இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பதறாமல் முன்னேறுங்கள்

மு. கோபி சரபோஜி


நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற ஒரு செயலின் முடிவு எதிர்பார்த்தபடி இல்லாமல் போய்விடுமோ, குறித்த நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் ஆகிவிடுமோ என்ற நினைப்பு உங்களுக்குள் எப்பொழுது தோன்றுகிறதோ அந்த வினாடியே பதற்றமும் உங்களைப் பற்றிக் கொண்டு விடுகிறது. இந்த நினைப்பு தவறானதாகக் கூட இருக்கலாம். ஆயினும், இத்தகைய சந்தேக நினைப்பானது அந்தச் செயல் முடியும் வரை காத்திருப்பதில்லை. மாறாக, உங்களின் மீது ஆதிக்கம் செலுத்தி செயல்களின் ஒருங்கிணைப்பைச் சிதறடித்து விடுகிறது. அதனால் தான் “பதறிய காரியம் சிதறும்” என்றார்கள்.

காரியம் சிதறாமல் இருக்க வேண்டுமானால் முதலில் பதற்றத்தை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள். அதை உங்களுக்குள்ளேயே வைத்திருந்து செயல்பாட்டுக்கான ஊக்கமாக மாற்றுங்கள். அப்படி மாற்ற முடியாவிட்டாலும் கூட எந்தச் சூழ்நிலையிலும் உங்களின் பலவீனமாக வெளிக் காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அது உங்களின் மீதான மதிப்பீட்டைக் குறைத்து விடும். “ஐயோ….அவரிடமா? வேலையைச் சொன்னாலே பதறிடுவாரு. எப்படி செஞ்சு முடிப்பாரு?” என்ற சந்தேகப்பட்டியலில் உங்களின் பெயரை நீங்களே சேர்த்துக்கொள்ள அனுமதிக்காதீர்கள்.

செயலின் மீதானவைகளின் நடவடிக்கைகள், அப்போதைய நெருக்கடிகள், சூழ்நிலைகள் இவைகள்தான் பதற்றம் உருவாக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. பதற்றமே இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் அதைச் சமாளிக்க முடியும். அதற்கு அப்படியான சூழ்நிலைகளில் எப்படிச் செயல்படலாம் என்ற நெறிமுறைகளை வைத்துக் கொண்டு அவைகளை நம்முடைய ஒவ்வொரு செயலின் போதும் பின்பற்றப் பழகிக் கொண்டோமானால் பதற்றத்தின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகளை வெகுவாகக் குறைத்து விட முடியும். இத்தகைய நெறிமுறைகளை “மாற்று ஏற்பாடு” என்ற பெயரில் வெற்றியாளர்கள் பின்பற்றுகின்றனர். அவர்களது திட்டமிடல் படிவங்களைப் பார்த்தீர்களேயானால் ஒவ்வொரு திட்டத்தின் அருகிலும் மாற்று ஏற்பாடு என்ற பெயரில் இணைப்புத் திட்டம் ஒன்றை நிரப்புவதற்கான கட்டங்கள் இருக்கும். இன்றைய வேக வாழ்க்கையில் நவின வியாதிகளின் பட்டியலில் பதற்றத்தையும் மருத்துவ உலகம் சேர்த்து விட்டது. எப்படி? யாரால்? எங்கே? எந்த சமயத்தில்? எதற்காக? பதற்றம் ஏற்படும் என்பது தெரியாத நிலையில் அத்தகைய ஒருநிலையைச் சமாளிக்க நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.



பதற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்வதிலும், பல பிரச்சனைகளைக் கையாள்வதிலும் ஈடுபடாதீர்கள். அதேபோல, நெருக்கடியான சூழல் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் தயங்கி நிற்காதீர்கள். அவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்ற உப்புசப்பான காரணங்களால் முடிவெடுக்க வேண்டிய நேரங்களில் முடிவு எடுக்காததால் பல வெற்றிகள் தோல்வி நிலைக்கு நகர்ந்திருக்கின்றன. நீங்கள் எடுக்கின்ற முடிவு அந்தச் செயலின் இறுதித்தீர்வு அல்ல! அந்தச் செயலின் செயல்பாட்டு நிலையில் ஏற்படக்கூடிய நெருக்கடியைச் சமாளிக்க மேற்கொணட ஒரு மாற்று ஏற்பாடு மட்டுமே! எனவே நீங்கள் மேற்கொண்டிருக்கும் செயல்களுக்கான செயல்பாடுகள் சார்ந்து எப்பொழுதும் ஒரு மாற்று ஏற்பாட்டை கைவசம் தயாராய் வைத்திருங்கள். கட்டாயம் என்ற நிலையில் உண்டாகக்கூடிய பதற்றம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் விபரீதமானதாக மட்டுமல்ல விசித்திரமானதாகவும் இருக்கும். அது உங்களையே உங்களுக்குத் தெரியாத ஒரு நிலையை ஏற்படுத்திவிடும் என்பதற்கு ஒரு உண்மைச் சம்பவம் சொல்கிறேன்.

