இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழன் தந்த நவீன எண் முறை

க. நீலாம்பிகை


"எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு"

"எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்"

மேல் கூறிய மூத்தோர் வாக்குகள் மூலம் பண்டைய தமிழர் எழுத்தறிவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைச் சம அளவில் எண் அறிவுக்கும் கொடுத்திருந்தமையை அறியக்கூடியதாக உள்ளது. அதுமட்டுமன்றி இன்று உலகெங்கும் பாவனையில் உள்ள நவீன எண்களை (modern decimal number system) பண்டைய தமிழரே உலகிற்கு வழங்கியிருக்கலாம் என கருத பல ஆதாரங்கள் உண்டு.

முதலாவதாக நாம் இலக்கங்களை அழைக்கும் முறையை (naming convention) கவனிக்கலாம்.

ஐரோப்பாவில் பரவலாக வாழ்ந்த ஆரியர்கள் இலக்கங்களை இருபதாக (vigesimal system) எண்ணியுள்ளனர். உதாரணமாக, வேல்ஸ் மொழியில் (Wales) 20 ஐ ugain எனவும், 40 ஐ deugain (இரு-இருபது) எனவும் குறிப்பிடுகின்றனர். பிரெஞ்சு மொழியிலும் 20 ஐ vingt எனவும் 92 ஐ quatre-vingt-douze (நாலு-இருபது-பண்ணிரண்டு) எனவும் குறிப்பிடுகின்றனர். டானிஸ் (Danish) மொழியில் 60 ஐ tresindstyve (மூன்று-இருபது) எனவும் 80 ஐ firsindstyve (நாலு-இருபது) எனவும் குறிப்பிடுகின்றனர். அவை மட்டுமன்றி பாஸ்க் (Basque), டச் (Dutch), கோதிக் (Gothic) போன்ற மேலும் சில மொழிகளிலும், அம்மொழியின் இன மொழிகளான ஏனைய பல செர்மன் மொழிகளிலும் எண்கள் இருபதின் மடங்காக எண்ணப்பட்டுள்ளன.

கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட ஸ்ரெப்ஸ் புல்வெளிகளில் இருந்தே ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இப்பிரதேச காகசஸ் (Caucasian) மொழிகளிலும், சேமிற்றிக் மொழிகளிலும், ஏனைய உலகின் பல பாகங்களிலும் இலக்கங்களை இருபதாக எண்ணும் முறைமை இருந்துள்ளதாக பிரித்தானிய கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்து திராவிட மொழிகளிலும் இலக்கங்களை பத்தின் மடங்குகளாக (decimal system) எண்ணும் முறையே காணப்படுகிறது. சுருங்கக் கூறின் பல ஆரிய மொழிகளில் 40 ஐ 'இரு-இருபது' எனக்குறிப்பிட அனைத்து திராவிட மொழிகளிலும் 40 ஐ 'நாலு-பத்து' என குறிப்பிடப்படுகின்றது.

இரண்டாவதாக 9 என்ற இலக்கத்தை குறிக்கும் சொற்பதத்தை கவனிக்கலாம்.

ஆரிய எண்களில் 9 ஐ குறிக்கும் சொல் 'புதிய' எனும் பொருள் கொண்ட உரிச்சொல்லை ஒத்ததாக உள்ளது. லத்தீன் மொழியில் புதியதை 'novus' எனவும், 9 ஐ 'novem' எனவும் குறிப்பிடுகின்றனர். பிரெஞ்சு மொழியில் neuf என்ற சொல்லே புதியது என்ற பதத்தையும், 9 என்ற இலக்கத்தையும் குறிப்பிடுகின்றன. செர்மன் மொழியில் neun என்ற சொல் 9 ஐயும் neu என்ற சொல் புதியது என்ற பதத்தையும் குறிப்பிடுகின்றன. அதேமாதிரி சமஸ்கிருதத்தில் நவ என்ற பதம் புதியது என்ற கருத்தையும் 9 என்ற இலக்கத்தையும் குறிக்கிறது. அவை மட்டுமன்றி செமிற்றிக் மொழிகளான அக்காடிய, எபிரேய, அரேபிய, எதியோப்பிய மொழிகளுக்கும் இப்பண்பு பொருந்தும் என யுனெஸ்கோ கூரியரில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் எல்லாத் திராவிட மொழிகளிலும் 9 என்ற எண்ணுக்கான சொல் தொன்மை அல்லது தொலைவு எனும் கருத்தைக் கொண்டுள்ளது. ஒன்பது அடிப்படை எண்களை ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ... எட்டு, ஒன்பது என எண்ணும் ஒழுங்கில் தொலைவில் இருப்பது ஒன்பது அல்லவா?

