இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தென்கச்சியாரின் அறச்சிந்தனைகள்

இரா.கலையரசி


முன்னுரை

பழங்காலம் தொட்டு எழுந்த இலக்கியங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் அறவுரையை வலியுறுத்தும் நோக்கில் படைக்கப்பட்டு வருகின்றன. இவ்வறவுரையைக் கற்ற சான்றோர்கள் அறவுரையோடு தம் அறிவுரையையும் சேர்த்துப் பகர்வது வழக்கம். இவ்வகையில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் தமது படைப்புகளில் எடுத்துரைத்துள்ள அறவுரையைப் பற்றி ஆய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறவுரை

பண்டைத்தமிழர் வாழ்வில் அறக்கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்தனர். அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்வியல் கொள்கைகளை வகுக்கும் பொழுதும் அறத்திற்கே முதன்மை கொடுத்தனர். வாழ்விலிருந்து முகிழ்க்கின்ற இலக்கியங்கட்கும், “அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே”1

என்று அறத்தையே முதன்மைப்படுத்தினர். மனித சமுதாயத்தில் அன்றாட வாழ்வில் நடைமுறைக்கு ஏற்ற வகையில் நலம் விளையக்கூடிய செயல் எதைச் செய்தாலும் அது அறச்செயலாகும். அறம் என்றால் தொண்டு, தூய்மை என்பது பொருளாகும். இத்தொண்டை எக்காரணம் கொண்டும் சுயநலம் கருதாமல், பொதுநலம் கருதியே செய்ய வேண்டும். என்பதை வலியுறுத்தும் விதமாக,

‘அறம் செய விரும்பு’

என்று ஔவையாரும்,

‘அன்றறிவோம் எண்ணாது அறஞ்செய்க’

என்று வள்ளுவரும் கூறியுள்ளனர்.



தமிழறிஞர்கள் அறத்தைப் பெரிதும் போற்றினர். கடவுளையே அறத்தின் வடிவில் கண்டனர். வாழ்வின் எல்லாக் கூறுகளிலும் அறம் இழையோட வேண்டும் என்று விரும்பினர். வள்ளுவரும் மனத்தூய்மையே மிகச் சிறந்த அறம் என்கிறார்.

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்’ என்பது குறள். மக்கள் அறத்தின் வழியில் இன்பம் துய்க்க விரும்பினர். பிறரோடு செய்யும் போரிலும் அறம் பிறழக்கூடாது என விரும்பினர். இதனைப் புறநானூறு

“ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வப் பெறாஅ தீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை” 2

என்று கூறுவது தமிழரின் பேரறமாகும்.

நாட்டை ஆட்சி செய்பவர்கள் அறநெறி தவறாதவர்களாக இருக்க வேண்டும்.

‘அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’

என்று புறநானூறும்

‘அரசியல் பிழையாது அறநெறி காட்டி
பெரியோர் சொன்ன அடிவழிப் பிழையாது’

என்று மதுரைக்காஞ்சியும் கூறுகின்றன. தனிமனிதன் ஒவ்வொருவரும் தம் வாழ்வுக்கென அறங்களை வகுத்துக் கொண்டு செயல்பட்டால், அரசனும் அறத்தின் வழி ஆட்சி புரிவான். அரசறம் முறையாகப் பின்பற்றப்பட்டால் அந்த நாட்டில் தனிமனித அறம் மேம்படும்



தென்கச்சியார் கூறும் அறம்

மன்னனாக இருந்தாலும் சாதாரணக் குடிமக்களாக இருந்தாலும் நீதி தவறாதவர்களாகவும், நீதி சிந்தனை உடையவர்களாகவும் இருக்க வேண்டும். தன்னிடம் வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாது அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து உதவும் ஈகைப்பண்பு நிறைந்திருக்க வேண்டும். கடமை உணர்வு தவறாதவர்களாக விளங்க வேண்டும். சிறந்த நற்பண்பு உடையவர்களாக வாழ வேண்டும் என்ற அறத்தின் அடிப்படையில் கருத்துக்களைத் தென்கச்சியார் பதித்துள்ளார்.

