எடுத்துரைக்கிறார். குழந்தைகளின் மனநிலை பற்றியப் பிரச்சனைகளைத் தனது சிறுகதைகளைக் கூறி அதற்கு தீர்வினையும் எடுத்துக்கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சான்றெண் விளக்கம்

1. பா. அகிலா., தனுஷ்கோடி ராமசாமியின் படைப்பாக்கத்திறன். ப.39

2. வண்ணதாசன்., கலைக்க முடியாத ஒப்பனைகள். ( சிறுகதை தொகுப்பு ).ப.110

3. வண்ணதாசன்., சமவெளி. ( சிறுகதைத் தொகுப்பு ). ப.52

(குறிப்பு: நூலாசிரியர், நூலின்பெயர், பதிப்பகம், ஊர், வெளியிட்ட ஆண்டு உள்ளிட்ட தகவல்களாக சான்றெண் விளக்கம் அமைந்தால் கட்டுரை படிப்பவர்களுக்கு உதவுவதாகவும், மேலும் சிறப்பாக அமையும் என்பதையும் கட்டுரையாளர் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். ஆசிரியர்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p163.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License