இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பிரம்மாவிற்கு எப்போது புத்தாண்டு வரும்?


ஜனவரி துவங்கி டிசம்பர் வரை முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டால் மீண்டும் ஜனவரி முதல் தேதி ஆங்கிலப் புத்தாண்டாகி விடுகிறது. இதுபோல் தமிழ் மாதம் சித்திரை துவங்கி பங்குனி முடிந்து விட்டால் தமிழ்ப் புத்தாண்டு வந்து விடுகிறது. இப்படி உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கணக்கில் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர். மனிதர்கள் இப்படி வருடக்கணக்கு வைத்திருக்கும் போது, இந்துமதக் கடவுள்களுக்கும் தனியாக வருடக்கணக்கு இருக்கிறது. அந்தக் கணக்கின்படி படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு புத்தாண்டு எப்போது வரும் தெரியுமா?

* நிமிஷம் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை.
* காஷ்டை முப்பது கொண்டது ஒரு கலை.
* கலை முப்பது கொண்டது ஒரு முகூர்த்தம்.
* முகூர்த்தமென்பது இரண்டு நாழிகை.
* முகூர்த்தம் முப்பது கொண்டது பகலும் இரவும் கூடிய ஒரு நாள்.
* நாள் பதினைந்து கொண்டது ஒரு பக்ஷம்.
* பக்ஷம் இரண்டு கொண்டது ஒரு மாசம்.
* மாசம் ஆறு கொண்டது ஒரு அயனம்.
* அயனம் இரண்டு கொண்டது ஒரு வருஷம்.
* இம்மனுஷ வருஷம் ஒன்று தேவர்களுக்கு ஒரு நாள். (தேவர்களுக்கு உத்தராயணம் பகலும், தக்ஷிணாயனம் இராத்திரியுமாயிருக்கும்)
* மனுஷ வருஷம் முந்நூற்றறுபது கொண்டது தேவர்களுக்கு ஒரு வருஷம்.
* தேவவருஷம் பன்னீராயிரங் கொண்டது ஒரு சதுர்யுகம்.
* கிருதயுகம் – 4980 (தேவ வருஷம்) -17 லட்சத்து 28000 (மனுஷ வருஷம்)
* திரேதாயுகம் – 3960 (தேவ வருஷம்) -12 லட்சத்து 96000 (மனுஷ வருஷம்)
* துவாபரயுகம் – 2940 (தேவ வருஷம்) -8 லட்சத்து 64000 (மனுஷ வருஷம்)
* கலியுகம் – 920 (தேவ வருஷம்) -4 லட்சத்து 32000 (மனுஷ வருஷம்)
* சதுர்யுகம் – 129 (தேவ வருஷம்) -43 லட்சத்து 21000 (மனுஷ வருஷம்)



-இப்படி சதுர்யுகம் ஆயிரம் திரும்பினால், பிரம்மாவுக்கு ஒரு பகலாகும். பின்னும் ஆயிரம் திரும்பினால் ஒரு ராத்திரியாகும். ஆகவே இரண்டாயிரஞ் சதுர்யுகங்கள் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு நாளாகும். இந்த நாள் முப்பது கொண்டது ஒரு மாசம். இந்த மாசம் பன்னிரண்டு கொண்டது ஒரு வருஷம். (பிரம்மாவிற்கு இப்போதுதான் புத்தாண்டு வரும்!) இந்த வருஷம் நூறானால் பிரம்மாவின் ஆயுசு முடியும். இவ்வியல்புடைய பிரம்மாக்கள் எண்ணில்லாதவர்கள் பிறந்திருக்கிறார்கள். இறந்திருக்கிறார்கள். பிரம்மாவினுடைய ஆயுசு பரமெனப்படும். அதில் பாதியாகிய ஐம்பது வருஷம் பார்த்தமென்று சொல்லப்படும்.

பிரம்மாவின் பகலாகிய ஆயிரள் சதுர்யுகத்திலே பதினான்கு மநுக்கள் அதிகாரம் பண்ணுவார்கள். அவர்கள் பெயர் சுவாயம்புவர், சுவாரோசிஷர், ஒளத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷீஷவர், வைவஸ்தர், சூரியசாவர்ணி, தக்ஷசாவர்ணி, பிரமசாவர்ணி, தருமசாவர்ணி, ருத்திரசாவர்ணி, ரோச்சியர், பாவியர் என்பவைகளாம். ஒவ்வொரு மநுவந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகும். எழுபத்தொரு சதுர்யுகம், தேவமானத்தினாலே எட்டு லக்ஷத்தைம்பத்தீராயிரம் வருஷங்களாம். மனுஷியமானத்தினாலே முப்பது கோடியே அறுபத்தேழு லக்ஷத்திருபதினாயிரம் வருஷங்களாம். ஒரு மநுவந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகப் பதினான்கு மநுவந்தரத்துக்கும் தொளாயிரத்துத் தொண்ணூற்று நான்கு சதுர்யமுகமாகும். பிரம்மாவின் பகலிலே மிஞ்சிய சதுர்யுகம் ஆறு.

இப்படிப் பதினான்கு மநுவந்தரங்களானால், பிரம்மாவிற்கு ஒரு பகலாகும். இதன் முடிவிலே தினப்பிரளயம் உண்டாகும். அப்பொழுது பிரம்மா அப்பகலளவினதாகிய இராத்திரியிலே யோக நித்திரை செய்வர். இப்படி ஆயிரஞ் சதுர்யுகவளவையுடைய இராத்திரி கடந்த பின்பு பிரம்மா, படைத்தற் தொழில் செய்வார். பிரம்மாவுக்கு ஒரு பகல் ஒரு கற்பமெனப்படும். கற்பமாவது சிருட்டி முதற் பிரளயமிறுதியாகிய காலம். ஒரு கற்பத்துக்கு மனுஷ வருஷம் நானூற்று முப்பத்திரண்டு கோடி.



பிரம்மாவினுடைய ஒர பகலிலே பதினான்கு இந்திரர்கள் இறப்பார்கள். ஒரு மாசத்திலே நானூற்றிருபது இந்திரர்கள் இறப்பார்கள். ஒரு வருஷத்திலே ஐயாயிரத்து நாற்பது இந்திரர்கள் இறப்பார்கள். பிரம்மாவுடைய ஆயுசுள்ளே ஐந்து லக்ஷத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் இறப்பார்கள்.

தற்காலத்தில் இருக்கின்ற பிரம்மாவிற்கு முதற்பராத்தமாகிய ஐம்பது வயசுஞ் சென்றன. இப்போது நடப்பது இரண்டாம் பரார்த்தத்தில் முதல் வருஷத்து முதல் வருஷத்திலே முதற்தினம். இது சுவேதவராக கற்பம் எனப்படும். பிரளய சலத்தில் முழுகியிருந்த பூமியை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவங்கொண்டு மேலே எடுத்த கற்பமாதலிற் சுவேவதராக கற்பமெனப்பட்டது. இத்தினத்திலே சுவாயம்புவமநு, சுவாரோசிஷ்மநு, ஒளத்தமமநு, தாமசமநு, ரைவதமநு, சாக்ஷீஷமநு என்னும் மநுக்கள் இறந்து போனார்கள். இப்போது ஏழாவது மநுவாகிய வைவஸ்வத மநுவினுடைய காலம் நடக்கிறது. இவருடைய காலத்திலே இருபத்தேழு சதுர்யுகங்கள் சென்றன. இப்பொழுது இருபத்தெட்டாவது சதுர்யுகத்துக் கலியுகம் நடக்கிறது.

நன்றி: பாலபாடம் நான்காம் புத்தகம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p20.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License