நீதி சிந்தனை

முன்னோர்கள் நீதி அளிப்பதில் சிறந்து விளங்கியுள்ளனர். எல்லா உயிர்களுக்கும் சமமான நீதி வழங்கப்பட்டுள்ளது. அரசன் தன்னலமற்றவனாகவும், பிறர் நலம் பேணுபவனாகவும் இருந்துள்ளான். அதனால்தான் அவனவனுக்கு உரித்தானதை அவனவனுக்கு வழங்குவதுதான் நீதி என்று அரிஸ்டாட்டிலும், தாமதமாக அளிக்கும் நீதி மறுக்கப்பெற்ற நீதியாகும் என்று கிளாட்ஸ்டன் என்பவரும் கூறியுள்ளனர்.3



ஈகை உணர்வு

மனித குலத்தின் சிறப்புகளில் ஈகையும் ஒன்று. அது பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்கலும், அத்துன்பத்தைப் போக்க முயல்வதும் ஆகும். அந்த வகையில் எழுந்த செயலே ஈகையாக மலர்ந்துள்ளது. வாழ முடியாதவர்களையும், வாழத் தெரியாதவர்களையும், வாழ்வை இழந்தவர்களையும் ஏற்றுக் காப்பது சமுதாய நலத்தைக் காக்கும் நற்செயலாகும். எல்லோரும் ஈகையை மேற்கொள்ள வேண்டும். அவரவர் தங்கள் உழைப்பின் பலனில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து, மற்றவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.4 அவ்வாறு உதவும் போது மனமும் எளிதாகும், ஏற்பவரின் வாழ்வும் வளமாகும் என்பதை,

“ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்”5

என்று ஈகையின் சிறப்பைக் குறள் மெய்ப்பிக்கின்றது



கடமை உணர்வு

மனிதன் ஒவ்வொருவரும் உடலாலும், அறிவாலும் சமுதாயத்திற்குக் கடன்பட்டு உள்ளான். உலகில் உள்ள பொருட்கள் எல்லாம் பலரின் கூட்டு முயற்சியால் உருவானதே தவிர தனி ஒருவனால் உருவானது இல்லை.6

“ஒரு பிடி உணவில் உலக ஒற்றுமை கண்டிடு
உழைப்பினால் பதில் உலகிற்கு தந்திடு”7

என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுள்ள கருத்து இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும். அதனால் சமுதாயத்திற்குத் தாம் பெற்றக் கடனைத் திருப்பித்தருவதே கடமையாக அமைகிறது. ஒவ்வொருவரும் அவரவர்க்கு முடிந்த வகையில் கடமை உணர்வோடு செயல்பட்டால் வீடும், நாடும் வளம் பெறும்.

நற்பண்பு

மனிதன் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வாழ வேண்டும். பிறருடையப் பொருளுக்கு ஆசைப்படாமலும், தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்காமலும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதுதான் அவனுடைய நற்பண்பு வெளிப்படுகிறது. தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவரிடம் நற்பண்பு சிறந்தோங்கும். அதன் மூலம் அறம் வெளிப்படும்.

முடிவுரை

மேற்கண்ட கருத்துக்களின் மூலம் தென்கச்சியார் சிறந்த அறச்சிந்தனை உள்ளவர் என்பதும், மக்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதும் அறியப்படுகின்றன. மேலும் சமுதாயத்தின் மீது கொண்டுள்ள பற்றாலும், மக்களை நல்வழிப்படுத்துவதற்கான அறவுரைகளைக் கூறியுள்ளதாலும் இவர் பரந்துப்பட்ட சமுதாய நோக்குடையவர் என்பது புலப்படுகின்றது.

அடிக்குறிப்புகள்

1. நன்னூல், எழுத்ததிகாரம், நூ. 10
2. புறநானூறு, பா. 9
3. பெ.வேலுச்சாமி, அறிஞர்களின் அறிவுரைகள், ப.31
4. தென்கச்சி கோ.சுவாமிநாதன், வானொலியில் இன்று ஒரு தகவல், பாகம் - 8, பக். 106-108
5. திருக்குறள் - 228
6. தென்கச்சி கோ. சுவாமிநாதன், தென்கச்சி வழங்கும் நீதிக்கதைகள் தொகுதி - I, ப. 118
7. வேதாத்திரி மகரிஷி ஆன்மீக மற்றும் உள்ளுணர்வுக் கல்வி நிலையம், மதிப்புக் கல்வி, ப-11

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p35.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License