இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மின் குழுமங்கள்

முனைவர். துரை. மணிகண்டன்


தொடக்கக் காலத்தில் மனிதன், மற்றொருவனுக்கு ஒலி எழுப்பித் தன் கருத்தைத் தெரிவித்தான். இந்த ஒலிகளில் செய்யப்பட்ட ஏற்ற இறக்க முறை மொழியாக உருவானது. இந்த மொழி ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்த இனக்குழுவிற்கும் வேறுபட்டது. இந்த மொழி துவங்கப்பட்ட போதே தகவல் தொடர்பும் துவங்கி விட்டது. கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இயல், இசை நாடகங்கள் போன்றவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தத் தகவல் தொடர்பு குறிப்பிட்ட குழுக்களுக்கானதாக இருந்தது. இதுவே அறிவியல் வளர்ச்சியின் வேகத்தில் புத்தகம், பத்திரிகை, திரைப்படம் என்று தனது எல்லையை சற்றி விரிவாக்கியது. இப்போது இணையம் எனும் புது வலைப்பின்னல் மூலம் உலகத்தை உள்ளங்கைக்குள் சுருக்கிக் கொண்டு விட்டது.

இந்த இணையத்தில் குறிப்பிட்ட கருத்துக்களை உடையவர்கள், குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட தொழிலைச் செய்து வருபவர்கள் என்று குறிப்பிட்ட ஏதாவது ஒன்றை மையமாகக் கொண்டு ஒரு குழுவாக இணைந்து அவர்களுக்குள் ஒரு கலந்துரையாடலை இணையத்தின் வழியே எழுத்துக்களின் மூலம் பகிர்ந்து கொள்ள அமைக்கப்பட்ட முறைதான் குழுமங்கள். இந்தக் குழுமங்களில் அங்கத்தினராகிக் கொள்பவர்களுக்கிடையே மட்டும் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்தக் கருத்துப் பரிமாற்றங்களால் வெளிப்படுத்தும் தகவல்கள் இந்தக் குழுமத்திற்கான இணையப் பக்கங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதே கருத்து குறித்த தகவல்களை இணையத் தேடுபொறிகளில் மற்றவர்கள் தேடும் பொழுது அவர்களுக்கும் இந்த கருத்துக்கள் காணக் கிடைக்கின்றன. இப்படி கருத்தொற்றுமையால் இந்தக் குழுமங்களில் புதிய அங்கத்தினர்கள் இணைந்து விடுகின்றனர். இப்படி இந்தக் குழுமம் விரிவடைந்து கொண்டே செல்கிறது.



தமிழ்க் குழுமங்கள்

தமிழ் மொழியிலும் இப்படி சில குழுமங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குழுமங்கள் அமைப்பதற்கான வசதிகளை மின்னஞ்சல் வசதிகளை வழங்கி வரும் சில இணையதள நிறுவனங்கள் இலவசமாகவே அளிக்கின்றன.

1. மின் தமிழ் குழுமம்
2. அன்புடன் குழுமம்
3. அழகி குழுமம்
4. கீற்று குழுமம்
5. நம்பிக்கை குழுமம்
6. தமிழ் விக்சனரி குழுமம்
7. தமிழ் - நண்பர்கள் (தமிழ் நண்பர்கள் என்று தனியாக ஒன்றும் இருக்கிறது)
8. தமிழன்ஸ்2
9. தமிழ்மன்றம் பி.எஸ்.ஜி
10. தமிழ்மிட்பைல்ஸ்
11. தமிழ் முஸ்லீம்
12. தமிழ்ச்சங்கம் (தமிழ்சங்கம் என்று தனியாக ஒன்றும் இருக்கிறது)
13. தமிழ்ச்சங்கம் _ பிட்ஸ்கோவா
14. தமிழ்ப் பாடல்கள்
15. தமிழ் ஸ்டார்ஸ்
16. தமிழ் - உலகம்
17. தினம் ஒரு கவிதை
18. டி.எம்.ஓ. நண்பர்கள்
19. துக்ளக்
20. துவக்கு
21. உலகத்தமிழ்
22. யங்தண்டர்ஸ்
23. தமிழ்_குழு (தமிழ்க் குழு என்று தனியாகவும் ஒன்று உள்ளது)
24. தமிழ் கவிதை
25. தமிழ் கிறுக்கல்கள்
26. தமிழ் மீடியா
27. தமிழ் கம்ப்யூட்டர்
28. தமிழ் என்சைக்ளோபீடியா