மேலும் பழந்தமிழர் 9 ஐ குறிக்க தொண்டு எனும் பதத்தையும் பயன்படுத்தி உள்ளனர். இதை நாம்,

"இரண்டென, மூன்றென, நான்கென, ஐந்தென, ஆறென
ஏழென, எட்டென, தொண்டென"
எனும் பரிபாடலில் (3 ஆம் பாடல், 78 ஆம் வரி) காணலாம்.

தமிழில் தொண்டுக்கிழவர் என்பது மிகவும் வயதில் கூடிய கிழவரை குறிக்கும். அதேபோல் 9 எனும் அடிப்படை எண்களில் மிகவும் பருமனில் அதிகூடிய எண் தொண்டு ஆகும். அதனால் 9 எனும் எண்ணை குறிக்கும் சொல் உரிய கருத்துடன் அமைவது திராவிட எண்களில் மாத்திரமே ஆகும்.

மூன்றாவதாக பத்தின் வலுக்களை அழைக்கும் ஒழுங்கை பார்க்கலாம்.

ஆரிய மொழிகளான லத்தீன், சமஸ்கிருதம், ஆங்கிலம், ஸ்பானிஸ், பிரெஞ்சு, போர்த்துகீஸ், டச்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில் 10 தொடக்கம் 20 வரையான எண்களை குறிப்பிடும்போது பத்தின் வலுக்களின் இறங்கு வரிசைக்கு முரணாக 'ஒன்றுக்கள்' முதலிலும் பின் பத்தும் குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக 11 ஐ ஏகாதச என குறிப்பிடப்படும் போது 'ஒன்றும்-பத்தும்' என பொருள்பட குறிப்பிடப்படுகிறது. அதேமாதிரி அராபிய மொழியிலும் 24 ஐ குறிப்பிடப்படும் போது அர்பா இஸ்ரூன் என அழைக்கப்படுகிறது. அதாவது 24 ஐ 'நாலும்-இருபதும்' (அர்பா=4, இஸ்ரூன்=20) என அழைக்கப்படுகிறது.

அனால் எல்லா திராவிட மொழிகளிலும் 10 இன் வலுக்களின் இறங்கு வரிசை முரண்படாத வகையில் பத்து முதலிலும் ஒன்றுக்கள் அடுத்தும் அழைக்கப்படுகிறது. உதாரணமாக 24 ஐ 'இரண்டு பத்தும்-நாலும்' என அழைக்கப்படுகிறது. இவற்றில் இருந்து திராவிட முறைமை மட்டுமே இலக்கங்களை அழைப்பதில் ஒரு சீர்மை பண்பைக் கொண்டுள்ளது தெளிவாகிறது.

நாலாவதாக அடிப்படை குறியீடுகளின் எண்ணிக்கையை கவனிக்கலாம்.

இவ்விடயத்தில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மொசப்பத்தேமிய அறிஞரான Severus Seborht (575-667, சிரியா) யினது நவீன எண்கள் பற்றிய குறிப்பீட்டை முன்வைக்கலாம். இவர் எண் குறியீடுகளின் சிக்கனத் தன்மையே குறிப்பட்ட ஓர் எண்ணல் முறையின் உயர்வுக்கு காரணம் எனக் கூறினார்.