ஆகாசவாணியின் தமிழ்செய்திகள் வாசிக்கும் அறை அது. செய்தி அறிக்கைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயாராக இருந்தன. செய்தி வாசிப்பாளர் மட்டும் தான் வரவேண்டி இருந்தது. அவர் வரவை எதிர்பார்த்து மற்ற ஊழியர்கள் காத்திருந்தனர். காத்திருந்த நேரத்தில் மாற்று ஏற்பாடு பற்றி எதுவும் யோசிக்கவில்லை. எவருக்காகவும் காத்திருக்காத நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. செய்தி வாசிப்பாளர் அந்தநேரம் வரை வராததால் மற்றவர்களுக்கு பதற்றம் உண்டாகி விட்டது. குறிப்பிட்ட நேரத்தில் செய்தியை ஒலிபரப்புச் செய்தாக வேண்டுமே என்ற அவசரத்தில் செய்தி வாசிப்பதற்கு ஏற்ற குரல்வளம் அங்கு இருப்பவர்களில் யாருக்கு இருக்கிறது? எனக் கண்டறிய நேரமிருக்கவில்லை. அதேநேரம் யாரையாவது கூப்பிட்டு செய்தி வாசிக்க வைக்கவும் முடியாது. பதற்றத்தில் ஒவ்வொருவரும் ஒரு முடிவெடுக்க கடைசியாக அங்கிருந்த செய்தி மொழிபெயர்ப்பாளரை வாசிக்க வைப்பது என தீர்மானிக்கப்பட்டது. செய்தி அறிக்கைகளை அள்ளிக்கொண்டு அவரும் ஸ்டுடியோவிற்குள் சென்று மைக்கின் ஃபேடரைத் திறந்து ஆகாசவாணி... ... ... செய்திகள் வாசிப்பது என பேப்பரைப் பார்த்து வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அதற்கு அடுத்து வெறும் இடைவெளி மட்டும் இருந்தது. யார் செய்தி வாசிப்பது? என கடைசிவரை முடிவாகாததால் செய்தி அறிக்கையைத் தயார் செய்தவர் வாசிப்பவர் பெயரை எழுதாமல் கொடுத்து விட்டார். செய்தி வாசிப்பவர் மொழிபெயர்ப்பிற்கான லைசென்ஸ் பெற்ற தகுதியுடையவராய் இருந்தபோதும் அவரால் அந்த இடத்தில் உடனே அவர் பெயரைச் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியவில்லை என்பதைவிட தன் பெயரை பதற்றத்தில் மறந்தும் போனார். தன் பெயரை நினைத்துப் பார்க்கும் குழப்பத்திலும், பதற்றத்திலும் மைக்கின் ஃபேடரை மூடி விட்டு திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார்.



மைக்கில் தான் ஏதோ பிரச்சனையாகி விட்டதோ என நினைத்து அறையின் கதவைத் திறந்த எஞ்சினியர் ஒருவர் இவர் பெயரைச் சொல்லி அழைத்து மைக்கைத் தவறுதலாக மூடிவிட்டீர்ள் போலிருக்கிறது. உங்கள் குரல் வெளியில் கேட்கவில்லை. ஆரம்பத்தில் இருந்து படியுங்கள் என ஃபேடரைக் காட்டிச் சொன்ன பின்பே இவருடைய பெயர் இவருக்கே ஞாபகம் வந்திருக்கிறது. அதன்பின் வாசிப்பவர் பெயரோடு ஆகாசவாணி செய்தி ஒலிபரப்பானது. பதற்றத்தில் பெயரை மறந்தவர் மறைந்த பூர்ணம் விஸ்வநாதன்.