இவற்றில் கூக்ளி நிறுவனத்தின் மின்னஞ்சல் வசதி அளிக்கும் ஜி-மெயில் எனும் அமைப்பில் அதிக அங்கத்தினர்களைக் கொண்டதாக ஆறு மின் குழுமங்கள் இருக்கின்றன. அவை,

1. மின் தமிழ் குழுமம்
2. அன்புடன் குழுமம்
3. அழகி குழுமம்
4. கீற்று குழுமம்
5. நம்பிக்கை குழுமம்
6. தமிழ் விக்சனரி குழுமம்

மின் தமிழ் குழுமம்

மின் தமிழ் குழுமம் செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் 2006 ல் தொடங்கப்பட்டது. இதன் தலைமை இடம் தென்கொரியாவாகும். இதனைத் தொடங்கியவர் தமிழ் மரபு அரக்கட்டளையின் தலைவர் திரு. நா.கண்ணன் ஆவார். இவருக்கு ஜெர்மனியைச் சார்ந்த திருமதி சுபாசினி அவர்கள் இக் குழுமம் அமைய உதவினார்.

இம்மின் குழுவில் தமிழ் மரபு சார்ந்த விடயங்களான ஓலைச்சுவடிகள், பழங்கால சிறப்பு மிக்க புராண இதிகாசப் பேழைகள் மற்றும் அரிதான புகைப்படங்கள், அறிவு சார்ந்த இலக்கிய, இலக்கணங்கள் போன்றவைகள் கலந்துரையாடப்படுகின்றன.

இந்தக் குழுமத்தில் இதுவரை 612 பேர் அங்கத்தினராகி உள்ளனர். இவர்கள் மூலம் இக்குழுமத்தில் 15660 செய்திகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இக்குழுமத்தின் கருத்துக்களை 90000 பேர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த மின் தமிழ் குழுமத்தில் அதிகமாக எழுதுபவர்களில் இதன் தலைவர் நா.கண்ணன், சுபாசினி, முனைவர் இளங்கோவன், முனைவர் தி. நெடுஞ்செழியன், முனைவர். துரை.மணிகண்டன், தமிழ்த்தேனீ ஆகியோர் குறிப்பிடத்தக்கவராக இருக்கின்றனர். இவர்கள் இங்கு அதிகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.



அன்புடன் குழுமம்

அன்புடன் குழுமம் யுனித்தமிழில் மட்டுமே இயங்க வல்லது. இதனை உருவாக்கியவர் கனடாவைச் சேர்ந்த திரு புகாரி ஆவார். இக்குழுமம் 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் நாள் திங்கள் கிழமைத் தொடங்கப்பட்டுள்ளது.

இக்குழுமத்தில் தமிழ் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்ற ஆக்கப்பூர்வமானத் தலைப்புகளில் இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.

இக்குழுமத்தில் இதுவரை 1266 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 78 அங்கத்தினர்கள் மட்டும் அதிகமாக எழுதுகின்றனர். இக்குழுமத்தில் ஒரு லட்சம் மடல்களைத் தாண்டி கருத்தாடல்கள் நடந்துள்ளது. தொடர்ந்து நடந்தும் வருகின்றன. இதில் எழுதுபவர்களில் புகாரி, பூங்குழலி, வேந்தன் அரசு, வாணி, விசாலம், கிரிஜா மணாளன் போன்றோர்கள் குறிப்பிடக் கூடியவர்கள்.

அழகி குழுமம்

அழகி குழுமத்தை உருவாக்கியவர் திரு.விஸ்வநாதன் ஆவார். சென்னையிலிருந்து இக்குழுமம் செயல்படுகிறது.