ஆரிய மொழிகளில் சமஸ்கிருதமும், திராவிட மொழிகளில் தமிழுமே இங்கு ஒப்புநோக்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தை நோக்கும்போது அவர்கள் "ஒற்றைப்படை எண்களுக்கு 9 குறியீடுகளும் 10-90 வரையான பத்துக்களுக்கு 9 குறியீடுகளும் நூறு, ஆயிரம் என்பவற்றிற்கு ஒவ்வொரு குறியீடும் இடுவர். அத்துடன் 200, 300 என்பவற்றைக் குறிக்க 100 எனும் எண்ணின் குறியீட்டுடன் வலது புறமாக முறையே 1, 2 எனும் எண்களின் குறியீடுகள் இடப்படும். அதேபோல் 2000, 3000 என்பவற்றைக் குறிக்க 1000 எனும் எண்ணின் குறியீட்டுடன் வலது புறமாக முறையே 1,2 எனும் எண்களின் குறியீடுகளை இடுவர். ஆகவே 3000 வரை குறிப்பிட ஒன்றுக்கள் 9, பத்துக்கள் 9, நூறு, இரு நூறு, முந்நூறு, ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என 6 குறியீடுகளுமாக 24 குறியீடுகள் இடப்படும். ஆனால் தமிழில் 3000 வரை குறிப்பிட ஒற்றைப்படை எண்களுக்கு 9 குறியீடுகளும், பத்துக்கள், நூறுகள், ஆயிரம்களை குறிக்க 3 குறியீடுகளுமாக மொத்தம் 12 குறியீடுகளே பயன்படுத்தப்பட்டன. அதனால் Severus Seborth குறிப்பிட்ட சிக்கனத் தன்மை தமிழிலேயே காணப்பட்டது.

ஐந்தாவதாக குறியீட்டு முறைமையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட குறியீட்டு முறைகள் கொண்டுள்ளமையை கவனிக்கலாம்.

அரபு, சமஸ்கிருதம், கிரேக்கம், சீனம், உரோம எண்கள் எல்லாம் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட குறியீட்டு முறைகளை கொண்டுள்ளன. பொதுவாகப் பழைய முறை ஒன்றில் திருத்தங்கள் ஏற்படும் போதே புதியதோர் முறை உண்டாகும். ஆனால் தமிழில் ஒரேயொரு குறியீட்டு முறை மட்டுமே உண்டு. அதலால் திருத்தங்களுக்கு உட்படாத எண்குறியீட்டு முறைப் பண்பு தமிழுக்கே இருந்துள்ளது.

ஆறாவதாக லட்சம் (Lakh) என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம்.

எண் 1,00,000 ஐ குறிக்க சமஸ்கிருதம், சீன மற்றும் ஐரோப்பிய மொழிகள் அடங்கலாக உலகம் முழுவதும் லட்சம் (Lakh) எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. உதாரணமாக 2000 ஆம் வருடங்களுக்கு முற்பட்ட பக்தி வேதாந்தம் (அதிகாரம் 5, அத்தியாயம் 20, பாடல் 24) "...sakadvipo dvatrimsal-laksa-yojanayamah ..." என தொடர்கிறது. அதாவது இங்கு கூறப்பட்ட தீவு 32 லட்சம் (laksa) அலகுகள் தூரத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழர் பன்னெடுங்காலமாக நூறாயிரம் எனும் சொல்லை பயன்படுத்தி உள்ளனர். பின்வரும் உதாரணங்கள் தமிழில் நூறாயிரம் என்ற சொல் பயன்பாட்டை உறுதி செய்கின்றன.

நூறாயிரம் முன் வரூஉங் காலை
நூறனியற்கை முதனிலைக் கிளவி

நூறாயிரங்கை ஆறறி கடவுள்

ஏழ் பிறப்படியேம் வாழ்க நின் கொற்றம்
பன்னூரயிரத் தாண்டு வாழியர்

ஏழாவதாக இன்றைய எண்முறையில் மிக முக்கியமாக இருக்கும் பூச்சியத்தை கருதலாம்.

பூச்சியம் கணிதத்தில் மிகப் பிற்பட்ட காலத்திலேயே பயன்படுத்தத் தொடங்கியதாகப் பொதுவாக கருதப்படுகிறது. பிரித்தானியக் கலைக் களஞ்சியத்திலும் 7 ஆம் நூற்றாண்டின் அறிஞர் Severus Seborht ஒன்பது (9) அடிப்படை எண்கள் பற்றியே குறிப்பிட்டுள்ளதால் அவர் பூச்சியத்தை அறித்திருக்கவில்லை எனக் கருதப்படுகிறது.