பதற்றத்தில் அவர் பெயரை மறந்ததும் அவருடைய மனதில் ஏற்பட்ட நிகழ்வுகளை அவர் சொல்லிய நடையிலேயே கேட்போம். “என் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை என்ற கொடுமையோடு அணி, அணியாக வேறு எத்தனையோ பெயர்கள் போட்டி போட்டுக்கொண்டு என நினவில் வந்து மோதின. தற்போது என்னோடு வேலை செய்பவர்கள் பெயர்களோடு எப்பொழுதோ நான் சந்தித்த, என்னைச் சந்தித்த நண்பர்கள் பெயர்களும் வந்து குழப்பியடித்தன”.

இப்படியான குழப்ப மனநிலையில் அவசரப்பட்டு செய்கின்ற சில செயல்களால் உண்டாகும் எதிர்வினைகளினால் கோபம், விரக்தி, எரிச்சல், வெறுப்பு போன்றவைகள் ஏற்பட்டு செயலின் மீதான இயக்கத்தைப் பாதிக்கிறது. பதற்றமில்லா அமைதியில்தான் எதையும் சிந்தித்துச் செயல்படுத்த முடியும். அவசரத்தில் செய்கின்ற செயல்களில் வேகம் இருக்குமேயொழிய வெற்றிக்கான முடிவு இருக்காது. பல பெரிய கண்டுபிடிப்புகள் அவசரமில்லா அமைதியில்தான் கண்டறியப்பட்டன. நியூட்டன் புவீஈர்ப்பு விசையைக் கண்டறிந்ததும், ஆர்க்கிமிடிஸ் தன்னுடைய தத்துவக் கோட்பாட்டைக் கண்டறிந்து வெளியிட்டதும் அமைதியான நிலையில்தான்!



உடனே... உடனே... என நீங்கள் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் அமைதியில்லா அவசரம் என்பதன் பலன் பூஜ்யமாகவோ அல்லது சாதாரனமானதாகவோ தான் இருக்கும் உலகையே தன்னுடைய படைகளாலும், நடவடிக்கைகளாலும் மிரள வைத்துக் கொண்டிருந்த ஹிட்லரின் சாவு அவருடைய அவசரத்தால்தான் தீர்மானிக்கப்பட்டது. எப்படியும் இரஷ்யாவை வீழ்த்திவிட வேண்டும் என்பதில் அவர் காட்டிய அவசரம் இரஷ்ய பனிமலைகளில் ஜெர்மானிய படைகளை தோல்வியடையச் செய்தது. அமைதியான குளத்தில் மீன்பிடிப்பது எளிது. அதை விடுத்துக் கலங்கிய குட்டையில் என்னதான் நீங்கள் கஷ்ட்டப்பட்டு தூண்டில் வீசினாலும் மீன்கள் அகப்படுவது அரிது!

நீங்கள் திறமைசாலியாக, பல்துறை வித்தகராக இருக்கலாம். ஆனால் உங்களின் வெற்றி என்பது செயலின் மீதான நடவடிக்கையில் தொடங்கி அதை முடிக்கும் வரை சீராக, திட்டமிட்டபடி கொண்டு செல்வதில்தான் இருக்கிறது. எனவே, சுற்றுபுறச்சூழ்நிலைகளினால் உங்களின் சொந்தச் செயல்பாடுகளினால் பதற்றமான சூழல் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பி ஓட முயலாதீர்கள். அவசரத்தில் எடுத்தேன், கவிழ்த்தேன் என ஏனோதானேவென அந்தச் செயலைச் செய்வதை விட்டுவிட்டு அமைதியுடன் அணுகுங்கள். தேவைப்பட்டால் கூடுதல் நேரம் எடுத்து திட்டமிட்டதைவிடச் சிறப்பாகச் செய்யப் பழகுங்கள். மாறாக, அதிலிருந்து தப்பிக்கும் அவசரத்தில் செயல்களின் சாதக, பாதகங்களை ஆராயாமல் முடிவெடுத்தீர்களேயானால் அது இலட்சியத்தையே மாற்றிவிடும். எனவே உங்களின் வெற்றிப் பயணத்தின் ஆரம்பத்தில் மட்டுமல்ல தொடர் ஓட்டத்திலும் கூட பதற்றமோ அதன் மூலம் அவசரமோ காட்டாதீர்கள். “அவசரம் அபாயகரமானது” என்ற வெற்றியாளர்களின் வேதசூத்திரம் உங்களுக்குள் ஒரு மந்திரமாகவே ஒலித்துக் கொண்டிருக்கட்டும்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p51.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License