தமிழ் மொழி பெயர்ப்பு, தமிழில் விசைப்பலகையின் செயல்பாடு, தமிழில் அச்செடுக்கும் வழிமுறைகள், இணையம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் இங்கே விடை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 730 உறுப்பினர்கள் உள்ளனர். இதைல் 25 உறுப்பினர்கள் அதிகமாக எழுதி வருகின்றனர். அழகி குழுமத்தில் எழுதுபவர்களில் விஸ்வநாதன், ராகவன், தமிழ்த்தேனீ, திரு.அன்பன், முனைவர். துரை. மணிகண்டன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கின்றனர்.



கீற்று குழுமம்

கீற்று குழுமம் கீற்று ஆர்குட் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது.

கீற்று குழுமத்தில் அதிகமாக பகுத்தறிவுச் சிந்தனைகள் அலசி ஆராயப்படுகின்றன. ஒப்பற்ற சுயசிந்தனையைத் தூண்டும் களமாகவும் இது செயல்படுகிறது. இதில் கீற்று இணைய இதழில் வெளியான படைப்புகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

இதில் 319 உறுப்பினர்கள் உள்ளனர். இத் தளம் கீற்று இணைய இதழ் வாசகர்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் இடையில் ஒரு பாலமாகவே செயல்பட்டு வருகின்றது. இதில் மகிழ்னன், கலா போன்றவர்கள் அதிகமாக எழுதுகின்றனர்.

நம்பிக்கை குழுமம்

நம்பிக்கைக் குழுமம் 2005 ஆம் ஆண்டு ஏப்பரல் 23 நாள் தொடங்கப்பட்டுள்ளது.

இக்குழுமத்தில் இறை நம்பிக்கையும், ஆன்மீகச் செய்திகளும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. பக்தி தொடர்பான செய்திகளும், தேவாரத் திருமுறைகளும், அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற இந்து மதக் கருத்துக்களை வலியுறுத்தும் செய்திகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நம்பிக்கை குழுமத்தில் சங்கர்குரு, விஜி சுதன், விசாலம்ராமன் சாதுக்கள், யோகிகள் போன்றவர்கள் அதிகம் எழுதுபவர்களாக இருக்கின்றனர்.

தமிழ் விக்சனரி குழுமம்

இக்குழுமம் தமிழ் விக்கிபீடியாவுடனும், தமிழ் விக்சனரி தளத்துடனும் சேர்ந்து உருவாக்கப்பட்ட குழுமம் ஆகும்.

தமிழ் கலைச் சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு உரையாடல்கள் போன்றவை முக்கியமானதாகக் கொண்டு இக்குழுமம் இயங்குகிறது.

விக்சனரி குழுமத்தில் 120 உறுப்பினர்கள் உள்ளனர். பத்து பேர் அதிகமாக எழுதுகின்றனர். விக்சனரி குழுமத்தில் மயூரன், செல்வா, சத்தியா, ரவிசங்கர், முனைவர். துரை.மணிகண்டன் போன்றவர்கள் எழுதுகின்றனர்.



பயன்பாடுகள்

1. இக்குழுமங்களின் மூலம் நாம் கலந்துரையாட முடிகிறது.
2. இங்கே நாகரிகமான விடயங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
3. விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றிற்கு இங்கே அனுமதி இல்லை.
4. தமிழ் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள், இலக்கண இலக்கியச் செய்திகள், கணிப்பொறி சார்ந்த செய்திகள் எளிதில் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது.

மேற்காணும் குழுமங்கள் தவிர வேறு சில பெயர்களிலும் தமிழ் குழுமங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளும் பல கருத்துக்களை குழு உறுப்பினர்களுக்குள் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய பல சந்தேகங்களுக்கு இந்தக் குழுமங்கள் எழுத்து மூலமாகவே விடை தந்து கொண்டிருப்பதுடன் ஒத்த கருத்துக்களை உடையவர்களிடையே நட்பை உருவாக்கும் தளமாகவும் இந்தக் குழுமங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p23.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License