அமெரிக்க ஆய்வாளர் Sylvanus Griswold Morley (1883-1948) தனது "The Ancient Maya" என்ற நூலில் "ஆரம்பக் காலங்களில் பூச்சியக் குறியீடு இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தது தொடர்பாக பல மேற்கோள்களை முன்வைத்திருந்தாலும் இவை எதுவும் ஆதாரம் அற்றவை என உறுதிப்படுதப்பட்டுவிட்டன. மேலும் Severus Seborht குறிப்பிடும் 9 எண் குறியீடுகளானது பூச்சியம் (zero), இடப்பெறுமானம் (place value) ஆகிய இரண்டின் பயன்பாடின்றி ஒன்பதுக்கு மேற்பட்ட எண்களை குறிக்கப் பயன்படாது" எனக் கூறியுள்ளார்.

ஆனால் "இந்தியாவின் பழைய சாசனங்களில் உள்ள திகதிகளும் எண்களும் உரோம, கிரேக்க மொழிகளிலுள்ள குறியீடுகளைப் போலல்லாது பத்துக்களும் நூறுகளும் மேலதிகமான இரு குறியீடுகளால் குறிக்கபட்டுள்ளன. இக் குறியீடுகள் கி.பி. 595 ஆம் ஆண்டளவில் குஜாரத்தில் இருந்து பெறப்பட்டன எனக் கூறப்படுள்ளது. இக்குறியீடுகள் அரேபியாவில் இருந்து பெறப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் ஒரு அரேபிய நாட்டை சார்ந்தவரான Severus Seborht இதை அறிந்திருப்பார். மேலும் பழைய அரேபிய எண்களும் கிரேக்க எண்களைப் போல் பத்துக்களுக்கும் (10, 20, ..90), நூறுகளுக்கும் (100, 200, .... 900) தனித்தனியே குறியீடுகளைக் கொண்டவை. ஆகவே பத்துக்களைத் தனி ஒரு குறியீட்டின் மூலமும் நூறுகளை தனி ஒரு குறியீட்டின் மூலமும் குறிக்கும் முறைமை தென் இந்தியாவில் இருந்தே தோன்றியிருக்கும் (படம் 1).

எட்டாவதாக நாம் வேறெந்த எண் முறையிலும் இல்லாது தமிழ் எண் முறையில் மட்டும் காணப்படும் இடபெறுமான (place value) எண்ணக் கருவுக்கான அடிப்படையைக் காணலாம்.

கூட்டலின் இலகுவாக்கம் பெருக்கல், கழித்தலின் இலகுவாக்கம் பிரித்தல் என்பனவற்றுக்கமைய தமிழ் எண் முறைமையால் மாத்திரமே இடப்பெருமானத்தினதும் பூச்சியத்தினதும் பயன்பாடு இன்றி எண்களை பெருக்கவும் பிரிக்கவும் முடியும். கீழே தரப்பட்ட பெருக்கல் மற்றும் பிரித்தல் உதாரண விளக்கத்தைப் பார்க்க (படம் 2).

மேற்கூறிய உதாரண விளக்கப்படி உலகிலுள்ள எண் குறியீடுகளை கருத்தில் கொண்டால் கிரேக்க, அரேபிய, எபிரேய, சீன, சமஸ்கிருத, மற்றும் சிங்கள எண்களில் 10 இன் மடங்குகளுக்கு (10, 20, 30, ...) தனித்தனிக் குறியீடுகள் இருந்து வந்துள்ளமையால் அவற்றில் இருந்து நவீன எண்கள் தோன்றியிருக்க முடியாது. பத்தின் மடங்குகளுக்குக் குறியீடுகள் தனித்தனியாக அமையாது. பத்தின் வலுக்களுக்கு (10, 100, 1000 ...) மாத்திரம் குறியீடுகளை உடையவை எகிப்திய, தமிழ் எண்கள் என்றாலும் எகிப்திய எண்களில் பத்தின் மடங்குகளைக் குறிப்பது நவீன எண்களுக்கு ஒத்ததாக இல்லை. உதாரணமாக 30 ஐக் குறிக்க எகிப்தில் 10+10+10 என பத்திற்குரிய குறியீடு 3 தடவை இடப்படும். ஆனால் தமிழில் நவீன எண் முறையைப்போல் 3 x 10 எனும் கருத்தில் 3 இற்குரிய குறியீடும் 10 இற்குரிய குறியீடும் இடப்படும். ஆதலால் நவீன எண்களுக்கு உரிய முக்கிய பண்புகளான,

1) ஒன்பது அடிப்படை எண்களை மட்டும் கொண்டிருத்தல்,

2) பத்தின் வலுக்களில் (10, 100, 1000) எண் பெறுமானம் அதிகரித்தல்,

3) இடப்பெறுமான (place value) எண்ணத்தை வெளிக்கொணரக்கூடிய எண் முறை அமைந்திருத்தல்,

ஆகிய மூன்று பண்புகளும் ஒருங்கே தமிழ் தவிர்ந்த வேறு எந்த முறையிலும் காணப்படவில்லை.

பூச்சியப் பயன்பாடு இந்தியாவில் கி.பி. 876 ஆம் ஆண்டுக்குரிய சாசனம் ஒன்றில் முதன்முதலில் அறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இறுதியில் ஒன்பதாவதாக நாம் நவீன எண் வடிவங்களையும் தமிழ் எண் வடிவங்களையும் பார்க்கலாம்.

கடினமான குறியீடுகள் சில வேளைகளில் இலகுவாக்கப்படுவது இயல்பு. அவ்வகையில் தமிழ் எண்களும் இலகுவாக்கப்படிருக்கலாம். அத்தோடு சிலவேளைகளில் குறியீடுகள் தாமாகவே காலப்போக்கில் மாறிவருவதும் உண்டு. இன்றைய 2, 5, 7 என்பன வியக்கத்தக்க வகையில் தமிழ் எண் குறியீடுகளான ௨, ௫, ௭ என்பவற்றை முறையே பிரதிபலிக்கன்றன. மற்றைய எண்களில் 3, 4, 8 போன்றவையும் ௩, ௪, ௮ என்பவற்றை முறையே ஒத்துள்ளன. எண்கள் 1, 6, 9 (௧, ௬, ௯) போன்றவை மட்டுமே அதிக அளவில் முரணாக உள்ளன. அரேபியர் எண்களை இலகுவாக்கியமையால் அவர்கள் தமது 1 எனும் குறியீட்டை ௧ வுக்கு பதிலாக அமைத்திருக்கலாம். அத்துடன் ௬ மற்றும் ௯ குறியீடுகளில் 9 இற்கான அமைப்பு உண்டு. தஞ்சாவூர் பெரிய கோவிலில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் 1000 வருடங்களாக மாற்றமடையவில்லை என கூறப்படுகிறது. ஆதலால் பூச்சியப் பெறுமானம் உருவாக்கப்பட்ட காலத்தில் தமிழ் எண் குறியீடுகள் மேட்காட்டியவாறே அமைத்திருக்கலாம்.

ஆதலால் நவீன எண்களை இந்து - அராபிய எண்கள் என்பதைக் காட்டிலும் தமிழ் - அராபிய எண்கள் என்பதே சாலப்பொருந்தும்.

மேலும் தமிழ் எண்களின் பயன்பாடு தமிழ்க் கவிகளில் மிக உயரிய மட்டத்தில் இருந்துள்ளது. உதாரணமாக, காக்கைப் பாடினியார் ஒரு வட்டத்தின் பரப்பளவைக் காண சூத்திரம் ஒன்றை கொடுத்துள்ளார். அச்சூத்திரம் சொல்கிறது:

"வட்டத்தரை கொண்டு விடத்தரை தாக்கின் சட்டெனத் தெரியும் குழி"

இச் சூத்திரப்படி பருதியின் அரைப்பங்கால் (2Πr x 1/2) விடத்தின் அரைப்பங்கை (2r x 1/2) பெருக்கினால் (தாக்கின்) வட்டத்தின் பரப்பளவு (குழி) பெறப்படும்.

எனவே பண்டைய தமிழரே உலகிற்கு இன்றைய நவீன எண் முறையை (decimal number system) வழங்கியிருக்கலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p47.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License